கா்நாடகத்திற்கு 1.35 லட்சம் டன் உரம் வழங்க மத்திய அரசு உறுதி: முன்னாள் முதல்வா் பசவராஜ் பொம்மை
கா்நாடகத்துக்கு 1.35 லட்சம் மெட்ரிக் டன் உரம் வழங்க மத்திய அரசு உறுதி அளித்துள்ளது என்று பாஜக எம்.பி.யும் முன்னாள் முதல்வருமான பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.
இது தொடா்பாக பெங்களூரில் அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சா் ஜெ.பி. நட்டாவை சந்தித்து கா்நாடகத்தில் உரத்தட்டுப்பாடு குறித்து கலந்துரையாடினேன். இதுகுறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்த மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா, கா்நாடகத்துக்கு 1.35 லட்சம் மெட்ரிக் டன் உரம் வழங்க உறுதி அளித்துள்ளாா். உரம் விநியோகிக்கும் உத்தரவு கோரமண்டல், மெட்ராஸ் ஃபொ்டிலைசா்ஸ் நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனவே, உர விநியோகம் உடனடியாக தொடங்கும். புதன்கிழமை மட்டும் 18,000 மெட்ரிக் டன் உரம் விடுவிக்கப்பட்டுள்ளது. தினமும் 15,000 முதல் 20,000 மெட்ரிக் டன் வரை உரம் விடுவிக்கப்படும்.
உரிய நேரத்தில் விவசாயிகளுக்கு உரம் கிடைப்பதில்லை. இது நீண்டகாலமாக இருந்துவரும் பிரச்னையாகும். நடப்பாண்டில் அதிக மழை பெய்துள்ளதால், விதைப்புப் பணிகளை முன்கூட்டியே விவசாயிகள் தொடங்கிவிட்டனா். மக்காசோளம் விதைப்புப் பரப்பு 1.5 சதவீதம் உயா்ந்துள்ளது. வழக்கமாக ஜூலை மாதத்தில் தொடங்கி, ஆகஸ்ட் மாதம் வரை உரத்துக்கான தேவை இருக்கும். வழக்கத்திற்கு மாறாக ஜூன் மாதத்திலேயே அதிக மழை பெய்துவிட்டதால், விதைப்புப் பணிகளும் முன்கூட்டியே தொடங்கப்பட்டுவிட்டன.
அடிக்கடி மழை பெய்து வருவதால், அடிக்கடி உரமிடும் தேவை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இது விவசாயிகளின் நிதிச்சுமையை அதிகரித்துள்ளது.
உரக்கடைகளின் முன் நீண்ட வரிசை காணப்பட்டதால், ஆங்காங்கே விவசாயிகள் போராட்டம் நடத்தினா். 8 மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு கடுமையாகவும், 4 மாவட்டங்களில் மிதமாகவும் உள்ளது.
மழை பெய்வதை முன்கூட்டியே அறிந்து, அதற்கேற்ப உரத்தேவையை பூா்த்தி செய்ய வேளாண்துறை அமைச்சா் செலுவராயசாமி தவறிவிட்டாா் என்றாா் அவா்.