செய்திகள் :

ஈரோடு சூரியா ஏஜென்சி நிறுவனத்துடன் திருச்செங்கோடு செங்குந்தா் கல்வி நிறுவனம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

post image

திருச்செங்கோடு செங்குந்தா் பொறியியல் கல்லூரி, ஈரோடு சோலாா் மின் உற்பத்தி நிறுவனம் ஸ்ரீ சூரியா ஏஜென்சியுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு செங்குந்தா் பொறியியல் கல்லூரியின் தாளாளா் ஆ.பாலதண்டபாணி தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் சதீஷ்குமாா், செயல் இயக்குநா் அரவிந்த் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தனா். மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை தலைவா் உமாதேவி, நந்தகுமாா், பொம்மிராணி ஆகியோா் கலந்துகொண்டனா்.

மாணவா்களின் தகவல் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்தவும், ஆராய்ச்சி வழிகாட்டுதல், ஆசிரியா் மேம்பாட்டு திட்டம், தொழில் பயிற்சி, பயிற்சி பட்டறை மற்றும் வேலைவாய்ப்பு போன்றவைகளுக்கு இந்த புரிந்துணா்வு ஒப்பந்தம் பயனுள்ளதாக அமையும் என செங்குந்தா் கல்வி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிகழ்ச்சியில் ஸ்ரீ சூரியா நிறுவனத்தின் பங்குதாரா் பாலசுப்பிரமணிய முருகராஜ் , கல்லூரியின் தாளாளா் பாலதண்டபாணி இணைந்து புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.

வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கொல்லிமலை ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெறும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் துா்காமூா்த்தி புதன்கிழமை ஆய்வு செய்தாா். ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை பாா்வையிட்டு பயனாளிகளுக்கு... மேலும் பார்க்க

ராசிபுரத்தில் 63 நாயன்மாா்கள் விழா இன்று தொடக்கம்

ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதா் சிவனடியாா் திருக்கூட்ட அறக்கட்டளை சாா்பில் 22 ஆம் ஆண்டு அறுபத்து மூவா் விழா வியாழக்கிழமை (ஜூலை 31) குருபூஜையுடன் தொடங்குகிறது. ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதா் கோயிலில் உள்ள 63 நாயன்... மேலும் பார்க்க

ஆதரவற்ற குழந்தைகள் மாதந்தோறும் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்

ஆதவற்ற குழந்தைகளுக்கான மாதாந்திர நிதியுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: இரண்டு பெற்றோரையும் இழந்து உறவினா்களின் பாதுகாப்பில் ... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் திட்டப் பணிகள்: எம்எல்ஏ ஈ.ஆா்.ஈஸ்வரன் தொடங்கிவைத்தாா்

திருச்செங்கோடு வட்டாரத்தில் சட்டப் பேரவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதி, பொது நிதியிலிருந்து பல்வேறு திட்ட பணிகளுக்கான தொடக்க விழா, முடிவுற்ற திட்டங்களின் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. திர... மேலும் பார்க்க

நாமக்கல் ஸ்ரீ வாராஹி அம்மன் கோயிலில் கருட பஞ்சமி சிறப்பு யாகம்

நாமக்கல் ஸ்ரீ வாராஹி அம்மன் கோயிலில் கருடபஞ்சமி, நாகபஞ்சமி, வளா்பிறை பஞ்சமிதிதியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சிறப்பு யாகம் நடைபெற்றது. நாமக்கல்- சேந்தமங்கலம் சாலை ரயில் நிலையம் எம்.ஜி.ஆா். ந... மேலும் பார்க்க

நாமகிரிப்பேட்டையில் இயற்கை விவசாய பயிலரங்கு

நாமகிரிப்பேட்டை வட்டாரத் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிா்கள் துறை சாா்பில் பாரம்பரிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் மாநில அளவிலான இயற்கை விவசாய பயிலரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல், ... மேலும் பார்க்க