செய்திகள் :

காலையில் வாக்கிங் சந்திப்பு; மாலையில் ஸ்டாலின் வீட்டுக்கே சென்ற ஓ.பி.எஸ் - அடுத்தடுத்த பரபரப்பு

post image

முதல்வர் ஸ்டாலின் கடந்த வாரம் லேசான தலை சுற்றல் காரணமாக, அப்போலோ மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பியிருக்கும் நிலையில், இன்று காலையில் வழக்கம்போல வாக்கிங் சென்றார்.

ஸ்டாலின் வாக்கிங் சென்ற அதே அடையார் பார்க்கிற்கு ஓ.பி.எஸ்ஸும் வாக்கிங் வந்துள்ளார்.

அப்போது இருவரும் ஒருவருக்கொருவர் சந்தித்தனர்.

ஸ்டாலின் - ஓ.பன்னீர்செல்வம்
ஸ்டாலின் - ஓ.பன்னீர்செல்வம்

அந்த சந்திப்பைத் தொடர்ந்து, ஓபிஎஸ் தனது அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழு நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனையை நடத்தினார்.

சுமார் 3 மணிநேரம் நீடித்த ஆலோசனையின் முடிவில் ஓ.பி.எஸ்ஸின் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன், தேசிய ஜனநாயகக் கூட்டணியுடனான உறவை முறித்துக்கொள்வதாகவும், எதிர்காலத்தில் நிலைமையைப் பொறுத்து கூட்டணி பற்றி முடிவெடுப்போம் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், காலையில் ஸ்டாலினைச் சந்தித்த ஓ.பி.எஸ், இன்று மாலை ஆழ்வார்பேட்டையிலுள்ள அவரது வீட்டுக்கு சென்று மீண்டும் நேரில் சந்தித்திருக்கிறார்.

ஒரே நாளில் இரண்டு முறை ஸ்டாலினை ஓ.பி.எஸ் நேரில் சந்தித்திருப்பதை வெறுமனே நலம் விசாரிப்புக்கான சந்திப்பு என்று கூறினாலும், தேர்தல் கணக்குகளை முன்வைத்தே இந்த சந்திப்பு என்ற பேச்சும் அடிபடுகிறது.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

மாலேகான்: `RSS தலைவர் மோகன் பகவத்தை கைதுசெய்ய சொன்னார்கள்' - தீவிரவாத தடுப்புப்பிரிவு மாஜி அதிகாரி

மகாராஷ்டிரா மாநிலம் மாலேகான் பகுதியில் கடந்த 2008-ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் நேற்று தீர்ப்பு வழங்கிய சிறப்பு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவித்தது. இவ்வழக்கை ஆரம்பத்தில்... மேலும் பார்க்க

Tirunelveli Caste Killing : 'ஆணவக்கொலைகளை முதலமைச்சர் சீரியஸா எடுத்துக்கலை' - எம்.எல்.ஏ நாகை மாலி

திருநெல்வேலியில் ஆணவக்கொலை செய்யப்பட்ட கவினின் உடலை இன்னும் அவரின் குடும்பத்தினர் பெற்றுக்கொள்ளவில்லை. இன்று பெற்றுகொள்ள சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. கொலை செய்த சுர்ஜித்தின் பெ... மேலும் பார்க்க

மாலேகான் குண்டுவெடிப்பு: `இது நீதியே அல்ல’ - BJP Ex எம்.பி உட்பட 7 பேர் விடுதலையை எதிர்க்கும் ஒவைசி

மகாராஷ்டிராவில் கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி மாலேகான் பகுதியிலுள்ள மசூதியில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில், 6 பேர் உயிரிழந்தனர், 100-கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.இதுதொடர்பான விச... மேலும் பார்க்க

ஆணவப் படுகொலை: `எந்த அரசாங்கமாக இருந்தாலும் தயங்குகிறது’ - வலுக்கும் தனிச் சட்ட கோரிக்கை

நெல்லையில் ஐடி ஊழியர் கவின் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தமிழ்நாட்டில் தீவிர விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் பிரமுகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பா.ரஞ்சித், மாரி ... மேலும் பார்க்க

கொத்துக் கொத்தாகப் பறிபோகும் வேலை... இளைஞர்களின் எதிர்காலத்துக்கு பதில் என்ன ‘மாண்புமிகு’க்களே?

‘டி.சி.எஸ் 12,000 பணியாளர்களை வேலை நீக்கம் செய்ய உள்ளது’ என்று தற்போது சுழன்றுகொண்டிருக்கும் செய்தி, இந்திய ஐ.டி துறையிலும், இளைஞர்கள் மற்றும் குடும்பங்களின் மத்தியிலும் பெரும் அச்சத்தை உண்டாக்கி இருக... மேலும் பார்க்க

DMK கூட்டணி : மதிமுக -க்கு பதில் தேமுதிக - STALIN Plan?| TRUMP Tarrif MODI Imperfect Show 31.7.2025

* US Tariff: இந்தியா மீது 25% வரி விதித்த Trump; ரஷ்யாவிடம் எண்ணெய், ஆயுதம் வாங்குவதால் அபராதம்!* Trump Tariffs: நண்பன் இந்தியாவுக்கு 25% வரி - ட்ரம்ப் அறிவிப்பால் என்னென்ன பாதிப்புகள் வரும்?* மத்திய ... மேலும் பார்க்க