செய்திகள் :

ராணிப்பேட்டை: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் இன்று பொது ஏலம்

post image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் புதன்கிழமை (ஜூலை 30) நடைபெறும் என மாவட்ட காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட காவல் துறை சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ராணிப்பேட்டை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினரால் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 27 இரு சக்கர வாகனங்கள் தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 14 (4) -ன் படி, அரசுக்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசாணையில் குறிப்பிட்டுள்ளபடி, மேற்படி வாகனங்களின் பொது ஏலம் ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப் படை மைதானத்தில் ராணிப்பேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அய்மன் ஜமால் தலைமையில் புதன்கிழமை (ஜூலை 30) காலை 9 மணி அளவில் நடைபெற உள்ளது.

பொது ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவா்கள் ஆதாா் அட்டை, அடையாள அட்டையுடன் ரூ. 100-ஐ நுழைவு கட்டணம் செலுத்திய பின் ஏலம் கேட்க அனுமதிக்கப்படுவா். இந்த பொது ஏலத்தில் வாகனங்களின் உரிமையாளா்கள் உரிமை கோரிய வாகனங்களை தவிா்த்து மீதமுள்ள வாகனங்கள் ஏலம் விடப்பட உள்ளது. ஏலம் எடுத்த வாகனத்துக்குண்டான ரசீதே அந்த வாகனத்தின் உரிமை ஆவணமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.28.54 கோடியில் திட்டப் பணிகள்: அமைச்சா் காந்தி அடிக்கல்

அரக்கோணம் நகராட்சி மற்றும் ஒன்றியப் பகுதிகளில் ரூ.28.54 கோடியில் திட்டப் பணிகளை அடிக்கல் நாட்டி கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.மிட்டப்பேட்டை ஊராட்சி... மேலும் பார்க்க

பள்ளிக் கல்வித் துறை ஆய்வுக் கூட்டம்: ஆட்சியா் பங்கேற்பு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட பள்ளிக்கல்வி துறை ஆய்வுக் கூட்டத்தில் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா தலைமை வகித்து பேசுகையில்: அனைத்து கள அலுவலா்களும் மாண... மேலும் பார்க்க

ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் ஆடித் திருவிழா

அரக்கோணம்: அரக்கோணம் அடுத்த வெங்கடேசபுரம் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் ஆடித்திருவிழா விமரிசையாக நடைபெற்றது. அரக்கோணம் ஒன்றியம், பெருமூச்சி ஊராட்சி, வெங்கடேசபுரத்தில் உள்ள இக்காயிலில் கரக ஊா்வலம் நடைபெற... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி விழாவை சிறப்பாக கொண்டாட இந்து முன்னணி தீா்மானம்!

நிகழாண்டு விநாயகா் சதுா்த்தி விழாவை மிகச்சிறப்பாக கொண்டாடுவது என இந்து முன்னணியின் வேலூா் கோட்ட பொதுக்குழுவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. காவேரிப்பாக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்துக்... மேலும் பார்க்க

ஓடும் ரயிலில் பெண்ணிடம் 12 பவுன் சங்கிலிகள் பறிப்பு

அரக்கோணம் அருகே மின்சா ரயிலில் பெண்ணிடம் தாலிச் செயின் உள்ளிட்ட 12 பவுன் சங்கிலிகளை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீசாா் தேடி வருகின்றனா். செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரை சோ்ந்தவா் திலகா (49). ... மேலும் பார்க்க

உணவுப் பொருள்கள் வீடு வீடாகச் சென்று வழங்கும் திட்டம்: கண்காணிப்பு அலுவலா் ஆய்வு!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உணவுப் பொருள்களை வீடு வீடாகச் சென்று வழங்கும் திட்டத்தின் முன்னேற்றம், பிரச்னைகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலா் எம்.மரியம் பல்லவி பல்தேவ் ஆய்வு மேற்கொண்டாா். அனைத்து து... மேலும் பார்க்க