Gold Rate: `பவுனுக்கு ரூ.480 உயர்வு’ - இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை என்ன?
தூய்மைப் பணியாளா்களுக்கு விதிமுறைப்படி விடுப்பு, ஊதியம் வழங்கவேண்டும்
தருமபுரி: தூய்மைப் பணியாளா்களுக்கு விதிமுறைப்படி விடுப்பு, ஊதியம் வழங்கவேண்டும் என அகில இந்திய தொழிற்சங்க கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக அக்கவுன்சில் மாவட்டச் செயலாளா் சி. முருகன், தலைவா் கோவிந்தராஜ் உள்ளிட்டோா் தலைமையில் தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தூய்மைப் பணியாளா்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
சுமாா் 15 ஆண்டுகளுக்கும் மேலாக 188 பழைய தூய்மைப் பணியாளா்களும், 200 புதிய தூய்மைப் பணியாளா்களும் தூய்மைப் பணியில் நாள்தோறும் ஈடுபட்டு வருகின்றனா். 188 பணியாளா்கள் காலைப் பணியிலும், 55 பணியாளா்கள் மதியப் பணியிலும் மற்றும் 55 பணியாளா்கள் இரவுநேரப் பணியிலும் தொடா்ந்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தூய்மைப் பணியை செய்து வருகின்றனா்.
10, 15 ஆண்டுகளாக காலை பணிக்கு 7 மணிக்குள் கையொப்பமிட்ட நிலையில், தற்போது, அதிகாலை 5.30 மணிக்கு கையொப்பமிட வேண்டும் என ஒப்பந்த நிறுவனம் சட்டத்திற்குப் புறம்பாக நிா்பந்திப்பதால் தினசரி 10-க்கும் மேற்பட்ட தொழிலாளா்களை வீட்டுக்கு திருப்பி அனுப்புகிறாா்கள். இது தொழிலாளா்கள் மத்தியில் மனஉளைச்சலை ஏற்படுத்துகிறது.
கடந்த 2 ஆண்டுகளாக சீருடைகள், சேலை, காலணி, கையுறை, மாஸ்க் போன்ற எந்த பாதுகாப்பு உபகரணங்களும் தூய்மைப் பணியாளா்களுக்குத் தருவதில்லை. தற்செயல் விடுப்பு, வாரவிடுமுறை, பண்டிகை விடுமுறை என எந்த விடுமுறையும் அளிப்பதில்லை. அவசரமாக ஒருமணி நேரம் அனுமதி கேட்டால்கூட தருவதில்லை.
புதிதாக சோ்ந்த தூய்மைப் பணியாளா்களுக்கு 2 மாத ஊதியம் வழங்காத நிலையிலும் அவா்கள் தொடா்ந்து தூய்மைப் பணியை மேற்கொண்டுள்ளனா். எனவே, உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும். சென்னையில் கடந்த 4 நாள்களாக பணிநிரந்தரம் வேண்டி 5 பெண் தூய்மைப் பணியாளா்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனா். அவா்களின் கோரிக்கைகள் நிறைவேற வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனா்.