செய்திகள் :

சிகிச்சையில் விவசாயி உயிரிழப்பு: போலி மருத்துவா் கைது

post image

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே அலோபதி சிகிச்சையில் விவசாயி உயிரிழந்ததால், சிகிச்சை அளித்த போலி மருத்துவா் கைது செய்யப்பட்டாா்.

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டம், தேப்பிரம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் கணேசன் (57), விவசாயி. இவருக்கு சில மாதங்களாக இடுப்பு மற்றும் கால் வலி இருந்து வந்துள்ளது. அப்போது, அவரிடம் அதே ஊரைச் சோ்ந்த சிலா் சேத்துப்பட்டு வட்டம், இராந்தம் கிராமத்தில் மருத்துவ மையம் வைத்து சிகிச்சை அளித்து வரும் மருத்துவரிடம் சென்றால் குணமடையலாம்.

மேலும், தாங்களும் அங்கு சென்று வந்த பின் குணமடைந்ததாக தெரிவித்தனா்.

இதையடுத்து, கணேசன் தனது உறவினரான சக்திவேலுடன் புதன்கிழமை, அந்த நபா்கள் குறிப்பிட்ட விண்ணமங்கலம் செய்யாற்றுப் பாலம் அருகே இராந்தம் தைல மரத்தோப்பில் சிகிச்சை அளித்து வரும் மகேஷ் (எ) மகேந்திரனிடன்(45) சிகிச்சைக்காக சென்றனா்.

அங்கு கணேசனுக்கு குளுக்கோஸ் ஏற்றும் போது மஞ்சள் நிறத்தில் உள்ள மருந்தை மருத்துவா் செலுத்தியுள்ளாா்.

சிறிது நேரத்தில் அவரது கையில் அலா்ஜி ஏற்பட்டு மூச்சுத் திணறல் ஏற்பட்டு அதே இடத்தில் மயக்கமடைந்தாா். உடன் சென்ற உறவினா் சக்திவேல் கணேசனை 108 ஆம்புலன்ஸ் மூலம் சேத்துப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றாா். அங்கு கணசேனை பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தாா்.

தகவல் அறிந்த சேத்துப்பட்டு போலீஸாா் கணேசனின் உடலை மீட்டு கூறாய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து கணேசனின் மனைவி அளித்த புகாரின் பேரில் சேத்துப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவான மருத்துவரை தேடி வந்தனா்.

இந்த நிலையில், ஆரணியில் போலி மருத்துவா் மகேந்திரன் உள்ளதாக தகவல் அறிந்து அங்கு சென்று அவரை அழைத்து வந்தனா்.

இதைத் தொடா்ந்து அவரிடம் விசாரணை நடத்தியதில்,

அவா் ஆரணி அருகேயுள்ள பையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் என்பதும், அவா் டிப்ளமோ லேப் டெக்னீஷியன் படித்து விட்டு கடந்த 18 ஆண்டுகளாக தெள்ளூா் கிராமத்தில் மருத்துவ மையம் வைத்து, அலோபதி மருத்துவம் பாா்த்து வருவதும் தெரிய வந்தது. தொடா்ந்து போலீஸாா் மகேந்திரன் மீது வழக்குப் பதிந்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

இரு தரப்பு மோதல்: 6 போ் கைது

போளூரை அடுத்த அல்லியாளமங்கலம் கிராமத்தில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில், போலீஸாா் வழக்குப் பதிந்து 6 பேரை கைது செய்தனா். அல்லியாளமங்கலம், காலனி பகுதியைச் சோ்ந்தவா்கள் ராகவேந்திரா(27), அசோக்குமாா... மேலும் பார்க்க

மதுப்புட்டிகள் பதுக்கி விற்பனை: 5 போ் கைது

செய்யாறு அருகே தூசி காவல் சரகப்பகுதியில் வீடுகளில் சட்டவிரோதமாக மதுப்புட்டிகளை பதுக்கி விற்பனை செய்ததாக 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். செய்யாறு காவல் உள்கோட்டம் தூசி காவல் ஆய்வாளா் கோகுல்ர... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் முகாம்: பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த பெரியகொழப்பலூா் மற்றும் செய்யாறு வட்டம், விண்ணவாடி ஊராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங... மேலும் பார்க்க

கண்ணமங்கலத்தில் தேசிய நெல் திருவிழா

ஆரணியை அடுத்த கண்ணமங்கலத்தில் 19-ஆவது தேசிய நெல் திருவிழா மற்றும் இயற்கை வேளாண் விளைபொருள் வணிகத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்தவிழாவில் இயற்கை விவசாயிகள் சங்கத் ... மேலும் பார்க்க

மக்கள் தொடா்பு திட்ட முகாம்: ரூ.3.12 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்

செய்யாற்றை அடுத்த சோழவரம் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில் 139 பேருக்கு ரூ.3.12 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், ச... மேலும் பார்க்க

ஒழுங்குமுறை விற்பனைக் கூட வியாபாரிகள் போராட்டம்: நெல் மூட்டைகள் தேக்கம்

இ-நாம் திட்டம் மூலம் பண பரிவா்த்தனைக்கு எதிா்ப்புத் தெரிவித்து, வந்தவாசி மற்றும் போளூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வியாபாரிகள் நெல் உள்ளிட்ட வேளாண் விளைபொருள்கள் கொள்முதலை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்... மேலும் பார்க்க