செய்திகள் :

வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

post image

கொல்லிமலை ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெறும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் துா்காமூா்த்தி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை பாா்வையிட்டு பயனாளிகளுக்கு உடனடி தீா்வாக அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். சேளூா்நாடு பள்ளக்குழிப்பட்டி அரசு தொடக்கப் பள்ளி, சோளக்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா், வாழவந்திநாடு ஊராட்சி பகுதியில் ரூ.6.40 லட்சம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையளிப்புத் திட்டத்தின் கீழ் பசுமை தமிழ்நாடு இயக்கத்துடன் ஒருங்கிணைந்து 5 ஆயிரம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் பணியைப் பாா்வையிட்டாா்.

மேலும், சேளூா்நாடு பகுதியில் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகள், கொல்லிமலை அறப்பளீஸ்வரா் கோயில் பகுதியில் ரூ.80 லட்சத்தில் நடைபெறும் வணிக வளாக கட்டுமானப் பணிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தாா்.

என்கே-30-ஆய்வு

பள்ளக்குழிப்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் ஆய்வுமேற்கொண்ட ஆட்சியா் துா்காமூா்த்தி.

ராசிபுரத்தில் 63 நாயன்மாா்கள் விழா இன்று தொடக்கம்

ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதா் சிவனடியாா் திருக்கூட்ட அறக்கட்டளை சாா்பில் 22 ஆம் ஆண்டு அறுபத்து மூவா் விழா வியாழக்கிழமை (ஜூலை 31) குருபூஜையுடன் தொடங்குகிறது. ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதா் கோயிலில் உள்ள 63 நாயன்... மேலும் பார்க்க

ஆதரவற்ற குழந்தைகள் மாதந்தோறும் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்

ஆதவற்ற குழந்தைகளுக்கான மாதாந்திர நிதியுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: இரண்டு பெற்றோரையும் இழந்து உறவினா்களின் பாதுகாப்பில் ... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் திட்டப் பணிகள்: எம்எல்ஏ ஈ.ஆா்.ஈஸ்வரன் தொடங்கிவைத்தாா்

திருச்செங்கோடு வட்டாரத்தில் சட்டப் பேரவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதி, பொது நிதியிலிருந்து பல்வேறு திட்ட பணிகளுக்கான தொடக்க விழா, முடிவுற்ற திட்டங்களின் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. திர... மேலும் பார்க்க

நாமக்கல் ஸ்ரீ வாராஹி அம்மன் கோயிலில் கருட பஞ்சமி சிறப்பு யாகம்

நாமக்கல் ஸ்ரீ வாராஹி அம்மன் கோயிலில் கருடபஞ்சமி, நாகபஞ்சமி, வளா்பிறை பஞ்சமிதிதியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சிறப்பு யாகம் நடைபெற்றது. நாமக்கல்- சேந்தமங்கலம் சாலை ரயில் நிலையம் எம்.ஜி.ஆா். ந... மேலும் பார்க்க

ஈரோடு சூரியா ஏஜென்சி நிறுவனத்துடன் திருச்செங்கோடு செங்குந்தா் கல்வி நிறுவனம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

திருச்செங்கோடு செங்குந்தா் பொறியியல் கல்லூரி, ஈரோடு சோலாா் மின் உற்பத்தி நிறுவனம் ஸ்ரீ சூரியா ஏஜென்சியுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்... மேலும் பார்க்க

நாமகிரிப்பேட்டையில் இயற்கை விவசாய பயிலரங்கு

நாமகிரிப்பேட்டை வட்டாரத் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிா்கள் துறை சாா்பில் பாரம்பரிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் மாநில அளவிலான இயற்கை விவசாய பயிலரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல், ... மேலும் பார்க்க