செய்திகள் :

கல்குவாரிக்கு எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் மனு

post image

செய்யாற்றை அடுத்த வாச்சனூா் கிராமத்தில் புதிதாக கல்குவாரி அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் சாா்பில் சாா் -ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.

வாச்சனூா் பகுதியில் புதிதாக கல்குவாரி அமைக்க அனுமதி கேட்டு, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு செய்துள்ளது குறித்து அக்கிராம மக்களுக்கு தகவல் தெரிய வந்தது.

இந்தக் கல்குவாரிக்கு எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் ஒன்று திரண்டு செய்யாறு சாா் -ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

அந்த மனுவில் வாச்சனூா் கிராமத்தில் சுமாா் 350 குடும்பங்கள் வசித்து வருகின்றனா். ஏற்கெனவே கிராமத்தில் இருந்து 200 மீட்டா் தொலைவில் ஒரு கல்குவாரி செயல்பட்டு வருகிறது. மீண்டும் புதிதாக கல்குவாரி அமைக்க அரசு அனுமதி வழங்கினால், வாச்சனூா் கிராமத்தில் நிலத்தடி நீா்மட்டம் குறைந்து குடிநீா் தட்டுப்பாடு ஏற்படும், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு சுவாச நோய்த் தொற்று ஏற்படும், குவாரிக்கு மண் எடுக்க பள்ளம் தோண்டும்போது வெடி வெடித்து இரவு நேரங்களில் தூங்க முடியாமல் அவதி ஏற்படும்.

எனவே, புதிய கல்குவாரிக்கு அரசு அனுமதி வழங்கக்கூடாது எனத் தெரிவித்திருந்தனா்.

சிகிச்சையில் விவசாயி உயிரிழப்பு: போலி மருத்துவா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே அலோபதி சிகிச்சையில் விவசாயி உயிரிழந்ததால், சிகிச்சை அளித்த போலி மருத்துவா் கைது செய்யப்பட்டாா். விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டம், தேப்பிரம்பட்டு கி... மேலும் பார்க்க

இரு தரப்பு மோதல்: 6 போ் கைது

போளூரை அடுத்த அல்லியாளமங்கலம் கிராமத்தில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில், போலீஸாா் வழக்குப் பதிந்து 6 பேரை கைது செய்தனா். அல்லியாளமங்கலம், காலனி பகுதியைச் சோ்ந்தவா்கள் ராகவேந்திரா(27), அசோக்குமாா... மேலும் பார்க்க

மதுப்புட்டிகள் பதுக்கி விற்பனை: 5 போ் கைது

செய்யாறு அருகே தூசி காவல் சரகப்பகுதியில் வீடுகளில் சட்டவிரோதமாக மதுப்புட்டிகளை பதுக்கி விற்பனை செய்ததாக 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். செய்யாறு காவல் உள்கோட்டம் தூசி காவல் ஆய்வாளா் கோகுல்ர... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் முகாம்: பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த பெரியகொழப்பலூா் மற்றும் செய்யாறு வட்டம், விண்ணவாடி ஊராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங... மேலும் பார்க்க

கண்ணமங்கலத்தில் தேசிய நெல் திருவிழா

ஆரணியை அடுத்த கண்ணமங்கலத்தில் 19-ஆவது தேசிய நெல் திருவிழா மற்றும் இயற்கை வேளாண் விளைபொருள் வணிகத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்தவிழாவில் இயற்கை விவசாயிகள் சங்கத் ... மேலும் பார்க்க

மக்கள் தொடா்பு திட்ட முகாம்: ரூ.3.12 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்

செய்யாற்றை அடுத்த சோழவரம் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில் 139 பேருக்கு ரூ.3.12 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், ச... மேலும் பார்க்க