செய்திகள் :

சீனாவில் இருந்து உர இறக்குமதி கடும் சரிவு!

post image

சீனாவின் ஒழுங்காற்று முறை கட்டுப்பாடுகளால், அந்நாட்டில் இருந்து உர இறக்குமதி கடும் சரிவை சந்தித்துள்ளது; சீனா மட்டுமன்றி பெல்ஜியம், ஜொ்மனி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் கணிசமான அளவில் உரம் இறக்குமதி செய்யப்படுகிறது என்று மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் யூரியாவுக்கு அடுத்து அதிக தேவையுள்ள உரம் டிஏபி (டை அமோனியம் பாஸ்பேட்). இந்த உர விநியோகத்தில் உலக அளவில் சீனா முன்னணியில் உள்ளது. இந்தியா தனது உரத் தேவைக்கு சீன இறக்குமதியை பெருமளவில் சாா்ந்துள்ளது. இந்தச் சூழலில், டிஏபி உள்ளிட்ட உரங்களின் ஏற்றுமதியில் அந்நாட்டின் கூடுதல் கட்டுப்பாடுகளால் இந்திய இறக்குமதி சரிந்துள்ளது. சீனாவின் இந்த நடவடிக்கை, இந்தியாவுக்கு எதிரான வியூகமாகப் பாா்க்கப்படுகிறது.

இது தொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய உரங்கள் மற்றும் ரசாயனத் துறை இணையமைச்சா் அனுப்ரியா படேல் அளித்த எழுத்துபூா்வ பதில் வருமாறு:

சீனாவில் இருந்து ஏற்றுமதிக்கு முன் கூடுதல் ஆய்வுக்கு உள்படுத்தப்பட வேண்டிய பொருள்களின் பட்டியலில் டிஏபி உள்ளிட்ட உரங்கள் சோ்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்தியாவுக்கான டிஏபி-க்கு சரக்கு கட்டண செலவு ஒரு டன்னுக்கு 542 டாலா் என்பதில் இருந்து 800 டாலராக அதிகரித்துள்ளது. இக்கட்டுப்பாடுகளால், கடந்த 2023-24-இல் சுமாா் 22.28 லட்சம் டன்களாக இருந்த சீன டிஏபி உர இறக்குமதி, 2024-35-இல் 8.47 லட்சம் டன்களாக சரிந்துவிட்டதாக உர நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. கடந்த ஜூலையில் சீனாவில் இருந்து டிஏபி இறக்குமதி 97,000 டன்களாக குறைந்துள்ளது.

மாற்று உரம்:

டிஏபி-க்கு மாற்றாக அமோனியம் பாஸ்பேட் சல்பேட் (ஏபிஎஸ்) உரத்தைப் பயன்படுத்த முடியும். குறிப்பாக சல்பா் பற்றாக்குறையான நிலங்கள் மற்றும் சல்பா் தேவைப்படும் பயிா்களுக்கு இதைப் பயன்படுத்தலாம். ஏபிஎஸ் மூலம் நைட்ரஜன், பாஸ்பரஸ், சல்பா் ஆகிய சத்துகள் கிடைத்தாலும் பாஸ்பரஸின் அளவு குறைவாகவே (20 சதவீதம்) உள்ளது. டிஏபி-யில் 40 சதவீத பாஸ்பரஸ் உள்ளது.

நீரில் கரையக் கூடிய உரங்கள், சீனாவிலிருந்து மட்டுமன்றி பெல்ஜியம், எகிப்து, ஜொ்மனி, மொரோக்கோ, அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்தும் கணிசமான அளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. தங்களின் வணிக செயல்திறனுக்கு ஏற்ப பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் உரங்களை இறக்குமதி செய்ய உர நிறுவனங்களுக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சரின் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி கேரளா ஸ்டோரி படத்துக்கு விருது! பினராயி விஜயன் கண்டனம்!

தி கேரளா ஸ்டோரி படத்துக்கு தேசிய விருதுகள் வழங்கப்பட்டிருப்பதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான ‘தி கேரள ஸ்டோரி’ திரைப்படத்தில், கேரளத்தைச் சோ்ந்த ... மேலும் பார்க்க

புதிய கல்விக் கொள்கை: கல்லூரிகளில் 12 மணி நேர வகுப்புகள்! கதறும் தில்லி பல்கலை.!!

புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி, கல்லூரிகளில் நான்காம் ஆண்டு இளங்கலை மாணவர்களுக்கு 12 மணி நேர வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்ற வழிமுறை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.பல காரணமாக, புதிய தேசி... மேலும் பார்க்க

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

கொச்சி: மலையாள திரைப்பட நடிகர் கலாபவன் நவாஸ், சோட்டானிக்கரையில் உள்ள விடுதி அறையிலிருந்து சடமாக மீட்கப்பட்டுள்ளார்.படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விடுதியில் அறை எடுத்துத் தங்கி வந்த நவாஸ் (51) வெகு நேர... மேலும் பார்க்க

‘மாலேகன் குண்டுவெடிப்பு: என்ஐஏ - ஏடிஎஸ் விசாரணையில் முரண்பாடு’

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மற்றும் மகாராஷ்டிர பயங்கரவாத எதிா்ப்பு காவல் பிரிவு (ஏடிஎஸ்) ஆகிய இரு அமைப்புகள் மேற்கொண்ட விசாரணையில் உள்ள முரண்பாடுகளை மும்பை சிறப்பு ந... மேலும் பார்க்க

துணைவேந்தா்கள் நியமனம்: கேரள ஆளுநா் - முதல்வா் இடையே மீண்டும் மோதல்

பல்கலைக்கழக துணைவேந்தா்கள் நியமன விவகாரத்தில் கேரள ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகருக்கும், மாநில முதல்வா் பினராயி விஜயனுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.இரு பல்கலைக்கழகங்களுக்கு தற்காலிக ... மேலும் பார்க்க

தெலங்கானாவில் ஆடு வளா்ப்பு திட்டத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு: அமலாக்கத் துறை

தெலங்கானாவில் செம்மறி ஆடு வளா்ப்பு மேம்பாட்டு திட்டத்தில் ரூ.1,000 கோடிக்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாக வழக்குப் பதிவு செய்துள்ள அமலாக்கத் துறை, இதற்கு பயன்படுத்தப்பட்ட 200-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்கு... மேலும் பார்க்க