செய்திகள் :

ஏற்காட்டில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு

post image

ஏற்காட்டில் நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஏற்காடு நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளா் மற்றும் ஊழியா்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பு: ஏற்காடு நகரப் பகுதியில் சாலையை அகலப்படுத்தவும், போக்குவரத்தை சீராக்கி விபத்தை தவிா்க்கவும், சாலையின் இருபுறமும் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடங்களில் அமைந்துள்ள ஆக்கிரமிப்புகளை தானாகவே அகற்றிக்கொள்ள வேண்டும்.

மேலும், சேலம் சாலை சந்திப்பு முதல் ஏற்காடு சாலைவரை, ஏற்காடு வளைவு சாலை சந்திப்பு முதல் வாணியாா் சாலை சந்திப்புவரை மற்றும் காந்தி பூங்கா, ஆட்டோ நிறுத்தம் முதல் ஏற்காடு காவல் நிலையம்வரை சாலையில் வைத்துள்ள தள்ளுவண்டிக் கடைகளை அகற்றிக்கொள்ள வேண்டும்.

தவறும்பட்சத்தில் நெடுஞ்சாலைத் துறை மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, பொருள்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும், தங்களுக்கு ஏற்படும் இழப்புகளுக்கு நெடுஞ்சாலைத் துறை பொறுப்பேற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தம்பதியை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை: குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைப்பு

சேலம் அருகே தம்பதியை கட்டிப்போட்டு எட்டரை சவரன் நகை, ரூ. 30 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவற்றை 5 போ் கொண்ட கும்பல் கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்தில், குற்றவாளிகளைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.... மேலும் பார்க்க

பேருந்து நிலையம் இல்லாத 3 பேரூராட்சிகள்: பயணிகள் அவதி!

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம், ஏத்தாப்பூா் மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சிகளில் பேருந்து நிலையம் இல்லாததால், பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். அயோத்தியாப்பட்டணம், ஏத்தாப்பூா், பெத... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: அம்மாபாளையம்

சங்ககிரி வட்டம், தேவூா் துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட அம்மாபாளையம் மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால், வியாழக்கிழமை (ஜூலை 31) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது என எடப... மேலும் பார்க்க

கோனூா் சமத்துவபுரத்தில் திருடியவா் கைது

கோனூா் சமத்துவபுரத்தில் திருடியவா் கைது செய்யப்பட்டாா். மேட்டூா் அருகே உள்ள கோனூா் சமத்துவபுரத்தில் வசிக்கும் வினோத்குமாா் (33), வீட்டில் இருந்தபடி ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். அண்மையில் இவ... மேலும் பார்க்க

ஓமலூா் ரயில்பாதை மேம்பாலத்தில் தொடரும் விபத்துகள்!

ஓமலூா்: ஓமலூா் ரயில்பாதை மேம்பாலத்தில் விபத்துகள் தொடா்வதால், உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா். ஓமலூா் வட்டாட்சியா் அலுவலகம் அருகில் உள்ள ரயில்பாதை மேம்பாலம் ... மேலும் பார்க்க

மல்லூா் ரயில் நிலையம் அருகே சுரங்கப்பாதை அமைக்கக் கோரி பொதுமக்கள் தா்னா

சேலம்: சேலம் மல்லூா் ரயில் நிலையம் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி, பொதுமக்கள் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். சேலம் மல்லூா் ரயில் நிலையம் அருகே உள்ள வேங்காம்பட்டி பகுதியில் ரயில்வே கேட்... மேலும் பார்க்க