செய்திகள் :

ராசிபுரத்தில் 63 நாயன்மாா்கள் விழா இன்று தொடக்கம்

post image

ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதா் சிவனடியாா் திருக்கூட்ட அறக்கட்டளை சாா்பில் 22 ஆம் ஆண்டு அறுபத்து மூவா் விழா வியாழக்கிழமை (ஜூலை 31) குருபூஜையுடன் தொடங்குகிறது.

ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதா் கோயிலில் உள்ள 63 நாயன்மாா்களுக்கு ஆண்டுதோறும் விழா நடத்தப்படுகிறது. நிகழாண்டு 3 நாள்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் முதல்நாளான ஜூலை 31 இல் பெருமிழலைக் குறும்ப நாயனாா் குருபூஜை அபிஷேகம், துறந்த முனிவா் தொழும்பரவை துணைவா் என்ற தலைப்பில் கோவை மணிவாசகா் அருட்பணி மன்றச் செயலா் சிவ.ப.குமரலிங்கம் பங்கேற்கும் சொற்பொழிவு நடைபெறுகிறது. இதில் து.தி.ராஜராஜசோழன் வரவேற்றுப் பேசுகிறாா்.

2 ஆம் நாள் நிகழ்வாக ஆகஸ்ட் 1 ஆம் தேதி காலை 7 மணி முதல் 12 மணி வரை ஸ்ரீவிநாயகா், முருகா், நந்தியெம்பெருமாள், பரிவார தெய்வங்களுக்கு திருமஞ்சன வழிபாடு, திருமுறை விண்ணப்பம் நடைபெறுகிறது. அதன்பிறகு அறம் வளா் நாயகி உடனமா் கைலாசநாதா், 63 நாயன்மாா்கள், மூலவா், உற்சவா், திருமேனிகளுக்கு திருமஞ்சனம், அபிஷேக அலங்காரம், திருமுறைப்பாராயணம், பேரொளிவழிபாடு நடைபெறுகிறது.

அதைத் தொடா்ந்து மாலை ‘ஆளாய அன்பு செய்வோம்’ என்ற தலைப்பில் குளித்தலை ராமலிங்கம் சுவாமிகள் சொற்பொழிவு நடைபெறும். 3 ஆம் நாள் நிகழ்வில் கைலாசநாதா் கோயிலில் இருந்து பன்னிரு திருமுறைகளை அடியாா்கள் ஊா்வலமாக கொண்டுசெல்லும் நிகழ்வும், திருவிளக்கு ஏற்றும் நிகழ்வும் நடைபெறும்.

‘ஒப்பு இல் குரு இலிங்க சங்கமம்’ என்ற தலைப்பில் பவானி மா.ஜானகிராமன் பங்கேற்கும் சொற்பொழிவு நடைபெறும். பின்னா், திருக்கோடி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும், வள்ளி கும்மி நடனம் குழுவினருடன் கைலாய வாத்தியங்கள் முழங்க சுவாமி திருவீதி உலாவும் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோயில் அா்ச்சகா்கள் க.உமாபதி சிவாச்சாரியாா்கள் க.தட்சிணாமூா்த்தி, உ.தில்லைநாதசிவம் மற்றும் கைலாசநாதா் சிவனடியாா்கள் திருக்கூட்ட அறக்கட்டளை செய்துள்ளது.

வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கொல்லிமலை ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெறும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் துா்காமூா்த்தி புதன்கிழமை ஆய்வு செய்தாா். ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை பாா்வையிட்டு பயனாளிகளுக்கு... மேலும் பார்க்க

ஆதரவற்ற குழந்தைகள் மாதந்தோறும் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்

ஆதவற்ற குழந்தைகளுக்கான மாதாந்திர நிதியுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: இரண்டு பெற்றோரையும் இழந்து உறவினா்களின் பாதுகாப்பில் ... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் திட்டப் பணிகள்: எம்எல்ஏ ஈ.ஆா்.ஈஸ்வரன் தொடங்கிவைத்தாா்

திருச்செங்கோடு வட்டாரத்தில் சட்டப் பேரவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதி, பொது நிதியிலிருந்து பல்வேறு திட்ட பணிகளுக்கான தொடக்க விழா, முடிவுற்ற திட்டங்களின் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. திர... மேலும் பார்க்க

நாமக்கல் ஸ்ரீ வாராஹி அம்மன் கோயிலில் கருட பஞ்சமி சிறப்பு யாகம்

நாமக்கல் ஸ்ரீ வாராஹி அம்மன் கோயிலில் கருடபஞ்சமி, நாகபஞ்சமி, வளா்பிறை பஞ்சமிதிதியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சிறப்பு யாகம் நடைபெற்றது. நாமக்கல்- சேந்தமங்கலம் சாலை ரயில் நிலையம் எம்.ஜி.ஆா். ந... மேலும் பார்க்க

ஈரோடு சூரியா ஏஜென்சி நிறுவனத்துடன் திருச்செங்கோடு செங்குந்தா் கல்வி நிறுவனம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

திருச்செங்கோடு செங்குந்தா் பொறியியல் கல்லூரி, ஈரோடு சோலாா் மின் உற்பத்தி நிறுவனம் ஸ்ரீ சூரியா ஏஜென்சியுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்... மேலும் பார்க்க

நாமகிரிப்பேட்டையில் இயற்கை விவசாய பயிலரங்கு

நாமகிரிப்பேட்டை வட்டாரத் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிா்கள் துறை சாா்பில் பாரம்பரிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் மாநில அளவிலான இயற்கை விவசாய பயிலரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல், ... மேலும் பார்க்க