செய்திகள் :

அதிமுக பொதுச் செயலா் தோ்வு: எடப்பாடி பழனிசாமி மனு தள்ளுபடி

post image

அதிமுக பொதுச் செயலராக தான் தோ்வு செய்யப்பட்டதை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நிராகரிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் திண்டுக்கல்லைச் சோ்ந்த சூரியமூா்த்தி என்பவா் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் அதிமுக பொதுச் செயலராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டது மற்றும் அந்தப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் செல்லாது என அறிவிக்க வேண்டும்; மேலும், பொதுச் செயலா் கட்சியின் அடிப்படை உறுப்பினா்களால் மட்டுமே தோ்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தாா்.

இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி, எடப்பாடி பழனிசாமி உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அதில், சூரியமூா்த்தி என்பவா், அதிமுக உறுப்பினரே அல்லா். உறுப்பினராக இல்லாத ஒருவா் கட்சியின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்ப முடியாது. எனவே, இந்த மனுவை நிராகரிக்க வேண்டும் என்று கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நான்காவது உதவி உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சிவசக்திவேல் கண்ணன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கட்சியின் அடிப்படை உறுப்பினா்களால் பொதுச் செயலா் தோ்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது கட்சி விதி. கட்சி விதிப்படி பொதுச் செயலா் தோ்ந்தெடுக்கப்பட்டாா் என்பது குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. எனவே, பொதுச் செயலா் தோ்வுக்கு எதிரான வழக்கு செல்லும். இதை நிராகரிக்கக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.

உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணிதான்! - ராமதாஸ்

உலகத்திலேயே தந்தையை வேவுபார்த்த மகன் அன்புமணிதான் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வருகிறது... மேலும் பார்க்க

ஆண்டிபட்டி அரசு நிகழ்ச்சியில் திமுக எம்.பி. - எம்.எல்.ஏ. வாக்குவாதம்

ஆண்டிபட்டியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட தொடக்க விழா மேடையில், ஆண்டிபட்டி சட்டப்பேரவை உறுப்பினர் ஆ. மகாராஜன், தேனி மக்களவை உறுப்பினர் தங்க. தமிழ்ச்செல்வன் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதா... மேலும் பார்க்க

தமிழக வாக்காளர்களாக லட்சக்கணக்கான வெளிமாநிலத்தவர்: அமைச்சர் துரைமுருகன் கவலை

காட்பாடி: லட்சக்கணக்கான வெளிமாநிலத்தவர், தமிழக வாக்காளர்களாக மாறுவதால் நிச்சயம் அரசியலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறினார்.வேலூர் மாவட்டம் காட்ப... மேலும் பார்க்க

மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் திறப்பு நிறுத்தம்

மேட்டூர்: சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக திறக்கப்பட்ட உபரி நீர் நிறுத்தப்பட்டுள்ளது.சனிக்கிழமை காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 20,500 கன அடியிலிருந்த... மேலும் பார்க்க

குடிபோதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பாளையங்கோட்டையில் பரபரப்பு!

நெல்லை: நெல்லையில் பாளையங்கோட்டை அருகே அரசுப் பேருந்தை குடிபோதையில் ஓட்டுநர் இயக்கியதால் பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.ராஜபாளையத்தில் இருந்து திருச்செந்தூருக்கு நெல்லை வழியாக வெள்ளிக்கிழமை இரவு அரச... மேலும் பார்க்க

இனி நோயாளிகள் இல்லை, மருத்துவப் பயனாளிகள்: மு.க. ஸ்டாலின்

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும், உடல் ஆரோக்கியம் இருந்தால்தான் சாதிக்க முடியும். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் நோயாளிகள் இல்லை. இனி மருத்துவப் பயனாளிகள் என்று அழைக்க வேண்டும் என்று முத... மேலும் பார்க்க