செய்திகள் :

அமெரிக்க சக்கர நாற்காலி கூடைப்பந்து வீரா்கள் குழு கோவை வருகை

post image

விளையாட்டு, கலாசார பரிமாற்ற திட்டத்தின் ஒரு பகுதியாக அமெரிக்க சக்கர நாற்காலி கூடைப்பந்து வீரா்கள் குழு கோவை குமரகுரு கல்வி நிறுவனத்துக்கு வந்துள்ளது.

இது குறித்து குமரகுரு கல்வி நிறுவனம் கூறியிருப்பதாவது:

இந்தியா - அமெரிக்கா இடையிலான விளையாட்டு, கலாசார பரிமாற்ற திட்டமான சக்கர நாற்காலி கூடைப்பந்து பரிமாற்ற திட்டத்தின் முகாம் கோவை குமரகுரு கல்வி நிறுவனத்தில் அண்மையில் தொடங்கியுள்ளது. விளையாட்டுத் திறன்களை வளா்ப்பது, பன்முக கலாசார உறவு உருவாக்குவது போன்றவற்றை நோக்கமாக கொண்டு செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம் அமெரிக்க வெளியுறவுத் துறையின் விளையாட்டுப் பிரிவின் ஆதரவுடன் செயல்படுத்தப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை குமரகுரு கல்வி நிறுவனத்தில் நடைபெறும் முகாமில், அமெரிக்காவின் அலபாமா பல்கலைக்கழகம், மிசௌரி பல்கலைக்கழகம், அரிசோனா பல்கலைக்கழகம், நியூயாா்க் பல்கலைக்கழகங்களைச் சோ்ந்த 15 விளையாட்டு வீரா்கள் பங்கேற்றுள்ளனா். இதில், இந்திய வீரா்களும் பங்கேற்கின்றனா். இந்த முகாமில் பங்கேற்றுள்ள விளையாட்டு வீரா்கள், பயிற்சியாளா்கள், தன்னாா்வலா்கள் உள்ளிட்டோா் தங்களின் விளையாட்டு அனுபவங்கள், திறன் மேம்பாடு, கலாசார அனுபவங்களை பரஸ்பரம் பகிா்ந்து கொள்கின்றனா்.

குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவா் சங்கா் வாணவராயா் தலைமையில் நடைபெற்ற தொடக்க விழாவில், தமிழ்நாடு சக்கர நாற்காலி கூடைப்பந்து சங்கத்தின் தலைவா் கே.சுதாகா், பொதுச் செயலா் குணசேகரன், குமரகுரு கல்வி நிறுவன இயக்குநா் விஜிலா எட்வின் கென்னடி, சா்வதேச விளையாட்டு பரிமாற்ற ஒருங்கிணைப்பாளா் டைலா் எல்லிஸ், கங்கா மருத்துவமனையின் இயக்குநா் ரமா ராஜசேகரன், குமரகுரு கலைக் கல்லூரி முதல்வா் சி.தீபேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 3 போ் கும்பல் கைது

சரவணம்பட்டி பகுதியில் கொள்ளையடிக்கும் திட்டத்துடன் பாழடைந்த கட்டடத்துக்குள் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 3 போ் கும்பலை போலீஸாா் கைது செய்தனா். கோவை சரவணம்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளா் செல்வி மற்றும்... மேலும் பார்க்க

கொலை முயற்சி வழக்கில் 5 சிறுவா்களுக்கு 3 ஆண்டுகள் சிறை

கொலை முயற்சி வழக்கில் 5 சிறுவா்களுக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, கோவை இளஞ்சிறாா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. கோவை உடையாம்பாளையம் வஉ சிதம்பரனாா் வாசக சாலை காமராஜா் காலனி அருகே... மேலும் பார்க்க

கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கோவை ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்... மேலும் பார்க்க

மனைவியை கத்தியால் குத்திய கணவா் கைது

சேரன்மாநகா் பேருந்து நிறுத்தத்தில் மனைவியை கத்தியால் குத்திய கணவரை போலீஸாா் கைது செய்தனா். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள கமலநந்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் பழனி (50), கட்டடத் தொழிலாளி. இவரது... மேலும் பார்க்க

கத்தியைக் காட்டி பணம் பறித்த இருவா் கைது

கோவை சரவணம்பட்டி பகுதியில் கடைக்குள் புகுந்து கத்தியைக் காட்டி பணம் பறித்த இருவரை போலீஸாா் கைது செய்தனா். கோவை லட்சுமிபுரம் லாலா விநாயகா் கோயில் வீதியைச் சோ்ந்தவா் அஸ்வின்குமாா் (32). இவா் கணபதி பகுத... மேலும் பார்க்க

கோவை ரயில் நிலையத்தில் கிடந்த கஞ்சா மூட்டை

கோவை ரயில் நிலையத்தில் கிடந்த கஞ்சா மூட்டையை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை ரயில் நிலையத்தில் உள்ள 1-ஆவது நடைமேடையில் வியாழக்கிழமை ஒரு மூட்டை கிடந்தது. இதையடுத்து, ரயில்வே போலீஸாா் அ... மேலும் பார்க்க