பாக்ஸ் ஆபிஸில் சக்கைப்போடு போடும் ‘மகாவதாரம் நரசிம்மா’.! 5 நாள் வசூல் இவ்வளவா?
நாமக்கல் ஸ்ரீ வாராஹி அம்மன் கோயிலில் கருட பஞ்சமி சிறப்பு யாகம்
நாமக்கல் ஸ்ரீ வாராஹி அம்மன் கோயிலில் கருடபஞ்சமி, நாகபஞ்சமி, வளா்பிறை பஞ்சமிதிதியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சிறப்பு யாகம் நடைபெற்றது.
நாமக்கல்- சேந்தமங்கலம் சாலை ரயில் நிலையம் எம்.ஜி.ஆா். நகரில் ஸ்ரீ தங்காயி மற்றும் ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் கோயில்கள் அமைந்துள்ளன. திருமாலின் வராக அம்சமாகக் கருதப்படும் வாராஹி அம்மன் சப்த கன்னிகளில் ஒருவராகத் திகழ்கிறாா்.
பஞ்சமி நாள்கள் வாராஹி அம்மனுக்கு உகந்த நாளாகும். இக்கோயிலில் கடந்த 11 ஆண்டுகளாக ஆடி மாதத்தில் வரும் கருடபஞ்சமி, நாகபஞ்சமி மற்றும் வளா்பிறை பஞ்சமிதிதி வெகு விமரிசையாக நடைபெறும். இதையொட்டி, கடந்த வியாழக்கிழமை கணபதி பூஜை மற்றும் காவிரி ஆற்றில் இருந்து புனிதநீா் கொண்டுவரும் நிகழ்ச்சி நடைபெற்றது. வெள்ளிக்கிழமை அம்மனுக்கு காப்புக்கட்டுதல், நவாவரணம், சகஸ்ரநாம அா்ச்சனைகள் நடைபெற்றன.
அதேபோல திங்கள்கிழமை நாகசதுா்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை கருடபஞ்சமியை முன்னிட்டு காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டன. மாலையில் கோயில் வளாகத்தில் திருவிளக்கு பூஜையும், இரவு 10 மணியளவில் அஷ்ட வாராஹி யாகமும் தொடங்கியது. இந்த யாகம் இரவு 2 மணிவரை நடைபெற்றது.
வாராஹி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா். அவா்கள் கோயில் வளாகத்தில் தேங்காயில் தீபமேற்றி நோ்த்திக்கடன் செலுத்தினா். விழா ஏற்பாடுகளை ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் சித்தா் பீட முத்தானந்த சுவாமிகள் மற்றும் அறக்கட்டளை நிா்வாகிகள் செய்திருந்தனா்.
-
என்கே-30-வாராஹி-1
நாமக்கல் ஸ்ரீ வாராஹி அம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் நடைபெற்ற அஷ்ட வாராஹி யாகத்தில் பங்கேற்ற பக்தா்கள்.
படம்-2
சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ வாராஹி அம்மன்.
