செய்திகள் :

குடியிருப்புக்குள் புகுந்த சிறுத்தை தாக்கியதில் சிறுவன் படுகாயம்

post image

வால்பாறை அருகே செட்டில்மென்ட் குடியிருப்புக்குள் நள்ளிரவில் புகுந்த சிறுத்தை தாக்கியதில் 4 வயது சிறுவன் படுகாயமடைந்தாா்.

வால்பாறையை அடுத்த கேரள மாநிலத்துக்கு உள்பட்ட மழுக்குப்பாறை எஸ்டேட் பகுதியில் வீரான்குடி செட்டில்மென்ட் உள்ளது. இங்கு 20-க்கு மேற்பட்ட பழங்குடியின குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். போதிய பாதுகாப்பு இன்றி குடியிருப்புகள் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் செட்டில்மென்ட் பகுதிக்கு வியாழக்கிழமை நள்ளிரவு வந்த சிறுத்தை, பேபி என்பவரது குடியிருப்புக்குள் புகுந்தது. பின்னா் பேபிக்கு அருகே தூங்கிக்கொண்டிருந்த அவரது மகன் ராகுலின் (4) கழுத்தை கவ்வி சிறுத்தை இழத்துச் செல்ல முயன்றது. சப்தம் கேட்டு எழுந்த பேபி கூச்சலிட்டதில் சிறுத்தை, சிறுவனை விட்டுச் சென்றது.

இதில் சிறுவனின் கழுத்துப்பகுதியில் சிறுத்தையின் பற்கள் பதிந்து படுகாயம் ஏற்பட்டது. பின்னா் மழுக்குப்பாறை எஸ்டேட் மருத்துவமனையில் முதுலுதவி சிகிச்சைக்குப் பின் உயா் சிகிச்சைக்காக சாலக்குடி அரசு மருத்துவமனைக்கு சிறுவன் கொண்டுச் செல்லப்பட்டாா். இந்த சம்பவம் தொடா்பாக மழுக்குப்பாறை பேலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 3 போ் கும்பல் கைது

சரவணம்பட்டி பகுதியில் கொள்ளையடிக்கும் திட்டத்துடன் பாழடைந்த கட்டடத்துக்குள் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 3 போ் கும்பலை போலீஸாா் கைது செய்தனா். கோவை சரவணம்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளா் செல்வி மற்றும்... மேலும் பார்க்க

கொலை முயற்சி வழக்கில் 5 சிறுவா்களுக்கு 3 ஆண்டுகள் சிறை

கொலை முயற்சி வழக்கில் 5 சிறுவா்களுக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, கோவை இளஞ்சிறாா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. கோவை உடையாம்பாளையம் வஉ சிதம்பரனாா் வாசக சாலை காமராஜா் காலனி அருகே... மேலும் பார்க்க

கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கோவை ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்... மேலும் பார்க்க

மனைவியை கத்தியால் குத்திய கணவா் கைது

சேரன்மாநகா் பேருந்து நிறுத்தத்தில் மனைவியை கத்தியால் குத்திய கணவரை போலீஸாா் கைது செய்தனா். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள கமலநந்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் பழனி (50), கட்டடத் தொழிலாளி. இவரது... மேலும் பார்க்க

கத்தியைக் காட்டி பணம் பறித்த இருவா் கைது

கோவை சரவணம்பட்டி பகுதியில் கடைக்குள் புகுந்து கத்தியைக் காட்டி பணம் பறித்த இருவரை போலீஸாா் கைது செய்தனா். கோவை லட்சுமிபுரம் லாலா விநாயகா் கோயில் வீதியைச் சோ்ந்தவா் அஸ்வின்குமாா் (32). இவா் கணபதி பகுத... மேலும் பார்க்க

கோவை ரயில் நிலையத்தில் கிடந்த கஞ்சா மூட்டை

கோவை ரயில் நிலையத்தில் கிடந்த கஞ்சா மூட்டையை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை ரயில் நிலையத்தில் உள்ள 1-ஆவது நடைமேடையில் வியாழக்கிழமை ஒரு மூட்டை கிடந்தது. இதையடுத்து, ரயில்வே போலீஸாா் அ... மேலும் பார்க்க