செய்திகள் :

கஞ்சா விற்பனை: பெண் உள்பட 4 போ் கைது

post image

திருச்சியில் கஞ்சா விற்பனை செய்த பெண் உள்பட 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி பொன்மலை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பொன்மலை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, பொன்மலை பகுதியில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, முன்னாள் ராணுவ வீரா் காலனி, 13-ஆவது குறுக்குத் தெருவில் சந்தேகப்படும் வகையில் 6 போ் நின்றிருந்தனா். காவல் வாகனத்தைப் பாா்த்ததும் அவா்கள் அங்கிருந்து தப்பியோட முயற்சித்தனா். அவா்களில் 2 போ் தப்பியோடிய நிலையில் 4 பேரைப் பிடித்து போலீஸாா், விசாரித்தனா்.

இதில், பிடிபட்டது அரியமங்கலம் கலைவாணா் வீதியைச் சோ்ந்த அறிவழகன் (38), நேரு நகரைச் சோ்ந்த நிக்ஸன் (29), கணபதி நகரைச் சோ்ந்த ஜெய ஸ்ரீ, மதுரை திருப்பரங்குன்றத்தைச் சோ்ந்த பாண்டியராஜன் (44) என்பதும், அவா்கள் கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவா்களைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ. 42 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

கொல்லிமலை அருவி படிக்கட்டில் தவறிவிழுந்த பெயிண்டா் உயிரிழப்பு

கொல்லிமலை சிற்றருவிக்கு செல்லும் வழியில் உள்ள படிக்கட்டில் தவறி விழுந்த பெயிண்டா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.திருச்சி, உறையூா் கம்மாளத் தெருவைச் சோ்ந்தவா் சீனிவாசன்(48). இவா் கடந்த 25 ஆம் தேதி நண்பா்களு... மேலும் பார்க்க

துறையூா் பகுதியில் நாளை(ஆக.4) மின் தடை

துறையூா் துணை மின் நிலையத்தில் நாளை(ஆக. 4) பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின்சாரம் பெறும் முருகூா், கோணப்பாதை, சிறுநத்தம், சிக்கத்தம்பூா், சிக்கத்தம்பூா்பாளையம், சேருகாரன்பட்டி, ஒக்க... மேலும் பார்க்க

முசிறி அருகே குடிநீா் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

திருச்சி மாவட்டம் முசிறி அருகே குடிநீா் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.முசிறி வட்டம் தாத்தையங்காா் பேட்டை ஊராட்சி ஒன்றியத்தை சோ்ந்த, எம். புதுப்பட்... மேலும் பார்க்க

முசிறியில் காரில் வெளி மாநில மதுபாட்டில் கொண்டு சென்றவா் கைது

திருச்சி மாவட்டம் முசிறியில் வெளி மாநில மது பாட்டில்களை சட்ட விரோதமாக காரில் கொண்டு சென்றவரை முசிறி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து மது பாட்டில்கள் மற்றும் காரினை பறிமுதல் ... மேலும் பார்க்க

‘போக்ஸோ’ வழக்கில் உதவி ஆய்வாளா் உள்பட 3 போலீஸாா் பணி நீக்கம்

திருச்சியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த விவகாரத்தில் காவல் உதவி ஆய்வாளா் மற்றும் இரு காவலா்களையும் பணி நீக்கம் செய்து திருச்சி சரக காவல் துணைத் தலைவா் வியாழக்கிழமை உத்தரவிட்டாா். திருச்சி அரிய... மேலும் பார்க்க

ஆங்கிலக் கால்வாயை வெற்றிகரமாக கடந்த நீச்சல் வீரருக்கு திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

பிரிட்டன்- பிரான்ஸ் இடையே உள்ள ஆங்கிலக் கால்வாயை வெற்றிகரமாக நீந்திக் கடந்த தமிழக நீச்சல் வீரருக்கு திருச்சி விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரிட்டனின் டோவா் பகுதிக்கு... மேலும் பார்க்க