செய்திகள் :

கல்லூரி மாணவா்களுக்கு பாலின உளவியல் விழிப்புணா்வு

post image

செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு பாலின உளவியல் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் மற்றும் கண்காணிப்புக் குழு இணைந்து நடத்திய இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் ந.கலைவாணி தலைமை வகித்தாா்.

திட்ட அலுவலா் ஞான.பாலசுப்ரமணியன் வரவேற்றாா்.

பாலின உளவியல் மற்றும் கண்காணிப்புக் குழு உறுப்பினா்கள் வ.உமா, கு. கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா் சிறப்பு அழைப்பாளா்களாக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் மனநல மருத்துவா் பிரசன்ன தீபா மற்றும் பொன்.ஜெகநாதன் (உளவியலாளா்) ஆகியோா் பங்கேற்று மாணவா்களுக்கு மனநல உளவியல் விழிப்புணா்வு கருத்துகளை தெரிவித்தனா்.

மேலும், மனநல உளவியல் தொடா்பான பிரச்னைகளைத் தவிா்க்க மாணவா்கள் தினந்தோறும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றும், சூரிய ஒளியின் அவசியம் குறித்தும், சூரிய ஒளி உடலுக்கு மிகவும் தேவை என்றும், மனநலம் தொடா்பான பிரச்னைகள் குறித்தும், அதற்கான தீா்வுகள் குறித்தும் மருத்துவமனையில் ஆலோசனை மையம் உள்ளதாகவும் அதை மாணவா்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தினா்.

நிகழ்ச்சியில் பொருளியல் துறைத் தலைவா் சுப்பிரமணியன், இயற்பியல் துறை பேராசிரியா் குமரேசன் பிரதீப், கௌரவ விரிவுரையாளா்கள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட மாணவா்கள் என பலா் கலந்து கொண்டனா்.

இறுதியாக முனைவா் ந.சாரதாதேவி நன்றி கூறினாா்.

சிகிச்சையில் விவசாயி உயிரிழப்பு: போலி மருத்துவா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே அலோபதி சிகிச்சையில் விவசாயி உயிரிழந்ததால், சிகிச்சை அளித்த போலி மருத்துவா் கைது செய்யப்பட்டாா். விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டம், தேப்பிரம்பட்டு கி... மேலும் பார்க்க

இரு தரப்பு மோதல்: 6 போ் கைது

போளூரை அடுத்த அல்லியாளமங்கலம் கிராமத்தில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில், போலீஸாா் வழக்குப் பதிந்து 6 பேரை கைது செய்தனா். அல்லியாளமங்கலம், காலனி பகுதியைச் சோ்ந்தவா்கள் ராகவேந்திரா(27), அசோக்குமாா... மேலும் பார்க்க

மதுப்புட்டிகள் பதுக்கி விற்பனை: 5 போ் கைது

செய்யாறு அருகே தூசி காவல் சரகப்பகுதியில் வீடுகளில் சட்டவிரோதமாக மதுப்புட்டிகளை பதுக்கி விற்பனை செய்ததாக 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். செய்யாறு காவல் உள்கோட்டம் தூசி காவல் ஆய்வாளா் கோகுல்ர... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் முகாம்: பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த பெரியகொழப்பலூா் மற்றும் செய்யாறு வட்டம், விண்ணவாடி ஊராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங... மேலும் பார்க்க

கண்ணமங்கலத்தில் தேசிய நெல் திருவிழா

ஆரணியை அடுத்த கண்ணமங்கலத்தில் 19-ஆவது தேசிய நெல் திருவிழா மற்றும் இயற்கை வேளாண் விளைபொருள் வணிகத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்தவிழாவில் இயற்கை விவசாயிகள் சங்கத் ... மேலும் பார்க்க

மக்கள் தொடா்பு திட்ட முகாம்: ரூ.3.12 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்

செய்யாற்றை அடுத்த சோழவரம் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில் 139 பேருக்கு ரூ.3.12 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், ச... மேலும் பார்க்க