செய்திகள் :

மசினகுடி: தந்தங்கள் மாயமான நிலையில் கிடந்த யானையின் எலும்புக்கூடு; வனத்துறை விசாரணை!

post image

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் யானைகளின் எண்ணிக்கை கணிசமான அளவில் உள்ளது. இந்த நிலையில், மசினகுடி அருகில் உள்ள பொக்குபுரம் பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் யானையின் எலும்புக்கூடு போன்று கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் சென்ற வனத்துறையினர் அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, யானையின் எலும்புக்கூடு தான் என்பதை உறுதி செய்துள்ளனர்.

யானையின் எலும்புக்கூடு

வனத்துறையின் உயர் அலுவலர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். கால்நடை மருத்துவர்கள் குழுவுடன் சென்ற வனத்துறையினர், தொடர் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் யானையின் எலும்புக்கூடு என்பதை உறுதி செய்துள்ளனர். மேலும் யானையின் தந்ததங்கள் இரண்டும் காணாமல் போனதையும் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பின்னணி குறித்து தெரிவித்த வனத்துறையினர், " கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இந்த பகுதியில் நடமாடி வந்த 40 வயதான ஆண் யானை ஒன்று இங்குள்ள தனியார் பட்டா நிலத்தில் உயிரிழந்திருக்கிறது. சம்மந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர் யானை இறப்பு குறித்து வனத்துறைக்கு தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை. உடல் பாகங்கள் சிதைவுற்ற நிலையில் எலும்புக்கூடுகள் மட்டுமே தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளது.

யானையின் எலும்புக்கூடு

யானையின் மண்டை ஓட்டில் இருந்து இரண்டு தந்தங்களை மர்ம நபர்கள் உருவி எடுத்துச் சென்றிருக்கிறார்கள். இது குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். இந்த தனியார் நிலத்தை பராமரித்து வந்த கேர்டேக்கர் ஒருவர் தலைமறைவாக இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. அது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.‌ குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம்" என்றனர்.

கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து போதை மாத்திரை விற்பனை; தஞ்சையில் சிக்கிய கும்பலின் பின்னணி!

தஞ்சாவூர் கீழவாசல் தட்டான்தெரு பகுதியில் இளைஞர்கள் சிலர் மாத்திரையை தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் நரம்பில் செலுத்தி போதை ஏற்படுத்திக்கொண்டு வந்துள்ளனர். குறிப்பாக கல்லூரி மாணவர்கள் இத்தகைய போதைப்பழக்க... மேலும் பார்க்க

சென்னை: தொழிலதிபருக்கு ஷாக் கொடுத்த இளம்பெண் - ஆண் நண்பருடன் கைதானவரின் பகீர் பின்னணி!

சென்னை, ஆவடி பகுதியில் வசித்து வருபவர் மணி (47). இவர் கடந்த 27.07.2025-ம் தேதி அவருக்கு தெரிந்த பெண் தோழி தீபிகா என்பவருடன் தேனாம்பேட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலுக்குச் சென்றார். பின்னர் அங்க... மேலும் பார்க்க

யூடியூப் பார்த்து ஸ்கெட்ச்; ஆண் நண்பருடன் சேர்ந்து கணவரைக் கொன்ற மனைவி சிக்கியது எப்படி?

தெலுங்கானா மாநிலம் கரீம்நகரில் ஒருவர் மர்மமான முறையில் கொல்லப்பட்ட விவகாரத்தில், அவரின் மனைவிதான் தனது ஆண் நண்பருடன் சேர்ந்து யூடியூப் வீடியோ பார்த்து திட்டம் போட்டு கொலைசெய்திருக்கிறார் என்பது வெளிச்... மேலும் பார்க்க

'தமிழ்நாடே அவர்களுக்கு சொந்தமா... இது அவமானம்' - திமுக மீது வானதி சீனிவாசன் விமர்சனம்

கோவையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில், “இந்தியாவின் முன்னேறிய மாநிலமாக தமிழகத்தை கூறுகிறார்கள். சிவகங்கை மாவட்டம், நாட்டாக்கு என்கிற ஒட்டுமொத்த கிராமத்தையும் இரவோ... மேலும் பார்க்க

கோவை காவல் நிலையத்தில் தற்கொலை செய்தவருக்கு நடந்தது என்ன? - அக்கா கண்ணீர் பேட்டி

கோவை, பேரூர் அருகே உள்ள ராமசெட்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜன். சென்டரிங் வேலை செய்து வந்தார். இவர் நேற்று இரவு பெரியகடை வீதி காவல் நிலையம் சென்றுள்ளார். அங்கு, ‘என்னை வெட்டுவதற்காக 50 பேர் துர... மேலும் பார்க்க

குஜராத்: லிவ் இன் உறவில் வாழ்ந்த இளம்பெண் மர்ம மரணம்: ஆணவக்கொலை செய்து எரித்ததாக 9 பேர் கைது!

குஜராத் மாநிலம், பனஸ்காந்தா என்ற இடத்தை சேர்ந்த சந்திரிகா(18) என்ற பெண் ஹரேஷ் செளதரி என்பவருடன் கடந்த சில மாதங்களாக லிவ் இன் முறையில் வாழ்ந்து வந்தார். இருவரும் இதற்காக ஒப்பந்தமும் செய்து கொண்டனர். ஆன... மேலும் பார்க்க