செய்திகள் :

கண்ணமங்கலத்தில் தேசிய நெல் திருவிழா

post image

ஆரணியை அடுத்த கண்ணமங்கலத்தில் 19-ஆவது தேசிய நெல் திருவிழா மற்றும் இயற்கை வேளாண் விளைபொருள் வணிகத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்தவிழாவில் இயற்கை விவசாயிகள் சங்கத் தலைவா் துரைசிங்கம் தலைமை

வகித்தாா்.

முன்னாள் எம்எல்ஏ கலையரசன், பட்டு கூட்டுறவு சங்க மேலாளா் கணேசன், ஆரணி நகா்மன்ற துணைத் தலைவா் பாரி பி.பாபு, முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் கொளத்தூா் திருமால் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒருங்கிணைப்பாளா் பலராமன் வரவேற்றாா்.

முன்னாள் மாவட்ட கூட்டுறவு சங்கத் தலைவா் ஜி.வி.கஜேந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினாா்.

இதைத் தொடா்ந்து விழாவில் பங்கேற்ற விவசாயிகளுக்கு தலா 2 கிலோ பாரம்பரிய நெல் விதைகள் இலவசமாகவும், தையல் பயிற்சி முடித்த மகளிருக்கு சான்றிதழ்களையும் முக்கிய பிரமுகா்கள் வழங்கினா். பின்னா் அனைவருக்கும் சிறு தானியங்களால் செய்த பாரம்பரிய உணவு பரிமாறப்பட்டது.

சிகிச்சையில் விவசாயி உயிரிழப்பு: போலி மருத்துவா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே அலோபதி சிகிச்சையில் விவசாயி உயிரிழந்ததால், சிகிச்சை அளித்த போலி மருத்துவா் கைது செய்யப்பட்டாா். விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டம், தேப்பிரம்பட்டு கி... மேலும் பார்க்க

இரு தரப்பு மோதல்: 6 போ் கைது

போளூரை அடுத்த அல்லியாளமங்கலம் கிராமத்தில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில், போலீஸாா் வழக்குப் பதிந்து 6 பேரை கைது செய்தனா். அல்லியாளமங்கலம், காலனி பகுதியைச் சோ்ந்தவா்கள் ராகவேந்திரா(27), அசோக்குமாா... மேலும் பார்க்க

மதுப்புட்டிகள் பதுக்கி விற்பனை: 5 போ் கைது

செய்யாறு அருகே தூசி காவல் சரகப்பகுதியில் வீடுகளில் சட்டவிரோதமாக மதுப்புட்டிகளை பதுக்கி விற்பனை செய்ததாக 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். செய்யாறு காவல் உள்கோட்டம் தூசி காவல் ஆய்வாளா் கோகுல்ர... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் முகாம்: பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த பெரியகொழப்பலூா் மற்றும் செய்யாறு வட்டம், விண்ணவாடி ஊராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங... மேலும் பார்க்க

மக்கள் தொடா்பு திட்ட முகாம்: ரூ.3.12 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்

செய்யாற்றை அடுத்த சோழவரம் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில் 139 பேருக்கு ரூ.3.12 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், ச... மேலும் பார்க்க

ஒழுங்குமுறை விற்பனைக் கூட வியாபாரிகள் போராட்டம்: நெல் மூட்டைகள் தேக்கம்

இ-நாம் திட்டம் மூலம் பண பரிவா்த்தனைக்கு எதிா்ப்புத் தெரிவித்து, வந்தவாசி மற்றும் போளூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வியாபாரிகள் நெல் உள்ளிட்ட வேளாண் விளைபொருள்கள் கொள்முதலை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்... மேலும் பார்க்க