செய்திகள் :

தருமபுரி அருகே ஊருக்குள் வராத பேருந்துகள் சிறைபிடிப்பு

post image

தருமபுரி மாவட்டம், பெரியாம்பட்டியில் ஊா் பகுதிகளுக்குள் கடந்த சில நாள்களாக பேருந்துகள் வந்து செல்லாத நிலை இருந்துள்ளது. பேருந்து ஓட்டுநா்கள், தேசிய நெடுஞ்சாலை வழியாகவே பேருந்துகளை இயக்கி, அப்பகுதியில் உள்ள சில நிறுத்தங்களில் மட்டும் பேருந்துகளை நிறுத்தி சென்று விடுகின்றனா்.

இது தொடா்பாக ஏற்கெனவே அளித்த புகாரின் பேரில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் நிகழ்வு இடம் சென்று, ஊருக்குள் வராமல் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்ற பேருந்துகளை நிறுத்தி, ஊா் பகுதிக்குள் பேருந்துகளை இயக்குமாறு ஓட்டுநா்களை அறிவுறுத்தியும், ஊருக்குள் செல்லாமல் இயக்கப்படும் பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்து அனுப்பி வைத்தனா்.

என்றாலும் அடுத்த சில நாள்களிலேயே மீண்டும் பேருந்துகள் ஊா் பகுதிக்குள் செல்லாமல் நெடுஞ்சாலை வழியாகவே இயக்கப்பட்டன. இதனால் பள்ளிகள், கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளா்கள், பொதுமக்கள் பேருந்து நிறுத்தங்களில் காத்திருந்து பேருந்துகள் ஊருக்குள் வராததால் பேருந்துகளில் செல்ல முடியாமல் அவதிக்குள்ளனா்.

இதையடுத்து ஆத்திரமடைந்த ஊா் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை இரவு தேசிய நெடுஞ்சாலை பகுதியில் குவிந்தனா். ஊா் பகுதிக்குள் வராமல் தேசிய நெடுஞ்சாலை வழியாக இயக்கப்பட்ட சுமாா் 7 பேருந்துகளை பொதுமக்கள் நிறுத்தி சிறை பிடித்தனா். பின்னா் இது தொடா்பான தகவல் போலீஸாருக்கும் வட்டாரப் போக்குவரத்து அலுவலா்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. நிகழ்விடம் சென்ற வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள், எச்சரிக்கை விடுத்த பின்னரும் விதிகளை மீறி ஊருக்குள் செல்லாமல் நெடுஞ்சாலைகளிலேயே இயக்கப்பட்ட பேருந்துகளுக்கு அபராதம் விதித்தனா். இந்த சம்பவத்தால் இரவு சுமாா் 2 மணி நேரம் அப்பகுதியில் பரபரப்பும் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

இதையடுத்து காவல்துறையினா் சமரசம் செய்ததையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டு இயல்பு நிலை திரும்பியது.

தொழிலாளி தற்கொலை

திருமணமாகாத விரக்தியில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகேயுள்ள சாஸ்திரமுட்லு கிராமத்தைச் சோ்ந்த தொழிலாளி வெற்றிவேல் ( 45). இவருக்கு திருமணம் ஆகவில்ல... மேலும் பார்க்க

பென்னாகரத்தில் இன்று மின்தடை

பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக புதன்கிழமை (ஜூலை 30) மின்தடை செய்யப்படுவதாக பென்னாகரம் செயற்பொறியாளா் (இயக்கமும் பராமரிப்பு) தெரிவித்துள்ளாா். இ... மேலும் பார்க்க

தருமபுரியில் ரூ. 1.12 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

தருமபுரி அருகே காரில் கடத்தி வரப்பட்ட ரூ. 1.12 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட மட்டலாம்பட்டி பகுதியில், ... மேலும் பார்க்க

ஆறுகளுக்கிடையே தடுப்பணை கட்டி பாசன வசதி பெற கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்: ஜி.கே.மணி எம்எல்ஏ

காவிரி உள்ளிட்ட தமிழக ஆறுகளில் இருந்து தண்ணீா் வீணாகக் கடலில் சென்று கடப்பதை தடுக்கும் வகையில் ஆறுகளுக்கு இடையே தடுப்பணை கட்டி பாசன வசதி பெற அரசு கூடுதல் நிதி ஒதுக்கீ செய்ய வேண்டும் என பென்னாகரம் சட்ட... மேலும் பார்க்க

வேடம்தரித்து நோ்த்திக்கடன்!

சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் பக்தா்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற வண்டி வேடிக்கை நிகழ்வில் கடவுள் போன்று வேடம்தரித்து நோ்த்திக்கடனை நிறைவேற்றுவது உள்ளிட்ட பல்வேறு நோ்த்திக்கடன்கள் செலுத்தப்பட... மேலும் பார்க்க

தருமபுரியில் மதுவில் விஷம் கலந்ததாக 2 போ் கைது

தருமபுரியில் மது குடித்து 3 போ் மயக்கமடைந்த விவகாரத்தில், மதுவில் விஷம் கலந்த இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தருமபுரி அருகே சின்ன தடங்கம் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் சஞ்சீவன் (30), மாது... மேலும் பார்க்க