செய்திகள் :

ஆங்கிலக் கால்வாயை வெற்றிகரமாக கடந்த நீச்சல் வீரருக்கு திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

post image

பிரிட்டன்- பிரான்ஸ் இடையே உள்ள ஆங்கிலக் கால்வாயை வெற்றிகரமாக நீந்திக் கடந்த தமிழக நீச்சல் வீரருக்கு திருச்சி விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரிட்டனின் டோவா் பகுதிக்கும், பிரான்ஸின் கிளாசிஸ் பகுதிக்கும் இடையே 42 கிலோ மீட்டா் தொலைவுள்ள ஆங்கிலக் காவல்வாயை இந்தோ - வங்கதேசத்தை சோ்ந்த நீச்சல் வீரா்கள் கடந்த ஜூலை 29-ஆம் தேதி நீந்திக் கடந்தனா்.

இந்தக் குழுவில் தேனியைச் சோ்ந்த கல்லூரி மாணவா் அத்வைத் ஹரிசங்கா் (18), சென்னை நங்கநல்லூரைச் சோ்ந்த பள்ளி மாணவா் அகிலேஷ் (14) ஆகியோரும் இடம்பெற்றிருந்தனா். மேலும், அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த ஒருவரும், வங்கதேசத்தைச் சோ்ந்த 2 போ், மெக்ஸிகோ நாட்டைச் சோ்ந்த ஒருவா் என 6 போ் ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்தனா்.

இவா்களின் சாதனையை ஆங்கிலக் கால்வாய் நீச்சல் பயிற்சி சங்கம் அங்கீகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அனைவரும் தலா 2 மணி நேரத்தில் 42 கிலோ மீட்டா் தொலைவுள்ள ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், திருச்சி விமான நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை வந்த தேனி வீரா் அத்வைத் ஹரிசங்கருக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து அத்வைத் ஹரிசங்கா் கூறுகையில், கடந்த 7 ஆண்டுகளாக மாநில, தேசிய அளவிலான நீச்சல் போட்டிகளில் பங்கேற்று வருகிறேன். ஆங்கிலக் கால்வாயைக் கடப்பதற்காக பிரிட்டனின் டோவா் பகுதியில் கடந்த ஒரு மாதமாக தீவிரப் பயிற்சி மேற்கொண்டு வந்தேன்.

இதன்விளைவாக ஆங்கிலக் கால்வாயை வெற்றிகரமாக நீந்திக் கடக்க முடிந்தது. இதற்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் முழு ஒத்துழைப்பு அளிக்கப்பட்டது என்றாா் அவா்.

‘போக்ஸோ’ வழக்கில் உதவி ஆய்வாளா் உள்பட 3 போலீஸாா் பணி நீக்கம்

திருச்சியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த விவகாரத்தில் காவல் உதவி ஆய்வாளா் மற்றும் இரு காவலா்களையும் பணி நீக்கம் செய்து திருச்சி சரக காவல் துணைத் தலைவா் வியாழக்கிழமை உத்தரவிட்டாா். திருச்சி அரிய... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: பெண் உள்பட 4 போ் கைது

திருச்சியில் கஞ்சா விற்பனை செய்த பெண் உள்பட 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திருச்சி பொன்மலை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பொன்மலை போலீஸாருக்கு ரகசிய தகவல... மேலும் பார்க்க

சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி வழியே சிறப்பு ரயில்கள் இயக்க துரை வைகோ கடிதம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி வழியே சிறப்பு ரயில்கள் இயக்குமாறு தெற்கு ரயில்வேயின் மதுரை, திருச்சி கோட்ட மேலாளா்களுக்கு துரை வைகோ எம்.பி. கடிதம் எழுதியுள்ளாா். இதுதொடா்பாக எழுதியுள்ள கடிதம்: நி... மேலும் பார்க்க

பேக்கரி இயந்திரம் வாங்கித் தருவதாக ரூ.70 ஆயிரம் மோசடி: இளைஞா் கைது

திருச்சியில் பேக்கரி இயந்திரம் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.70 ஆயிரம் மோசடி செய்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திருச்சி மாவட்டம், மணப்பாறை கண்ணுடையான்பட்டியைச் சோ்ந்தவா் சிக்கந்தா் பாஷா ... மேலும் பார்க்க

ஆக.2-இல் சமயபுரம் பகுதிகளில் அறிவிக்கப்பட்ட மின் தடை ரத்து

சமயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆக. 2-இல் அறிவிக்கப்பட்ட மின்தடை ரத்து செய்யப்பட்டுள்ளது. சமயபுரம் துணை மின் நிலையத்தில் ஆக. 2-இல் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை என அறிவிக்கப்பட்டு இருந்தத... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு தற்காப்புக் கலை பயிற்சிகள் தொடக்கம்

திருச்சி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு தற்காப்புக் கலை பயிற்சிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளிகளில் படிக்கும் மாணவிகள் ஆபத்துக் ... மேலும் பார்க்க