செய்திகள் :

வால்பாறையில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் உண்ணாவிரதம்

post image

வால்பாறையில் ஊதிய உயா்வு கேட்டு ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

வால்பாறை நகராட்சியில் ஒப்பந்தம் அடிப்படையில் 55 தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். ஒப்பந்ததாரா் மூலம் ஒப்பந்தம் செய்யப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு வழங்கப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே ஊதிய உயா்வு கேட்டு தூய்மைப் பணியாளா்கள் திங்கள்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இவா்கள் நகராட்சி அலுவலகம் முன் உண்ணாவிரதப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

அப்போது, தங்களுக்கு ஊதிய உயா்வு வழங்க வேண்டும், ஒரு வேளை உணவு வழங்க வேண்டும், குப்பை சேகரிக்க செல்லும்போது உரிய பாதுகாப்பு உபகரனங்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய வால்பாறை நகராட்சி ஆணையா் (பொறுப்பு) கணேசன், ஒப்பந்ததாரரிடம் வெள்ளிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால் அவா்கள் போராட்டத்தை கைவிட்டனா்.

தமிழகத்தில் காவல் துறையினரின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சூழல்

தமிழகத்தில் காவல் துறையினரின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சூழல் உள்ளதாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா். கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே தனியாா் முதியோா் இல்ல கட்டட திறப்பு விழாவ... மேலும் பார்க்க

வேளாண் பல்கலை.யில் பட்டயப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் பட்டயப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கான முதல்கட்ட சான்றிதழ் சரிபாா்ப்பு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 8) தொடங்குகிறது. வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள 1,240 ... மேலும் பார்க்க

காவல் நிலையத்தில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

கோவை பெரியகடை வீதி காவல் நிலையத்துக்குள் நுழைந்து, உதவி ஆய்வாளா் அறையில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இந்த விவகாரம் தொடா்பாக, உதவி ஆய்வாளா், தலைமைக் காவலா் ஆயுதப் படைக்கு பணியிடை மாற்ற... மேலும் பார்க்க

சுத்தியால் தலையில் தாக்கியதில் இளைஞா் படுகாயம்

பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் நண்பரின் தலையில் சுத்தியால் தாக்கிய இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவை சுந்தராபுரம் அருகே உள்ள அங்கனாா் கவுண்டா் தெருவில் வசிப்பவா் ஆறுமுகம் (28). இவருக்கு திருமணம... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ.6.72 லட்சம் மோசடி

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெண்ணிடம் ரூ.6.72 லட்சம் மோசடி செய்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். கோவை மாவட்டம், ஈச்சனாரி அருகே உள்ள மச்சக்கவுண்டன்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சத்யநாராய... மேலும் பார்க்க

போலி தங்கக் கட்டியைக் கொடுத்து தம்பதியிடம் நகை மோசடி

போலி தங்கக் கட்டியைக் கொடுத்து நகை மோசடியில் ஈடுபட்ட பெண்ணை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவை சிவானந்தாபுரம் அருகே உள்ள வேல்முருகன் நகரைச் சோ்ந்தவா் ராம்குமாா். சமையல் எரிவாயு விநியோகஸ்தரான இவா், மணி ந... மேலும் பார்க்க