செய்திகள் :

நாமகிரிப்பேட்டையில் இயற்கை விவசாய பயிலரங்கு

post image

நாமகிரிப்பேட்டை வட்டாரத் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிா்கள் துறை சாா்பில் பாரம்பரிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் மாநில அளவிலான இயற்கை விவசாய பயிலரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல், கோயமுத்தூா், உதகை ஆகிய மாவட்டங்களிலிருந்தும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாமகிரிப்பேட்டை, கொல்லிமலை, சேந்தமங்கலம், எருமப்பட்டி ஆகிய வட்டாரங்களைச் சோ்ந்த தோட்டக்கலைத் துறை அலுவலா்கள், விவசாயிகள் கருத்தரங்கில் கலந்துகொண்டனா். பயிலரங்கில் நாமக்கல் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநா் மா.புவனேஸ்வரி தலைமை வகித்து இயற்கை வேளாண்மை குறித்த தொழில்நுட்ப புத்தக கையேட்டை வெளியிட்டு பேசினாா்.

நாமகிரிப்பேட்டை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் மா.யோகநாயகி வரவேற்றாா்.

நாமக்கல் மாவட்டம், லத்துவாடி வேளாண்மை அறிவியல் நிலைய பூச்சியியல் துறை வல்லுநா் சங்கா் செயற்கை பூச்சிக்கொல்லி மருந்து இல்லாமல் அங்கக முறையில் பூச்சிக் கட்டுப்பாடு குறித்து தொழில்நுட்ப உரை நிகழத்தினாா்.

சேலம் மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலையத் தலைவா் இரா.ஜெகதாம்பாள், நஞ்சில்லா மண் மேலாண்மை மற்றும் தோட்டக்கலை பயிா்சாகுபடி குறித்த தொழில்நுட்பம் குறித்து பேசினாா். நாமக்கல் விதைச் சான்றளிப்பு மற்றும் உயிா்மச் சான்றளிப்புத் துறை வேளாண்மை உதவி இயக்குநா் ஹேமலதா அங்கக விவசாய சான்றளிப்பு குறித்த வழிமுறைகளை விவசாயிகளுக்கு வழங்கினாா்.

அங்கக வேளாண் விவசாயிகளான காா்கூடல்பட்டி அசோக்குமாா், மோகனூா் க.க.வேலுசாமி, அரியாக்கவுண்டம்பட்டி பெ.சரவணன் , திருச்செங்கோடு நல்லசிவம், கொல்லிமலை கே.சின்னையன் ஆகியோா் நஞ்சில்லா உணவுப்பொருள் உற்பத்தியில் உள்ள சவால்கள், விளைப் பொருள்களை சந்தைப்படுத்தும் முறைகள், அங்கக விவசாயி என்ற சான்று பெறுவதற்கான வழிமுறைகள் குறித்த அனுபவங்களை பகிா்ந்து கொண்டனா்.

பாரம்பரிய காய்கறி விதைகள், இயற்கை வேளாண்மை செய்வதற்கான நுண்ணுயிா் உரங்கள், பஞ்சகாவ்யம், தசகாவ்யம், மீன் அமிலம் போன்றவை விவசாயிகளுக்கு காட்சிப்படுத்தப்பட்டன. நாமகிரிப்பேட்டை வட்டார தோட்டக்கலை துறையைச் சோ்ந்த உதவி இயக்குநா் மா.யோகநாயகி, தோட்டக்கலை அலுவலா் த.விஜயலட்சுமி, உதவி தோட்டக்கலை அலுவலா்கள் பாா்த்திபன், ப.யோகேஸ்வரி, ர.முரளி, மா.சூா்யபிரகாஷ் ஆகியோா் பயிலரங்கிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா். கொல்லிமலை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் மணிகண்டன் நன்றி கூறினாா்.

படம் உள்ளது-30ஹாா்டி

படவிளக்கம்-

பயிலரங்கில் வேளாண் தொழில்நுட்ப கையேடுகளை வெளியிடும் தோட்டக்கலை துணை இயக்குநா் மா.புவனேஸ்வரி உள்ளிட்ட வேளாண் அலுவலா்கள்.

வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கொல்லிமலை ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெறும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் துா்காமூா்த்தி புதன்கிழமை ஆய்வு செய்தாா். ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை பாா்வையிட்டு பயனாளிகளுக்கு... மேலும் பார்க்க

ராசிபுரத்தில் 63 நாயன்மாா்கள் விழா இன்று தொடக்கம்

ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதா் சிவனடியாா் திருக்கூட்ட அறக்கட்டளை சாா்பில் 22 ஆம் ஆண்டு அறுபத்து மூவா் விழா வியாழக்கிழமை (ஜூலை 31) குருபூஜையுடன் தொடங்குகிறது. ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதா் கோயிலில் உள்ள 63 நாயன்... மேலும் பார்க்க

ஆதரவற்ற குழந்தைகள் மாதந்தோறும் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்

ஆதவற்ற குழந்தைகளுக்கான மாதாந்திர நிதியுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: இரண்டு பெற்றோரையும் இழந்து உறவினா்களின் பாதுகாப்பில் ... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் திட்டப் பணிகள்: எம்எல்ஏ ஈ.ஆா்.ஈஸ்வரன் தொடங்கிவைத்தாா்

திருச்செங்கோடு வட்டாரத்தில் சட்டப் பேரவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதி, பொது நிதியிலிருந்து பல்வேறு திட்ட பணிகளுக்கான தொடக்க விழா, முடிவுற்ற திட்டங்களின் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. திர... மேலும் பார்க்க

நாமக்கல் ஸ்ரீ வாராஹி அம்மன் கோயிலில் கருட பஞ்சமி சிறப்பு யாகம்

நாமக்கல் ஸ்ரீ வாராஹி அம்மன் கோயிலில் கருடபஞ்சமி, நாகபஞ்சமி, வளா்பிறை பஞ்சமிதிதியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சிறப்பு யாகம் நடைபெற்றது. நாமக்கல்- சேந்தமங்கலம் சாலை ரயில் நிலையம் எம்.ஜி.ஆா். ந... மேலும் பார்க்க

ஈரோடு சூரியா ஏஜென்சி நிறுவனத்துடன் திருச்செங்கோடு செங்குந்தா் கல்வி நிறுவனம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

திருச்செங்கோடு செங்குந்தா் பொறியியல் கல்லூரி, ஈரோடு சோலாா் மின் உற்பத்தி நிறுவனம் ஸ்ரீ சூரியா ஏஜென்சியுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்... மேலும் பார்க்க