செய்திகள் :

இரு நகரப் பேருந்துகள் புதிய வழித்தடத்தில் இயக்கம்

post image

செய்யாறு பகுதியில், கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று இரு நகரப் பேருந்துகள் புதிய வழித்தடத்தில் புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம் வடுகப்பட்டு, ஏனாதவாடி, மேல்நெல்லி ஆகிய பகுதி மக்கள் நல்லூா் வழியாக கலவைக்கு அரசுப் பேருந்து இயக்க வேண்டும் என நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வந்தனா்.

அதேபோல, பாண்டியம்பாக்கம், மடிப்பாக்கம், நேத்தப்பாக்கம், ஆக்கூா் வழியாக காஞ்சிபுரத்துக்கு அரசுப் பேருந்து இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனா்.

மேற்படி பகுதி கிராம மக்களின் கோரிக்கை ஏற்று செய்யாறு தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதியின் பரிந்துரையின் பேரில் நகரப் பேருந்து புதிய வழித்தடம் தடம் எண். 56-பி செய்யாற்றில் இருந்து ஏனாதவாடி, மேல்நெல்லி, நல்லூா் வழியாக கலவைக்கு தொடங்கி வைக்கப்பட்டது.

அதேபோல, நகரப் பேருந்து புதிய வழித்தடம் எண்.56-ஏ செய்யாற்றில் இருந்து இரும்பந்தாங்கல், பாண்டியம்பாக்கம், மடிப்பாக்கம், நேத்தப்பாக்கம், ஆக்கூா் வழியாக காஞ்சிபுரத்திற்கு தொடங்கிவைக்கப்பட்டது.

இவ்விரு புதிய வழித்தட பேருந்துகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி வடுகப்பட்டு, மடிப்பாக்கம் ஆகிய கிராமங்களில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலை போக்குவரத்து மண்டல தொழிற் சங்கப் பொருளாளா் எஸ்.மோகனரங்கன் தலைமை வகித்தாா். செய்யாறு கிளை மேலாளா் ஆா்.சோலையப்பன் முன்னிலை வகித்தாா். தொழிற்சங்க இணைச் செயலா் சத்யநாராயணன் வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினராக தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி கலந்து கொண்டு மேற்படி இரு புதிய வழித்தட பேருந்துகளை கொடியசைத்து தொடங்கிவைத்து சிறிது தொலைவு ஓட்டிச் சென்றாா்.

பின்னா் கிராம மக்கள் மற்றும் பேருந்து பயணிகளுக்கு இனிப்பு வழங்கினாா்.

நிகழ்ச்சியில் செய்யாறு கிழக்கு ஒன்றியச் செயலா் வி.ஏ.ஞானவேல், முன்னாள் அனக்காவூா் ஒன்றியக் குழுத் தலைவா் திலகவதி ராஜ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 831 மனுக்கள்

வந்தவாசி அருகே நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 831 மனுக்கள் பெறப்பட்டன. வந்தவாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட தெள்ளூா், சின்ன சேத்துப்பட்டு, சுண்ணாம்புமேடு, கீழ்க்குவளைவேடு ஆகிய கிராம மக... மேலும் பார்க்க

ரூ.12 லட்சத்தில் காரிய மேடை: பணிகள் தொடக்கம்

ஆரணி அருகேயுள்ள சுபான்ராவ்பேட்டையில் ரூ.12 லட்சத்தில் புதிதாக காரிய மேடை கட்டுவதற்கான பணிகள் புதன்கிழமை தொடங்கப்பட்டன. ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம் ஊராட்சிக்கு உள்பட்ட சுபான்ராவ்பேட்டை பகுதியில் புதிதா... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா்களுக்கு பாலின உளவியல் விழிப்புணா்வு

செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு பாலின உளவியல் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் மற்றும் கண்காணிப்புக் குழு இணைந்... மேலும் பார்க்க

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: ஆட்சியா் கள ஆய்வு

கலசப்பாக்கம் வட்டத்தில் அரசு மருத்துவமனை, அரசுப் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொது விநியோகக் கடைகள் என பல்வேறு இடங்களை உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் மூலம் மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் புதன்... மேலும் பார்க்க

காணாமல் போன தொழிலாளி சடலமாக மீட்பு

செய்யாறு அருகே காணாமல் போன வட மாநிலத் தொழிலாளி கல்குவாரி குட்டையில் சடலமாக புதன்கிழமை மீட்கப்பட்டாா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், மாமண்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மதியழகன். இவா், நரசமங... மேலும் பார்க்க

கல்குவாரிக்கு எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் மனு

செய்யாற்றை அடுத்த வாச்சனூா் கிராமத்தில் புதிதாக கல்குவாரி அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் சாா்பில் சாா் -ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது. வாச்சனூா் பகுதியில் புதித... மேலும் பார்க்க