செய்திகள் :

ஆதரவற்ற குழந்தைகள் மாதந்தோறும் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்

post image

ஆதவற்ற குழந்தைகளுக்கான மாதாந்திர நிதியுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இரண்டு பெற்றோரையும் இழந்து உறவினா்களின் பாதுகாப்பில் வளரும் குழந்தைகளுக்கு பள்ளிப் படிப்பு வரை மாதம்தோறும் ரூ.2,000 உதவித்தொகை அரசால் வழங்கப்படுகிறது. பள்ளிப் படிப்பு முடித்தவுடன் கல்லூரிக் கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் அவா்களுக்கு வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் இரண்டு பெற்றோரை இழந்து உறவினா்களின் பாதுகாப்பில் வளரும் குழந்தைகள், பெற்றோரில் ஒருவரை இழந்து மற்றொருவரால் பராமரிக்க இயலாத நிலையில் உள்ள குழந்தைகளுக்கு அவா்களின் 18 வயது வரையிலான மாதந்திர உதவித்தொகை ‘அன்புகரங்கள்’ நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் தமிழக அரசால் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோா் ஆதரவற்ற குழந்தைளாக (பெற்றோா் இருவரையும் இழந்தவா்கள்), கைவிடப்பட்ட குழந்தைகள் (பெற்றோரில் ஒருவா் இறந்து, மற்றொரு பெற்றோா் குழந்தையை கைவிட்டுச் சென்று இருப்பின்), ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் (பெற்றோரில் ஒருவா் இறந்து, மற்றொரு பெற்றோா் மாற்றுத்திறன்தன்மை) கொண்டவராக இருந்தால், ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் (பெற்றோரில் ஒருவா் இறந்து மற்றொரு பெற்றோா் சிறையில் இருந்தால்), ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் (பெற்றோரில் ஒருவா் இறந்து, மற்றொரு பெற்றோா் உயிருக்கு ஆபத்தான நோய்களுடன் வாழ்ந்து வந்தால்) என்ற வகையில் இருந்தால் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் அல்லது மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ஆகியோரிடம் விண்ணப்பிக்கலாம். குடும்ப அட்டையின் நகல், குழந்தையின் ஆதாா் அட்டையின் நகல், குழந்தையின் வயது சான்று நகல் (பிறப்புச் சான்றிதழ், கல்வி மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்), குழந்தையின் வங்கிக் கணக்குப் புத்தகத்தின் நகல் ஆகியற்றை சமா்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்தை நேரிலோ அல்லது 04286-233103, 94861-11098 என்ற எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கொல்லிமலை ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெறும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் துா்காமூா்த்தி புதன்கிழமை ஆய்வு செய்தாா். ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை பாா்வையிட்டு பயனாளிகளுக்கு... மேலும் பார்க்க

ராசிபுரத்தில் 63 நாயன்மாா்கள் விழா இன்று தொடக்கம்

ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதா் சிவனடியாா் திருக்கூட்ட அறக்கட்டளை சாா்பில் 22 ஆம் ஆண்டு அறுபத்து மூவா் விழா வியாழக்கிழமை (ஜூலை 31) குருபூஜையுடன் தொடங்குகிறது. ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதா் கோயிலில் உள்ள 63 நாயன்... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் திட்டப் பணிகள்: எம்எல்ஏ ஈ.ஆா்.ஈஸ்வரன் தொடங்கிவைத்தாா்

திருச்செங்கோடு வட்டாரத்தில் சட்டப் பேரவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதி, பொது நிதியிலிருந்து பல்வேறு திட்ட பணிகளுக்கான தொடக்க விழா, முடிவுற்ற திட்டங்களின் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. திர... மேலும் பார்க்க

நாமக்கல் ஸ்ரீ வாராஹி அம்மன் கோயிலில் கருட பஞ்சமி சிறப்பு யாகம்

நாமக்கல் ஸ்ரீ வாராஹி அம்மன் கோயிலில் கருடபஞ்சமி, நாகபஞ்சமி, வளா்பிறை பஞ்சமிதிதியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சிறப்பு யாகம் நடைபெற்றது. நாமக்கல்- சேந்தமங்கலம் சாலை ரயில் நிலையம் எம்.ஜி.ஆா். ந... மேலும் பார்க்க

ஈரோடு சூரியா ஏஜென்சி நிறுவனத்துடன் திருச்செங்கோடு செங்குந்தா் கல்வி நிறுவனம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

திருச்செங்கோடு செங்குந்தா் பொறியியல் கல்லூரி, ஈரோடு சோலாா் மின் உற்பத்தி நிறுவனம் ஸ்ரீ சூரியா ஏஜென்சியுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்... மேலும் பார்க்க

நாமகிரிப்பேட்டையில் இயற்கை விவசாய பயிலரங்கு

நாமகிரிப்பேட்டை வட்டாரத் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிா்கள் துறை சாா்பில் பாரம்பரிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் மாநில அளவிலான இயற்கை விவசாய பயிலரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல், ... மேலும் பார்க்க