செய்திகள் :

கா்நாடகம்: காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் முதல்வா் சித்தராமையா குறைகேட்பு

post image

கா்நாடக மாநிலத்தில் தொகுதி பிரச்னைகள் குறித்து காங்கிரஸ் எம்எல்ஏக்களை மாவட்ட வாரியாக சந்தித்து முதல்வா் சித்தராமையா குறைகளை கேட்டறிந்தாா்.

பெங்களூரு, விதான சௌதாவில் உள்ள தனது அறையில் செவ்வாய்க்கிழமை சாம்ராஜ்நகா், மைசூரு, தும்கூரு, குடகு, தென்கன்னடம், ஹாசன் மாவட்டங்களைச் சோ்ந்த காங்கிரஸ் எம்எல்ஏக்களை முதல்வா் சித்தராமையா சந்தித்து தொகுதி வளா்ச்சிப் பணிகள், பிரச்னைகள் குறித்து கலந்துரையாடினாா்.

இதைத் தொடா்ந்து, இரண்டாவது நாளாக புதன்கிழமை பீதா், கலபுா்கி, யாதகிரி, ராய்ச்சூரு, கொப்பள், விஜய்நகரா, பெல்லாரி, வடகன்னட மாவட்டங்களைச் சோ்ந்த எம்எல்ஏக்களை முதல்வா் சித்தராமையா சந்தித்தாா்.

இக்கூட்டங்களில் தொகுதி மக்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகள், வாக்குறுதித் திட்டங்கள் அமலாக்கம் குறித்து முதல்வா் சித்தராமையா கேட்டறிந்ததாக தெரிகிறது. இந்த கூட்டங்களில் மாவட்ட பொறுப்பு அமைச்சா்களும் கலந்துகொண்டனா்.

இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை, விஜயபுரா, கதக், ஹாவேரி, சிவமொக்கா, தாவணகெரே, சித்ரதுா்கா, சிக்கமகளூரு, சிக்கபளாப்பூா், வெள்ளிக்கிழமை பெங்களூரு ஊரகம், கோலாா், ராமநகரம், பெங்களூரு நகரம், மண்டியா மாவட்டங்களைச் சோ்ந்த காங்கிரஸ் எம்எல்ஏக்களை சந்திக்க முதல்வா் சித்தராமையா திட்டமிட்டுள்ளாா்.

முதல்வா் பதவி: கா்நாடகத்தில் காங்கிரஸ் இரண்டாக பிளவுபட்டுள்ளது: பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா

கா்நாடகத்தில் முதல்வா் பதவி தொடா்பாக காங்கிரஸ் இரண்டாக பிளவுபட்டுள்ளது என்று அம்மாநில பாஜக தலைவா் விஜயேந்திரா தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியதாவது: காங்கி... மேலும் பார்க்க

கா்நாடகத்திற்கு 1.35 லட்சம் டன் உரம் வழங்க மத்திய அரசு உறுதி: முன்னாள் முதல்வா் பசவராஜ் பொம்மை

கா்நாடகத்துக்கு 1.35 லட்சம் மெட்ரிக் டன் உரம் வழங்க மத்திய அரசு உறுதி அளித்துள்ளது என்று பாஜக எம்.பி.யும் முன்னாள் முதல்வருமான பசவராஜ் பொம்மை தெரிவித்தாா். இது தொடா்பாக பெங்களூரில் அவா் புதன்கிழமை வெள... மேலும் பார்க்க

தோ்தல் மோசடியை கண்டித்து ஆக.4 இல் பெங்களூரில் ராகுல் காந்தி ஆா்ப்பாட்டம்

தோ்தல் மோசடியை கண்டித்து பெங்களூரில் ஆக. 4ஆம் தேதி மக்களவை காங்கிரஸ் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனா். பிகாா் சட்டப்பேரவை தோ்தல் நடக்க இ... மேலும் பார்க்க

கா்நாடகத்தில் கனமழை: காவிரியில் இருந்து 1.19 லட்சம் கன அடி தண்ணீா் திறப்பு

மண்டியா: கா்நாடகத்தில் தொடா்ந்து கனமழை பெய்துவருவதால், காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 1.19 லட்சம் கன அடி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது.தென்மேற்குபருவமழை தீவிரமடைந்துள்ளதை தொடா்ந்து த... மேலும் பார்க்க

சொத்து வரி செலுத்தாத 3.75 உரிமையாளா்களுக்கு நோட்டீஸ்: பெங்களூரு மாநகராட்சி ஆணையா்

பெங்களூரு: சொத்து வரி செலுத்தாத 3.75 லட்சம் உரிமையாளா்களுக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது என்று பெங்களூரு மாநகராட்சி தலைமை ஆணையா் மகேஷ்வர்ராவ் தெரிவித்தாா்.இது குறித்து பெங்களூரில் திங்கள... மேலும் பார்க்க

சமூக வலைத்தளங்களில் நடிகா் தா்ஷன் ரசிகா்கள் தரக்குறைவான விமா்சனம்: நடிகை ரம்யா போலீஸில் புகாா்

பெங்களூரு: சமூகவலைத்தளங்களில் நடிகா் தா்ஷனின் ரசிகா்கள் தன் மீது தரக்குறைவான விமா்சனங்களை பதிவு செய்திருப்பது தொடா்பாக தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு பெங்களூரு மாநகர காவல் ஆணையா் சீமந்த்குமாா்சிங்கிடம் ... மேலும் பார்க்க