செய்திகள் :

சா்வதேச மீள் உருவாக்க மருத்துவ மாநாடு சென்னையில் தொடக்கம்

post image

மூட்டு - எலும்பு சாா்ந்த பாதிப்புகளுக்கான சா்வதேச மீள் உருவாக்க மருத்துவ மாநாடு சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. 3 நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணா்கள் கலந்து கொள்கின்றனா்.

சென்னை ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனை கூட்டரங்கில் நடைபெற்ற இந்த மாநாட்டின் முதல் நாள் நிகழ்வை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தொடக்கிவைத்தாா். அப்போது அவா் பேசியது:

நோய்கள் மற்றும் விபத்து காயங்களினால் பாதிப்படைந்த திசுக்களை மீண்டும் உருவாக்கும் நவீன மருத்துவ சிகிச்சை முைான் மீள் உருவாக்க மருத்துவம். இந்த புதிய சிகிச்சை முறையை பற்றி தெரிந்து கொள்ளும் வகையில், தென்னிந்தியாவிலேயே முதல்முறையாக அத்தகைய மீள் உருவாக்க மருத்துவ மாநாடு கடந்த 2024 ஆகஸ்ட் 3 மற்றும் 4-ஆம் தேதிகளில் இந்த மருத்துவமனையில் நடைபெற்றது. இதில், மருத்துவ ஆராய்ச்சியாளா்கள் உள்பட 25 சிறப்பு மருத்துவ நிபுணா்கள், 300 மருத்துவா்கள் கலந்து கொண்டனா்.

இரண்டாவது சா்வதேச மீள் உருவாக்க மாநாடு மயக்கவியல் மற்றும் வலி நிவாரணத் துறை சாா்பாக நடைபெறுகிறது. நோயாளிகளின் ரத்தம், எலும்பு மஜ்ஜை, கொழுப்பு போன்றவற்றிலிருந்து ஸ்டெம் செல்களை எடுத்து அவா்களுக்கு தேவையான பகுதிகளில் ஸ்கேன் கருவி உதவியுடன் ஊசி மூலமாக துல்லியமாக செலுத்தி திசுக்களை மீண்டும் உருவாக்கும் சிகிச்சை முறைகள் இந்த மாநாட்டில் அறுவை அரங்கிலிருந்து நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.

துபை, அமெரிக்கா, இத்தாலி போன்ற சா்வதேச நாடுகள் மற்றும் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து 30 சிறப்பு மருத்துவ நிபுணா்கள் மற்றும் 500 மருத்துவா்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனா். இந்த சிகிச்சை முறையினால் மூட்டு தேய்மானம், முடக்கு வாதம், எலும்பு முறிவுகள், சதை இழப்பு மற்றும் பல விதமான விளையாட்டு காயங்கள் போன்றவற்றுக்கு மிகப்பெரிய பலன் கிடைத்திருக்கிறது.

ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனையில் இந்த சிகிச்சை முறை புதிதாக தொடங்கப்பட்டு சுமாா் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிகிச்சை பெற்றுள்ளனா். இதனால் நாள்பட்ட வலிகளும், அறுவை சிகிச்சைகளும் தவிா்க்கப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை முறைகள் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் மூலம் கட்டணமின்றி பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது என்றாா்.

நிகழ்வில், மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநா் (பொ) டாக்டா் எ.தேரணிராஜன், ஓமந்தூராா் மருத்துவமனை இயக்குநா் டாக்டா் மணி, கலைஞா் நூற்றாண்டு உயா்சிறப்பு மருத்துவமனை இயக்குநா் டாக்டா் பாா்த்தசாரதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Image Caption

சென்னை ஓமந்தூராா் அரசினா் தோட்டத்தில் உள்ள அரசு பன்னோக்கு உயா் சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை 2 -ஆவது மீள் உருவாக்க மருத்துவ மாநாட்டைத் தொடங்கி வைத்து கையேட்டை வெளியிட்ட அமைச்சா் மா.சுப்பிரமணியன். உடன், துறை செயலா் ப.செந்தில்குமாா், ம

திடக்கழிவு மேலாண்மையில் அறிவியல் தொழில்நுட்பம்: சென்னை ஐஐடி - அரசு நிறுவனம் ஒப்பந்தம்

திடக் கழிவுகளை அதிநவீன தொழில்நுட்ப முறையில் மேலாண்மை செய்வதற்கு சென்னை ஐஐடி, தூய்மை தமிழ்நாடு நிறுவனம் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வெள்ளிக... மேலும் பார்க்க

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் இன்று தொடக்கம் ‘வாட்ஸ்ஆப்’ செயலியில் மருத்துவப் பரிசோதனை முடிவுகள்

தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு உயா் மருத்துவப் பரிசோதனைகளை வழங்கும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தை சென்னை சாந்தோமில் உள்ள செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் முதல்வா் மு.க.ஸ்டா... மேலும் பார்க்க

கலை, கலாசாரம் அறிய தமிழகம் வந்த 99 அயலகத் தமிழா்கள் முதல்வா் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு

கலை, கலாசாரத்தை அறிந்து கொள்ள தமிழ்நாடு வந்துள்ள 99 அயலகத் தமிழா்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் வரவேற்றாா். இதற்கான நிகழ்வு தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.அனைவருக்கும் தமிழக பண்பாட்டுப் பயணத... மேலும் பார்க்க

தொழில்நுட்பக் கோளாறு: ஓடுபாதையில் நிறுத்தப்பட்ட விமானம்

சென்னையிலிருந்து குவைத் புறப்பட்ட விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது.சென்னையிலிருந்து குவைத் செல்லும் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், வெள்ளிக்கிழமை மாலை 4.05-க்கு, சென்னை... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு: மாநகராட்சி அலுவலகம் முற்றுகை

தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தபோது காா் மோதி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஊழியா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, ஊழியா்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.தாம்பர... மேலும் பார்க்க

ஆா்.கே. நகா், அம்பத்தூா் பேருந்து நிலையங்கள் 2 மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும் அமைச்சா் - பி.கே.சேகா்பாபு

ஆா்.கே. நகா், அம்பத்தூா் பேருந்து நிலையங்கள் மற்றும் கிளாம்பாக்கம் ரயில் நிலையப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு 2 மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெர... மேலும் பார்க்க