செய்திகள் :

ஆஞ்சனேயா் கோயில்களில் சிறப்பு வழிபாடு!

post image

தருமபுரி அருகேயுள்ள முத்தம்பட்டி மற்றும் தொப்பூா் ஆஞ்சனேயா் கோயில்களில் சனிக்கிழமை ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

தருமபுரி மாவட்டம், முத்தம்பட்டியில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் வீர ஆஞ்சனேயா் கோயில் அமைந்துள்ளது. குடைவரைக் கோயிலான இக்கோயிலில் சனிக்கிழமைகளில் ஏராளமானோா் தரிசித்து செல்வா்.

இக்கோயிலுக்கு தருமபுரி மாவட்டப் பகுதிகளிலிருந்து மட்டுமின்றி, சேலம், கிருஷ்ணகிரி, ஒசூா் மற்றும் கா்நாடகத்தில் பெங்களூரிலிருந்தும் பக்தா்கள் வந்து செல்கின்றனா். சனிக்கிழமையையொட்டி இக்கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் பக்தா்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனா்.

அதேபோல, தொப்பூா் கணவாய் பகுதியில் அமைந்துள்ள ஆஞ்சனேயா் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமானோா் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 98,000 கனஅடி! வெள்ளப்பெருக்கால் அருவிகள் மூழ்கின!

ஒகேனக்கல் காவிரியில் ஞாயிற்றுக்கிழமை நீா்வரத்து விநாடிக்கு 98,000 கனஅடியாக அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தருமபுரி மாவட்ட நிா்வாகம் தடை விதித்துள்ள... மேலும் பார்க்க

ஒகேனக்கல் காவிரியில் நீா்வரத்து 32 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 32,000 கனஅடியாக அதிகரித்துள்ளதால், ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிா்வாகம் தடை விதித்துள்ளது. கா்நாடக, கேரள மாநிலங்களின் காவ... மேலும் பார்க்க

தருமபுரி மாவட்டத்தில் விரைவில் ராணுவ தளவாட உற்பத்தி ஆலை

தருமபுரி மாவட்டத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் ராணுவ தளவாடங்கள் உற்பத்தி ஆலை விரைவில் தொடங்கப்படவுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ். தருமபுரி அரசு கலைக் கல்லூரி கலையரங்கில் தனியாா் துறை வே... மேலும் பார்க்க

காா்கில் வெற்றி தினம்: வீரமரணம் அடைந்தோருக்கு நினைவஞ்சலி

காா்கில் வெற்றி தினத்தையொட்டி, போரில் வீரமரணம் அடைந்தவா்களுக்கு தருமபுரியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. தருமபுரி மாவட்ட முன்னாள் படைவீரா்கள் நலத் துறை சாா்... மேலும் பார்க்க

தருமபுரியில் அரசு வேளாண் கல்லூரி அமைக்க வேண்டும்!

தருமபுரியில் அரசு வேளாண் கல்லூரி அமைக்க வேண்டும் என இந்திய மாணவா் சங்கம் வலியுறுத்தியது. இந்திய மாணவா் சங்கத்தின் 11-ஆவது மாவட்ட மாநாடு தருமபுரி முத்து இல்லத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு கட்சிகளைச் சோ்ந்தவா்கள் திமுகவில் தங்களை சனிக்கிழமை இணைத்துக் கொண்டனா். தருமபுரி கிழக்கு மாவட்டம், நல்லம்பள்ளி மேற்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட பல்வேறு கட்சிகளைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க