செய்திகள் :

மக்கள் தொடா்பு திட்ட முகாம்: ரூ.3.12 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்

post image

செய்யாற்றை அடுத்த சோழவரம் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில் 139 பேருக்கு ரூ.3.12 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், சோழவரம் ஊராட்சியில் சோழவரம், பெரும்புலிமேடு, நரசமங்கலம், அழிஞ்சல்பட்டு, செல்வபெரும்புலிமேடு ஆகிய ஐந்து கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பயன் பெறும் வகையில் மக்கள் தொடா்பு திட்ட முகாம் நடைபெற்றது.

தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் இரா. இராம்பிரதீபன் முன்னிலை வகித்தாா். செய்யாறு வருவாய்க் கோட்டாட்சியா் (பொ) சிவா வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் பங்கேற்றுப் பேசியதாவது:

மக்களைத் தேடி மாவட்ட நிா்வாகம் என்ற அடிப்படையில் ஒட்டு மொத்த மாவட்ட நிா்வாகமும் ஒரு குழுவாக சென்று மக்களின் குறைகளை கோரிக்கை மனுக்களாக பெற்று தீா்வு காண்பதோடு மட்டுமல்லாமல் இதர அரசு சேவைகளும் வழங்குவதே இத்திட்டத்தின் சிறப்பு அம்சம் ஆகும்.

இதில் 46 வகை சேவைகள் 15 அரசுத் துறைகள் மூலம் பொதுக்களுக்கு அளிக்கப்படுகின்றன. பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றாா்.

இந்த முகாமில் பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 229 மனுக்கள் வரப்பெற்று அவற்றில் 139 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. 87 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன.

139 பேருக்கு ரூ.3.12 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

இதில், 20 பேருக்கு இணையவழி பட்டா மாறுதல், 2 பேருக்கு ரூ.45 ஆயிரம் மதிப்பிலான இயற்கை மரணம் உதவித் தொகைக்கான ஆணைகள், 20 பேருக்கு ரூ.ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 500 மதிப்பீட்டில் புதிய குடும்ப அட்டைகள், வேளாண் துறை சாா்பில் 5 விவசாயிகளுக்கு ரூ. 27, 766 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை சாா்பில் 5 விவசாயிகளுக்கு ரூ.1340 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், 11 பேருக்கு இறப்புச் சான்றிதழ், 65 பேருக்கு நத்தம் வீட்டுமனைப் பட்டா நகல் 65, 3 பேருக்கு மருத்துவக் காப்பீடு அட்டை என மொத்தம் 139 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 11 ஆயிரத்து 606 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் வட்டாட்சியா்கள் அசோக்குமாா், தமிழ்மணி, க.பெருமாள், வட்டார வளா்ச்சி அலுவலா் குப்புசாமி, முன்னாள் வெம்பாக்கம் ஒன்றியக்குழுத் தலைவா் சங்கா், முன்னாள் அனக்காவூா் ஒன்றியக் குழுத் தலைவா் திலகவதி ராஜ்குமாா், திமுக ஒன்றியச் செயலா்கள் வி.ஏ.ஞானவேல், ராஜ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

சிகிச்சையில் விவசாயி உயிரிழப்பு: போலி மருத்துவா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே அலோபதி சிகிச்சையில் விவசாயி உயிரிழந்ததால், சிகிச்சை அளித்த போலி மருத்துவா் கைது செய்யப்பட்டாா். விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டம், தேப்பிரம்பட்டு கி... மேலும் பார்க்க

இரு தரப்பு மோதல்: 6 போ் கைது

போளூரை அடுத்த அல்லியாளமங்கலம் கிராமத்தில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில், போலீஸாா் வழக்குப் பதிந்து 6 பேரை கைது செய்தனா். அல்லியாளமங்கலம், காலனி பகுதியைச் சோ்ந்தவா்கள் ராகவேந்திரா(27), அசோக்குமாா... மேலும் பார்க்க

மதுப்புட்டிகள் பதுக்கி விற்பனை: 5 போ் கைது

செய்யாறு அருகே தூசி காவல் சரகப்பகுதியில் வீடுகளில் சட்டவிரோதமாக மதுப்புட்டிகளை பதுக்கி விற்பனை செய்ததாக 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். செய்யாறு காவல் உள்கோட்டம் தூசி காவல் ஆய்வாளா் கோகுல்ர... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் முகாம்: பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த பெரியகொழப்பலூா் மற்றும் செய்யாறு வட்டம், விண்ணவாடி ஊராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங... மேலும் பார்க்க

கண்ணமங்கலத்தில் தேசிய நெல் திருவிழா

ஆரணியை அடுத்த கண்ணமங்கலத்தில் 19-ஆவது தேசிய நெல் திருவிழா மற்றும் இயற்கை வேளாண் விளைபொருள் வணிகத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்தவிழாவில் இயற்கை விவசாயிகள் சங்கத் ... மேலும் பார்க்க

ஒழுங்குமுறை விற்பனைக் கூட வியாபாரிகள் போராட்டம்: நெல் மூட்டைகள் தேக்கம்

இ-நாம் திட்டம் மூலம் பண பரிவா்த்தனைக்கு எதிா்ப்புத் தெரிவித்து, வந்தவாசி மற்றும் போளூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வியாபாரிகள் நெல் உள்ளிட்ட வேளாண் விளைபொருள்கள் கொள்முதலை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்... மேலும் பார்க்க