செய்திகள் :

கொத்துக் கொத்தாகப் பறிபோகும் வேலை... இளைஞர்களின் எதிர்காலத்துக்கு பதில் என்ன ‘மாண்புமிகு’க்களே?

post image

‘டி.சி.எஸ் 12,000 பணியாளர்களை வேலை நீக்கம் செய்ய உள்ளது’ என்று தற்போது சுழன்றுகொண்டிருக்கும் செய்தி, இந்திய ஐ.டி துறையிலும், இளைஞர்கள் மற்றும் குடும்பங்களின் மத்தியிலும் பெரும் அச்சத்தை உண்டாக்கி இருக்கிறது. ‘இது வெறும் ஆரம்பம்தான், டி.சி.எஸ் நிறுவனத்தைத் தொடர்ந்து பல்வேறு முன்னணி ஐ.டி நிறுவனங்களும் பணிநீக்க நடவடிக்கையில் இறங்கலாம்’ என்று, கூடவே சுழல ஆரம்பித்துள்ள செய்திகள், பீதியை மேலும் கூட்டுகின்றன.

ஐ.டி துறையில் காணப்படும் மந்தநிலை, ஏ.ஐ என்ற செயற்கை நுண்ணறிவின் ஊடுருவல் மற்றும் அமெரிக்க அரசின் வரிவிதிப்பு நடவடிக்கை ஆகியவை இந்த வேலை நீக்கத்துக்குப் பின்னால் இருக்கும் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.குறிப்பாக, ‘ஏ.ஐ’ மீதான பயம்தான் அதிகமாக இருக்கிறது. ஆனால், ‘ஏ.ஐ வேலைகளைப் பறிக்கிறது’ என்று ஒரு தரப்பு சொல்ல, இன்னொரு தரப்போ... ‘ஏ.ஐ வேலைகளைப் பறிக்காது. புதிய வேலை உருவாக்கும்’ என்கிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே இந்தப் பட்டிமன்றம் நீண்டுகொண்டிருக்கும் நிலையில்தான், டி.சி.எஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ உள்ளிட்ட முன்னணி ஐ.டி நிறுவனங்களில் பணிநீக்கங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. ‘2022 முதல் 2024 வரையிலான காலத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை 2.1 லட்சத்தைத் தாண்டியுள்ளது’ என்கின்றன புள்ளிவிவரங்கள்.

அதேசமயம், ‘ஐ.டி துறையில்தான் எதிர்காலம்’ என்ற பிம்பமும் தொடர்ந்து கட்டமைக்கப்படுகிறது. பெரும்பாலான இளைஞர்களும் பெற்றோர்களும் இதையே நம்பிக்கொண்டுள்ளனர். பொறியியல் கல்லூரிகளும், இதர ஐ.டி துறை சார்ந்த பயிற்சி நிறுவனங்களும் இதையே தங்களுடைய தூண்டிலின் இரையாகப் பயன்படுத்தி ‘வணிகம்’ நடத்திவருகின்றன.

இந்நிலையில், இந்திய ஐ.டி நிறுவனங்களின் கூட்டமைப்பான ‘நாஸ்காம்’, “செயற்கை நுண்ணறிவும் ஆட்டோமேஷனும் ஐ.டி நிறுவனங்களின் செயல்பாடு களையே மாற்றியிருக்கின்றன. இதற்கேற்ப ஊழியர்களின் திறமைகளை மறு மதிப்பீடு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, நிறுவனங்களின் ஏ.ஐ அடிப்படையிலான பணித் தேவைகளுக்கும், ஐ.டி பட்டதாரிகள், பணியாளர் களுடைய திறன்களுக்கும் இடையே உள்ள இடைவெளியைப் போக்கும் வகையில் ஒவ்வொருவரும் அப்டேட் ஆக வேண்டும்” என்று வலியுறுத்துகிறது.

ஆக மொத்தத்தில், ‘இந்தியாவின் எதிர்காலம்’ எனச் சொல்லப்படும் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகியுள்ளது என்பது மட்டும் உண்மை.ஏற்கெனவே, பல்வேறு சிக்கல்களுக்கு நடுவில்தான் படித்துப் பட்டம் பெற்று, படாதபாடுபட்டு வேலைகளில் சேர்ந்துவருகின்றனர், நம் இளைஞர்கள். ஆனால், கடைசியில் நிலைமை இப்படிப் போய்க்கொண்டிருந்தால், அது இந்தியப் பொருளாதாரத்துக்கே பெரும் சவாலாக மாறி நிற்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்தச் சவாலை எப்படி சமாளிக்கப்போகிறோம்? என்கிற கேள்விக்குத்தான் இப்போது முக்கியமாக விடையைத் தேட வேண்டும். அந்தப் பொறுப்பு, நம் ஆட்சியாளர்களிடம்தான்!

என்ன செய்யப்போகிறீர்கள் ‘மாண்புமிகு’க்களே?

- ஆசிரியர்

'தமிழக வாக்காளர்களாகும் பீகார் மக்கள்' முதல் 'தேசிய விருதுகள்' வரை - 01.08.2025 முக்கிய செய்திகள்!

சௌதி அரேபியாவில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் ராட்டினம் விழுந்ததில் 23 பேர் காயமடைந்தனர்.கேரளா பள்ளிகளில் ஒரு மாத விடுமுறையை வெயில் காலத்துக்கு பதில் மழைக் காலத்தில் அளிப்பது குறித்து மக்களிடம் கருத்த... மேலும் பார்க்க

"ஓ.பி.எஸ், முதல்வரை மரியாதை நிமித்தமாக தான் சந்தித்திருப்பார்" - சொல்கிறார் செல்லூர் ராஜூ

மதுரை விளாங்குடியில் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசினார். "அதிமுக-பாஜக கூட்டணியில் இருந்து ஓ.பி.எஸ் வெளியேறிவிட்டாரே" என்ற கேள்விக்கு,"அவர் அதிமுக கூட்... மேலும் பார்க்க

"இந்திய பொருளாதாரம் இறந்துவிட்டது" - ட்ரம்ப் கருத்தை ஏற்ற ராகுல் காந்தி; முரண்பட்டாரா சசி தரூர்?

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவை "இறந்த பொருளாதரம்" என விமர்சித்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் கேள்வி எழுப்பப்பட்டபோது எதிர்க்கட்சித் தலைவர் ரா... மேலும் பார்க்க

Trump: பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்கும் அமெரிக்கா; பாக்-இல் எண்ணெய் வளமா? ட்ரம்ப் கூறுவது உண்மையா?

'பாகிஸ்தானுடன் இப்போது தான் ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம். அதன் படி, பாகிஸ்தானில் எண்ணெய் வளங்களை மேம்படுத்துவதில், அமெரிக்கா பாகிஸ்தானுக்கு உதவ உள்ளது.இரு நாடுகளின் இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள ஒரு எண... மேலும் பார்க்க

ட்ரம்ப் - பாகிஸ்தான் இடையே அதிகரிக்கும் நெருக்கம்; குறைந்த வரி விகிதம்! - இதற்கான 4 காரணங்கள் என்ன?

இந்தியாவுக்கு 25 சதவிகித வரிப் போட்டு தள்ளியிருக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பாகிஸ்தானுக்கு 19 சதவிகித வரியைத் தான் போட்டுள்ளார். மேலும், ட்ரம்பிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள நட்பு வலுத்து வரு... மேலும் பார்க்க

"கவின் தாயார் கண்ணீருக்கு பதில் இருக்கிறதா? திமுக ஆட்சிக்கு வந்து 60 ஆண்டுகள் ஆகியும்..." - சீமான்

திருநெல்வேலியில் ஜூலை 27-ம் தேதி கவின் என்பவர் சுர்ஜித் என்பவரால் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார்.இதில், கொலையாளி சுர்ஜித் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரின் தாய் தந்தையான காவல்துறை அதிகாரிகள் சரவணன்,... மேலும் பார்க்க