செய்திகள் :

நீலகிரி: பழங்குடி மாணவருக்கு ராகிங் தொல்லை, 3-ம் ஆண்டு மாணவர்கள் 6 பேர் சஸ்பெண்டு - என்ன நடக்கிறது?

post image

நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகில் உள்ள பைக்காரா பகுதியைச் சேர்ந்த தோடர் பழங்குடியின இளைஞர் ஒருவர் கூடலூரில் உள்ள அரசு கல்லூரியில் முதலாமாண்டு பயின்று வருகிறார். புதிதாகக் கல்லூரியில் சேர்ந்திருக்கும் இந்த மாணவரை தேநீர் கடை ஒன்றில் வைத்து மூன்றாம் ஆண்டு மாணவர்கள் சிலர் கடந்த வாரம் ராகிங் செய்திருக்கிறார்கள்.

ராகிங் கொடுமை

தனியார் நிறுவன விளம்பர நோட்டீஸை எல்லா மாணவர்களுக்கும் விநியோகம் செய்ய வேண்டும் எனவும் கட்டாயப்படுத்தியிருக்கிறார்கள். பழங்குடி இளைஞர் மறுக்கவே, கும்பலாக சேர்ந்து அவரைத் தாக்கியுள்ளனர். காயமடைந்த இளைஞரை கூடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்துள்ளனர்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பழங்குடி இளைஞரின் பெற்றோர் , கல்லூரி நிர்வாகம் மற்றும் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். இது குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், முதல் கட்ட நடவடிக்கையாக மூன்றாம் ஆண்டு மாணவர்கள் 6 பேரை சஸ்பெண்டு செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

ராகிங்

இது குறித்து தெரிவித்துள்ள கல்லூரி நிர்வாகம், " கல்லூரி வளாகம் அருகில் கடந்த வாரம் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். பாதிக்கப்பட்ட பழங்குடி இளைஞர் அடையாளம் காட்டிய 6 மாணவர்களை சஸ்பெண்டு செய்திருக்கிறோம்‌. தொடர் விசாரணையில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

நெல்லை: ”விரைவில் ஆணவக் கொலைக்கு எதிரான சட்டம் நிறைவேற்றப்படும் என நம்புகிறோம்” – கனிமொழி MP

திருநெல்வேலியில் கடந்த 27-ம் தேதி ஐ.டி ஊழியரான கவின்குமார் ஆணவக் கொலைவின் காரணமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தி உள்ளது. ஏற்கெனவே இந்தக்... மேலும் பார்க்க

பழங்குடி லாக்அப் மரணம்: உடுமலை வனச்சரக அலுவலகத்தில் நீதிபதி ஆய்வு - நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மேல்குருமலை பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து (45). முதுவர் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மாரிமுத்த... மேலும் பார்க்க

Vedan: இளம்பெண்ணின் பாலியல் புகார்... ராப்பர் வேடன் மீது வழக்கு பதிவுசெய்த போலீஸ்!

கேரள மாநிலம், திருச்சூரைச் சேர்ந்த மலையாள ராப் பாடகர் ஹிரண்தாஸ் முரளி(30). சிறுவயதிலேயே மீன் உள்ளிட்டவைகளை குறிவைத்து பிடிப்பதில் திறமைசாலியாக இருந்ததால் வேடன் என அழைக்கப்பட்டார். அந்த பெயரிலேயே மலையா... மேலும் பார்க்க

உடுமலைப்பேட்டை: விசாரணைக்கு சென்றவர் உயிரிழப்பு; வனத்துறை சித்ரவதையா? - மலைவாழ் மக்கள் சொல்வதென்ன?

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மேல்குருமலை பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து (45). இவர் மீது கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் கஞ்சா க... மேலும் பார்க்க

"நானும் கவினும் உண்மையா காதலிச்சோம்; தவறா பேசாதீங்க" - நடந்ததை விவரிக்கும் கவின் காதலி

திருநெல்வேலியில் பட்டியலினத்தைச் சேர்ந்த கவின் என்பவரை, காவல்துறை அதிகாரிகளான சரவணன் - கிருஷ்ணவேணி தம்பதியினரின் மகனும். கவினின் காதலியின் சகோதரருமான சுர்ஜித் ஜூலை 27-ம் தேதி கொடூரமாக ஆணவக்கொலை செய்த ... மேலும் பார்க்க

`நெல்லை கவின் ஆணவக்கொலை' - எவிடென்ஸ் அமைப்பு ஆய்வறிக்கை சொல்வதென்ன?

"நான்கு வெட்டுகளிலேயே கவினுக்கு உயிர் போயிருக்கிறது, கூலிப்படையினரைப்போல அவனது அரிவாள் வெட்டு இருந்திருக்கிறது. அப்படியென்றால் இது திட்டமிடப்பட்ட கூட்டாக சதி செய்த படுகொலையாகவே தெரிகிறது." என்று எவிடெ... மேலும் பார்க்க