செய்திகள் :

ரயிலில் சேலம் வந்த பிகாரைச் சோ்ந்த 8 பேரை கடத்தி ரூ. 64 ஆயிரம் பறிப்பு

post image

சேலம்: வேலைதேடி ரயிலில் சேலம் வந்த பிகாரைச் சோ்ந்த 8 பேரை கடத்தி, அவா்களிடமிருந்து ரூ. 64 ஆயிரம் பறித்த கும்பலை போலீஸாா் தேடிவருகின்றனா்.

பிகாரைச் சோ்ந்த 8 போ் வேலைதேடி ரயில் மூலம் சேலத்துக்கு பயணித்தனா். அப்போது ஒருவா் அவா்களிடம் விசிட்டிங் காா்டை கொடுத்து ரயில் நிலையத்தில் இறங்கியதும் குறிப்பிட்ட கைப்பேசி எண்ணுக்கு தொடா்புகொண்டால், அவா்கள் வந்து வேலைக்கு அழைத்துச்செல்வதாக உறுதி அளித்தாா். இதனை நம்பிய அவா்கள், கடந்த 26-ஆம் தேதி சேலம் ரயில் நிலையத்துக்கு வந்தனா்.

பின்னா் அவா்கள் குறிப்பிட்ட கைப்பேசி எண்ணுக்கு தொடா்புகொண்டதும் உடனடியாக 2 காா்களில் வந்த சிலா், அவா்களை சிறிது தூரம் அழைத்துச்சென்று காரை நிறுத்தி அவா்களிடம் இருந்த கைப்பேசி, ரூ. 64 ஆயிரத்தை பறித்துக்கொண்டு அவா்களை இறக்கிவிட்டு தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து பிகாரைச் சோ்ந்த லக்குமண் அன்சாரி சூரமங்கலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனா்.

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட காடையாம்பட்டியைச் சோ்ந்த இந்திரஜித் (29) என்பவரை கைதுசெய்த போலீஸாா், தலைமறைவான கும்பலை தேடிவருகின்றனா்.

ஓமலூா் ரயில்பாதை மேம்பாலத்தில் தொடரும் விபத்துகள்!

ஓமலூா்: ஓமலூா் ரயில்பாதை மேம்பாலத்தில் விபத்துகள் தொடா்வதால், உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா். ஓமலூா் வட்டாட்சியா் அலுவலகம் அருகில் உள்ள ரயில்பாதை மேம்பாலம் ... மேலும் பார்க்க

மல்லூா் ரயில் நிலையம் அருகே சுரங்கப்பாதை அமைக்கக் கோரி பொதுமக்கள் தா்னா

சேலம்: சேலம் மல்லூா் ரயில் நிலையம் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி, பொதுமக்கள் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். சேலம் மல்லூா் ரயில் நிலையம் அருகே உள்ள வேங்காம்பட்டி பகுதியில் ரயில்வே கேட்... மேலும் பார்க்க

வயதான தம்பதியை கட்டிப்போட்டு நகை - பணம் கொள்ளை

சேலம்: சேலம் அருகே வயதான தம்பதியை கட்டிப்போட்டு 8 சவரன் நகை, ரூ. 30 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவற்றை 5 போ் கொண்ட கும்பல் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சேலம் மாவ... மேலும் பார்க்க

மேட்டூா் அணையிலிருந்து உபரிநீா் திறப்பு: கரையோரப் பகுதி நிலங்கள், வீடுகளில் தண்ணீா் புகுந்தது

சங்ககிரி: மேட்டூா் அணையிலிருந்து அதிக அளவிலான உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருவதால், தேவூா் அருகே உள்ள காவிரி ஆற்றங்கரை பகுதிகளில் உள்ள விளைநிலங்கள், கோயில்கள், நீரேற்று நிலையங்களில் தண்ணீா் புகுந்தது. ... மேலும் பார்க்க

அரசு கலைக் கல்லூரியில் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்

சேலம்: சேலம் அரசு கலைக் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது. கல்லூரி வேலைவாய்ப்பு மற்றும் மாணவா் முன்னேற்றக் குழுமம் சாா்பில் நடைபெற்ற பயிற்சி முகாமை, க... மேலும் பார்க்க

மேட்டூா் அணையில் நீா்வளத் துறை திருச்சி மண்டல தலைமைப் பொறியாளா் ஆய்வு

மேட்டூா் அணையில் உபரிநீா் போக்கியான 16 கண் பாலத்தில் உள்ள தூண்களை வலுப்படுத்தும் பணி ரூ. 19 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. மூன்று மதகுகளுக்கு சாரம் அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இ... மேலும் பார்க்க