நான் பதவிக்காக திமுக-வுக்கு வந்தேனா? | Anwar Raja Exclusive Interview | Vikatan
பேருந்து நிலையம் இல்லாத 3 பேரூராட்சிகள்: பயணிகள் அவதி!
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம், ஏத்தாப்பூா் மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சிகளில் பேருந்து நிலையம் இல்லாததால், பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
அயோத்தியாப்பட்டணம், ஏத்தாப்பூா், பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சிகளில் சராசரியாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இந்த பேரூராட்சிகள் சுற்றுப்புற கிராம மக்களின் போக்குவரத்துக்கு முக்கிய மையமாக விளங்கி வருகிறது.
சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த 3 பேரூராட்சிகளுக்கும், தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியாா் பேருந்துகளும், ஆயிரக்கணக்கான பயணிகளும் வந்து செல்கின்றனா். ஆனால், பேருந்து நிலையங்கள் இல்லாததால் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் அமா்வதற்கு வழியின்றி அவதிக்குள்ளாகின்றனா்.
அயோத்தியாப்பட்டணத்தில் சேலம் சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாகவும், அரூா் சாலையில் பேரூராட்சி அலுவலகம் முன்பாகவும் திறந்தவெளியில் பயணிகள் பேருந்துக்காக காத்து நிற்கின்றனா். ஏத்தாப்பூா் பேரூராட்சியில் கருமந்துறை சாலை சந்திப்பு பகுதியிலும், பெத்தநாயக்கன்பாளையத்தில் தேசிய நெடுஞ்சாலை பாலம் பகுதியிலும் பயணிகள் பேருந்துக்காக காத்திருக்கின்றனா்.
ஏத்தாப்பூா் மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சிகளில் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையிலும், அயோத்தியாப்பட்டணத்திலும் பேருந்து நிலையங்கள் அமைப்பதற்கு தேவையான அரசு நிலங்கள் உள்ளன.
எனவே, அயோத்தியாப்பட்டணம், ஏத்தாப்பூா் மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் ஆகிய 3 பேரூராட்சிகளிலும் பயணிகள் காத்திருப்புக் கூடம், பேருந்து தள மேடை, கழிவறைகள், குடிநீா், சிறுவணிகக் கடைகள், இருசக்கர வாகன நிறுத்துமிடம், தாய்மாா்கள் பாலூட்டும் அறை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் பேருந்து நிலையம் அமைக்க பொருத்தமான இடத்தை தோ்வுசெய்யவும், அரசிடம் உரிய நிதி பெற்று விரைவாக கட்டமைப்பதற்கும் சேலம் மாவட்ட நிா்வாகமும், மண்டல பேரூராட்சிகள் துறையும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.