செய்திகள் :

வருமான வரிக் கணக்கு தாக்கல்: கால அவகாசம் நீட்டிக்கப்படலாம்! காரணம் இதுதான்!!

post image

தனிநபர் வருமான வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில், அதற்கு இன்னமும் 45 நாள்களே இருக்கும் நிலையில், கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வருமான வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்வதற்கான சில படிவங்கள் இன்னமும் ஆன்லைனில் வெளியிடப்படாத நிலையில், வெறும் 45 நாள்களே இருப்பதால் வரி செலுத்துவோரின் நலன் கருதி கால அவகாசம் வழங்கப்படும் என்றே நிதித்துறை சார்ந்த ஆலோசகர்கள் கூறுகிறார்கள்.

வருமான வரித் தாக்கல் செய்வதற்கான படிவம் 5, 6, 7 போன்றவை இன்னமும் ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் வெளியாகவில்லை.

வழக்கமாக, வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஜூலை 31ஆம் தேதியுடன் நிறைவடையும். இந்த ஆண்டு, கடந்த மே மாத இறுதியில், வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வற்கான கால அவகாசத்தை செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி வரை நீட்டித்து வருமான வரித்துறை அறிவித்திருந்தது.

இந்த முறை, ஐடிஆர் படிவங்கள் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, எளிமையாக்கப்படும் என்றும், வெளிப்படைத்தன்மையுடன் அனைத்தும் நடக்கும் என்றும் அறிவித்திருந்தது. இந்த திருத்தங்களுக்கு ஏற்ப கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது.

ஆனால், இன்னமும் 45 நாள்களே இருக்கும் நிலையில், உரிய படிவங்கள் ஆன்லைனில் வெளியாகததால், வரி செலுத்துவோர் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். எனவே, கால அவகாசம் நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆரம்பம் முதலே தாமதம்

இந்த ஆண்டு, வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வதற்கான நடைமுறையை தொடங்கியதே தாமதமாகத்தான். மே இறுதியில்தான் ஐடிஆர் படிவங்கள் வெளியானது. அதில் சில வேறுபாடுகளும் இருந்தன. எக்ஸெல் அடிப்படையாகக் கொண்ட படிவம் பொறுமையாக வெளியிடப்பட்டது. ஆனால், இதுவரை ஐடிஆர்-3 படிவம் வெளியாகவில்லை. அதுபோலத்தான் ஐடிஆர் 5, 6, 7 படிவங்களும் இன்னும் வெளியிடப்படவில்லை. எனவே கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாகவே கருதப்படுகிறது.

While the deadline for filing personal income tax returns has been extended to September 15th, with only 45 days left, it is expected that the deadline may be extended further.

இதையும் படிக்க.. ‘செத்த பொருளாதாரம்’.. கொன்றதே மோடிதான்! - ராகுல் காட்டம்

வாக்குகளைத் தேர்தல் ஆணையம் திருடுவது தேசத்துரோகம்; 100% ஆதாரங்கள் உள்ளன! - ராகுல்

மக்களின் வாக்குகளை தேர்தல் ஆணையம் திருடுகிறது என்பதற்கான 100% ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலமாக ப... மேலும் பார்க்க

நுரையீரல் புற்றுநோய் நாள் இன்று! தில்லியில் இருந்தால் சிகரெட்டே பிடிக்க வேண்டாம்!!

புது தில்லி: நுரையீரல் புற்றுநோய் நாள் ஆகஸ்ட் ஒன்றாம் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இன்றைய நாளில் நுரையீரல் புற்றுநோய் வராமல் தற்காத்துக் கொள்வதற்கான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படும்.இந்த நாளில், ஆசிய... மேலும் பார்க்க

செப். 9 குடியரசு துணைத் தலைவர் தேர்தல்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.நாட்டின் 14-ஆவது குடியரசு துணைத் தலைவரான ஜகதீப் தன்கா் ஜூலை 2... மேலும் பார்க்க

எதிர்க்கட்சிகள் அமளி: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு!

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்ற மாநிலங்களவை இன்று(வெள்ளிக்கிழமை) நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த ஜூலை 21-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.... மேலும் பார்க்க

செய்யறிவால் பறிபோகும் வேலை வாய்ப்புகளின் பட்டியல்! மைக்ரோசாஃப்ட் ஆய்வு

செய்யறிவு என்பது, ஏதோ ஓரிடத்தில் இருந்துகொண்டு நமக்காக வேலை செய்யும், நம் வேலையை எளிதாக்கும் என்று மனிதர்கள் நினைத்திருந்த நிலையில், நம் வேலையையே அழித்தொழித்துவிடும் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்ட... மேலும் பார்க்க

அனில் அம்பானி நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்!

தொழிலதிபர் அனில் அம்பானி நேரில் ஆஜராவதற்கு அழைப்பு விடுத்து அமலாக்கத்துறை வெள்ளிக்கிழமை சம்மன் அனுப்பியுள்ளது.யெஸ் வங்கியிடமிருந்து கடன் பெற்று ரூ.3,000 கோடி அளவுக்கு மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும்... மேலும் பார்க்க