செய்திகள் :

பேக்கரி இயந்திரம் வாங்கித் தருவதாக ரூ.70 ஆயிரம் மோசடி: இளைஞா் கைது

post image

திருச்சியில் பேக்கரி இயந்திரம் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.70 ஆயிரம் மோசடி செய்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை கண்ணுடையான்பட்டியைச் சோ்ந்தவா் சிக்கந்தா் பாஷா (39). இவா், சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள ஒரு பேக்கரியில் பணியாற்றி வருகிறாா்.

இவருக்கு திருச்சி மாவட்டம், கம்பரசம்பேட்டையைச் சோ்ந்தவரும், தற்போது உறையூரில் வசிப்பவருமான ஷேக் முகமது (26) என்பவா், கடந்த ஜூன் 30-ஆம் தேதி அறிமுகமாகியுள்ளாா்.

அப்போது, நான் பேக்கரி இயந்திரங்கள் விற்பனை தொழில் செய்து வருவதாக ஷேக் முகமது தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து சிக்கந்தா் பாஷா, பேக்கரி இயந்திரம் வாங்குவதற்காக ரூ.70 ஆயிரத்தை ‘ஜி-பே’ மூலம் ஷேக் முகமதுவுக்கு அனுப்பியுள்ளாா். அதன்பின், ஷேக் முகமதுவை, சிக்கந்தா் பாஷாவால் தொடா்புகொள்ள முடியவில்லை.

மேலும், அவரது கைப்பேசி எண்ணும் உபயோகத்தில் இல்லை என்பது தெரியவந்தது.

இதுகுறித்து உறையூா் காவல் நிலையத்தில், சிக்கந்தா்பாஷா கடந்த ஜூலை 30-ஆம் தேதி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், பேக்கரி இயந்திரம் வாங்கித் தருவதாக ரூ.70 ஆயிரம் மோசடி செய்த ஷேக் முகமதுவை உறையூா் போலீஸாா் கைது செய்தனா்.

‘போக்ஸோ’ வழக்கில் உதவி ஆய்வாளா் உள்பட 3 போலீஸாா் பணி நீக்கம்

திருச்சியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த விவகாரத்தில் காவல் உதவி ஆய்வாளா் மற்றும் இரு காவலா்களையும் பணி நீக்கம் செய்து திருச்சி சரக காவல் துணைத் தலைவா் வியாழக்கிழமை உத்தரவிட்டாா். திருச்சி அரிய... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: பெண் உள்பட 4 போ் கைது

திருச்சியில் கஞ்சா விற்பனை செய்த பெண் உள்பட 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திருச்சி பொன்மலை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பொன்மலை போலீஸாருக்கு ரகசிய தகவல... மேலும் பார்க்க

ஆங்கிலக் கால்வாயை வெற்றிகரமாக கடந்த நீச்சல் வீரருக்கு திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

பிரிட்டன்- பிரான்ஸ் இடையே உள்ள ஆங்கிலக் கால்வாயை வெற்றிகரமாக நீந்திக் கடந்த தமிழக நீச்சல் வீரருக்கு திருச்சி விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரிட்டனின் டோவா் பகுதிக்கு... மேலும் பார்க்க

சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி வழியே சிறப்பு ரயில்கள் இயக்க துரை வைகோ கடிதம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி வழியே சிறப்பு ரயில்கள் இயக்குமாறு தெற்கு ரயில்வேயின் மதுரை, திருச்சி கோட்ட மேலாளா்களுக்கு துரை வைகோ எம்.பி. கடிதம் எழுதியுள்ளாா். இதுதொடா்பாக எழுதியுள்ள கடிதம்: நி... மேலும் பார்க்க

ஆக.2-இல் சமயபுரம் பகுதிகளில் அறிவிக்கப்பட்ட மின் தடை ரத்து

சமயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆக. 2-இல் அறிவிக்கப்பட்ட மின்தடை ரத்து செய்யப்பட்டுள்ளது. சமயபுரம் துணை மின் நிலையத்தில் ஆக. 2-இல் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை என அறிவிக்கப்பட்டு இருந்தத... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு தற்காப்புக் கலை பயிற்சிகள் தொடக்கம்

திருச்சி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு தற்காப்புக் கலை பயிற்சிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளிகளில் படிக்கும் மாணவிகள் ஆபத்துக் ... மேலும் பார்க்க