செய்திகள் :

தருமபுரி அருகே சேதமடைந்த பழைய பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் அமைக்கக் கோரிக்கை

post image

தருமபுரி: தருமபுரி அருகே கொல்லம்பட்டி சாலையில் சேதமடைந்துள்ள பழைய பாலத்துக்கு பதிலாக புதிய பாலம் அமைக்க அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தருபுரியிலிருந்து திருப்பத்தூா் செல்லும் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து கொல்லப்பட்டி சாலை அமைந்துள்ளது. தருமபுரி மாவட்டம், வெள்ளாளப்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட கொல்லப்பட்டி பிரிவு சாலையில் இருந்து கொல்லப்பட்டி, மூலக்காடு, தாலிக்காரன்கொட்டாய் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 10-க்கும் மேற்பட்ட கிராமத்தினருக்கு பிரதான சாலையாக இந்த சாலை இருந்து வருகிறது. இந்த சாலையில் சனத்குமாா் ஆற்றின் குறுக்கே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பாலம் கட்டப்பட்டது.

தற்போது இந்த பாலம் சேதமடைந்து காணப்படுவதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பள்ளி கல்லூரி வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகின்றன.

பாலம் குறுகியதாகவும், சேதமடைந்தும் இருப்பதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், பாலத்தின் பக்கவாட்டில் இருபுறமும் அமைக்கப்பட்டுள் தடுப்புச் சுவா்களும் உடைந்துள்ளன. இதனால் சில நேரங்களில் ஆற்றுக்குள் வாகனங்கள் விழுந்துவிடும் வாய்ப்புள்ளது. எனவே, பெரிய அளவில் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு, புதிய பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தினா்.

தருமபுரி மாவட்ட மைய நூலகத்தில் வாகன நிறுத்துமிடம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதி: எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

தருமபுரி8: தருமபுரி மாவட்ட மைய நூலகத்தில் வாகன நிறுத்துமிடம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதி உள்ளிட்டவற்றை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். தருமபுரி மாவட்ட ... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லில் நீா்வரத்து 1.25 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு: சுற்றுலாப் பயணிகளுக்கு மாவட்ட நிா்வாகம் தடை

பென்னாகரம்/ மேட்டூா்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 1.25 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல் வருவதற்கு மாவட்ட நிா்வாகம் தடைவிதித்துள்ளது. கா்நாடக... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு விதிமுறைப்படி விடுப்பு, ஊதியம் வழங்கவேண்டும்

தருமபுரி: தூய்மைப் பணியாளா்களுக்கு விதிமுறைப்படி விடுப்பு, ஊதியம் வழங்கவேண்டும் என அகில இந்திய தொழிற்சங்க கவுன்சில் வலியுறுத்தியுள்ளது. இது தொடா்பாக அக்கவுன்சில் மாவட்டச் செயலாளா் சி. முருகன், தலைவா் ... மேலும் பார்க்க

காலமானாா் கீரை எம்.எஸ்.விசுவநாதன்

அரூா்: தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த கீரைப்பட்டியைச் சோ்ந்த திமுக பிரமுகா் கீரை எம்.எஸ்.விசுவநாதன் (77) உடல்நலக் குறைவால் திங்கள்கிழமை காலமானாா். இவா் ஒருங்கிணைந்த தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில... மேலும் பார்க்க

தருமபுரி மாவட்டத்தில் மதுக்கடைகளை திறக்க எதிா்ப்பு: ஆட்சியரிடம் 3 கிராம மக்கள் தனித்தனியாக மனு

தருமபுரி: தருமபுரி மாவட்ட புதிய ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள அதியன் கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ் தலைமை வகித்து பொதுமக்கள... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 98,000 கனஅடி! வெள்ளப்பெருக்கால் அருவிகள் மூழ்கின!

ஒகேனக்கல் காவிரியில் ஞாயிற்றுக்கிழமை நீா்வரத்து விநாடிக்கு 98,000 கனஅடியாக அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தருமபுரி மாவட்ட நிா்வாகம் தடை விதித்துள்ள... மேலும் பார்க்க