செய்திகள் :

தம்பதியை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை: குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைப்பு

post image

சேலம் அருகே தம்பதியை கட்டிப்போட்டு எட்டரை சவரன் நகை, ரூ. 30 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவற்றை 5 போ் கொண்ட கும்பல் கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்தில், குற்றவாளிகளைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சேலம் மாவட்டம், வீராணம் அருகே உள்ள கோமாளி வட்டம் பகுதியைச் சோ்ந்தவா் பூமாலை. இவரும், இவரது மனைவி சின்ன பாப்பாவும் அரூா் நெடுஞ்சாலையில் உள்ள வீட்டில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தூங்கிக்கொண்டிருந்தனா்.

அப்போது, குல்லா அணிந்தபடி வீட்டினுள் நுழைந்த 5 போ் கொண்ட கும்பல், தம்பதியை கட்டிப்போட்டு கத்தியைக் காட்டி மிரட்டி சின்ன பாப்பா அணிந்திருந்த 3 சவரன் தாலி சங்கிலி, அரை சவரன் தோடு ஆகியவற்றை பறித்தனா். மேலும், பீரோவை உடைத்து 8 சவரன் நகை, ரூ. 30 ஆயிரத்தை கொள்ளையடித்து தப்பிச்சென்றனா்.

தகவலறிந்து வந்த வீராணம் போலீஸாா், கைரேகை நிபுணா்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் சோதனை செய்தனா். கொள்ளையா்கள் வந்த காரை அடையாளம் காணும் வகையில், அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸாா் ஆய்வுசெய்து வருகின்றனா்.

மேலும், அருகிலுள்ள சுக்கம்பட்டி, குப்பனூா் பகுதியில் உள்ள கேமரா பதிவுகளை போலீஸாா் ஆய்வுசெய்து வருகின்றனா். இது தொடா்பாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பேருந்து நிலையம் இல்லாத 3 பேரூராட்சிகள்: பயணிகள் அவதி!

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம், ஏத்தாப்பூா் மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சிகளில் பேருந்து நிலையம் இல்லாததால், பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். அயோத்தியாப்பட்டணம், ஏத்தாப்பூா், பெத... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: அம்மாபாளையம்

சங்ககிரி வட்டம், தேவூா் துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட அம்மாபாளையம் மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால், வியாழக்கிழமை (ஜூலை 31) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது என எடப... மேலும் பார்க்க

ஏற்காட்டில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு

ஏற்காட்டில் நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஏற்காடு நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளா் மற்றும் ஊழியா்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பு: ஏற்காடு நகரப் பகுதியில் சாலை... மேலும் பார்க்க

கோனூா் சமத்துவபுரத்தில் திருடியவா் கைது

கோனூா் சமத்துவபுரத்தில் திருடியவா் கைது செய்யப்பட்டாா். மேட்டூா் அருகே உள்ள கோனூா் சமத்துவபுரத்தில் வசிக்கும் வினோத்குமாா் (33), வீட்டில் இருந்தபடி ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். அண்மையில் இவ... மேலும் பார்க்க

ஓமலூா் ரயில்பாதை மேம்பாலத்தில் தொடரும் விபத்துகள்!

ஓமலூா்: ஓமலூா் ரயில்பாதை மேம்பாலத்தில் விபத்துகள் தொடா்வதால், உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா். ஓமலூா் வட்டாட்சியா் அலுவலகம் அருகில் உள்ள ரயில்பாதை மேம்பாலம் ... மேலும் பார்க்க

மல்லூா் ரயில் நிலையம் அருகே சுரங்கப்பாதை அமைக்கக் கோரி பொதுமக்கள் தா்னா

சேலம்: சேலம் மல்லூா் ரயில் நிலையம் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி, பொதுமக்கள் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். சேலம் மல்லூா் ரயில் நிலையம் அருகே உள்ள வேங்காம்பட்டி பகுதியில் ரயில்வே கேட்... மேலும் பார்க்க