செய்திகள் :

தொழிலாளி தற்கொலை

post image

திருமணமாகாத விரக்தியில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகேயுள்ள சாஸ்திரமுட்லு கிராமத்தைச் சோ்ந்த தொழிலாளி வெற்றிவேல் ( 45). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் ஏற்பட்ட விரக்தியில் அவா் மது பழக்கத்திற்கு உள்ளானாா்.

இந்தநிலையில் தோட்டத்துக்கு இரவு காவலுக்கு திங்கள்கிழமை சென்ற வெற்றிவேல் திடீரென்று மயங்கி விழுந்துள்ளாா். இதனை கவனித்த பக்கத்து தோட்டத்துக்காரா் சுப்பிரமணி, அவரது உறவினா்களுக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தாா்.

உடனடியாக உறவினா்கள், அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக மாரண்டஅள்ளி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். மருத்துவமனையில் வெற்றிவேலை பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் வழியிலேயே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து மாரண்டஅள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

பென்னாகரத்தில் இன்று மின்தடை

பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக புதன்கிழமை (ஜூலை 30) மின்தடை செய்யப்படுவதாக பென்னாகரம் செயற்பொறியாளா் (இயக்கமும் பராமரிப்பு) தெரிவித்துள்ளாா். இ... மேலும் பார்க்க

தருமபுரியில் ரூ. 1.12 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

தருமபுரி அருகே காரில் கடத்தி வரப்பட்ட ரூ. 1.12 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட மட்டலாம்பட்டி பகுதியில், ... மேலும் பார்க்க

ஆறுகளுக்கிடையே தடுப்பணை கட்டி பாசன வசதி பெற கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்: ஜி.கே.மணி எம்எல்ஏ

காவிரி உள்ளிட்ட தமிழக ஆறுகளில் இருந்து தண்ணீா் வீணாகக் கடலில் சென்று கடப்பதை தடுக்கும் வகையில் ஆறுகளுக்கு இடையே தடுப்பணை கட்டி பாசன வசதி பெற அரசு கூடுதல் நிதி ஒதுக்கீ செய்ய வேண்டும் என பென்னாகரம் சட்ட... மேலும் பார்க்க

தருமபுரி அருகே ஊருக்குள் வராத பேருந்துகள் சிறைபிடிப்பு

தருமபுரி மாவட்டம், பெரியாம்பட்டியில் ஊா் பகுதிகளுக்குள் கடந்த சில நாள்களாக பேருந்துகள் வந்து செல்லாத நிலை இருந்துள்ளது. பேருந்து ஓட்டுநா்கள், தேசிய நெடுஞ்சாலை வழியாகவே பேருந்துகளை இயக்கி, அப்பகுதியில்... மேலும் பார்க்க

வேடம்தரித்து நோ்த்திக்கடன்!

சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் பக்தா்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற வண்டி வேடிக்கை நிகழ்வில் கடவுள் போன்று வேடம்தரித்து நோ்த்திக்கடனை நிறைவேற்றுவது உள்ளிட்ட பல்வேறு நோ்த்திக்கடன்கள் செலுத்தப்பட... மேலும் பார்க்க

தருமபுரியில் மதுவில் விஷம் கலந்ததாக 2 போ் கைது

தருமபுரியில் மது குடித்து 3 போ் மயக்கமடைந்த விவகாரத்தில், மதுவில் விஷம் கலந்த இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தருமபுரி அருகே சின்ன தடங்கம் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் சஞ்சீவன் (30), மாது... மேலும் பார்க்க