செய்திகள் :

சென்னை: தொழிலதிபருக்கு ஷாக் கொடுத்த இளம்பெண் - ஆண் நண்பருடன் கைதானவரின் பகீர் பின்னணி!

post image

சென்னை, ஆவடி பகுதியில் வசித்து வருபவர் மணி (47). இவர் கடந்த 27.07.2025-ம் தேதி அவருக்கு தெரிந்த பெண் தோழி தீபிகா என்பவருடன் தேனாம்பேட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலுக்குச் சென்றார். பின்னர் அங்கு அறை எடுத்து, தங்கிவிட்டு, மறுநாள் (28.07.2025) காலை எழுந்து பார்த்தபோது, தீபிகாவைக் காணவில்லை. அதோடு மணி கழுத்தில் அணிந்திருந்த 8 சவரன் எடையுள்ள தங்கச் செயினும் மாயமாகியிருந்தது. இதுகுறித்து மணி, தேனாம்பேட்டை காவல் நிலைய குற்றப்பிரிவில் புகாரளித்தார். அதன்பேரில் உதவி கமிஷனர் ஆரோக்கிய ரவீந்திரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சபரிதாசன் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர்.

திருட்டு வழக்கில் கைதான சதீஷ்குமார்

விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து தேனாம்பேட்டை போலீஸார் கூறுகையில், ``மணி கொடுத்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட ஹோட்டலுக்குச் சென்று விசாரித்தோம். மணியுடன் தங்கியிருந்த தீபிகா மீது முதலில் எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரின் செல்போன் நம்பர் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால் அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவல் கிடைக்கவில்லை. இந்தச் சமயத்தில்தான் தீபிகாவின் ஆண் நண்பர் சதீஷ்குமார் குறித்த தகவல் கிடைத்தது. அதனால் முதலில் சதீஷ்குமாரைப் பிடித்தோம். அவர் அளித்த தகவலின்படி குன்றத்தூர் சிவன்தாங்கல் பகுதியைச் சேர்ந்த தீபிகா என்கிற தீபலட்சுமியை (22) கைது செய்தோம். தீபிகாவுக்கு ஏற்கெனவே திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. கணவரைப் பிரிந்து வாழும் தீபிகா கடந்த சில ஆண்டுகளாக சதீஷ்குமாருடன் பழகிவருகிறார். சம்பவத்தன்று மணியுடன் மது அருந்திய தீபிகா, அவர் அணிந்திருந்த தங்கச் செயினை திருட திட்டமிட்டிருக்கிறார். இதற்காக மணியுடன் மிகவும் நெருக்கமாக பேசி வந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் போதையில் மணி தள்ளாட அவரை அறைக்கு கைதாங்கலாக அழைத்துச் சென்று செயினை திருடியிருக்கிறார் .பின்னர் அந்தச் செயினை விற்று அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு சதீஷ்குமாருக்கு விலை உயர்ந்த பைக் ஒன்றை வாங்கிக் கொடுத்திருக்கிறார். மீதியுள்ள பணத்தை வைத்து சந்தோஷமாக இருந்த சமயத்தில்தான் இருவரையும் நாங்கள் கைது செய்தோம். தற்போது பைக், மீதி பணம் 3 லட்சம் ரூபாய் ஆகியவற்றைப் பறிமுதல் செய்திருக்கிறோம். கைதான தீபிகா, சதீஷ்குமாரின் பின்னணி குறித்து விசாரித்து வருகிறோம்" என்றனர்.

யூடியூப் பார்த்து ஸ்கெட்ச்; ஆண் நண்பருடன் சேர்ந்து கணவரைக் கொன்ற மனைவி சிக்கியது எப்படி?

தெலுங்கானா மாநிலம் கரீம்நகரில் ஒருவர் மர்மமான முறையில் கொல்லப்பட்ட விவகாரத்தில், அவரின் மனைவிதான் தனது ஆண் நண்பருடன் சேர்ந்து யூடியூப் வீடியோ பார்த்து திட்டம் போட்டு கொலைசெய்திருக்கிறார் என்பது வெளிச்... மேலும் பார்க்க

'தமிழ்நாடே அவர்களுக்கு சொந்தமா... இது அவமானம்' - திமுக மீது வானதி சீனிவாசன் விமர்சனம்

கோவையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில், “இந்தியாவின் முன்னேறிய மாநிலமாக தமிழகத்தை கூறுகிறார்கள். சிவகங்கை மாவட்டம், நாட்டாக்கு என்கிற ஒட்டுமொத்த கிராமத்தையும் இரவோ... மேலும் பார்க்க

கோவை காவல் நிலையத்தில் தற்கொலை செய்தவருக்கு நடந்தது என்ன? - அக்கா கண்ணீர் பேட்டி

கோவை, பேரூர் அருகே உள்ள ராமசெட்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜன். சென்டரிங் வேலை செய்து வந்தார். இவர் நேற்று இரவு பெரியகடை வீதி காவல் நிலையம் சென்றுள்ளார். அங்கு, ‘என்னை வெட்டுவதற்காக 50 பேர் துர... மேலும் பார்க்க

குஜராத்: லிவ் இன் உறவில் வாழ்ந்த இளம்பெண் மர்ம மரணம்: ஆணவக்கொலை செய்து எரித்ததாக 9 பேர் கைது!

குஜராத் மாநிலம், பனஸ்காந்தா என்ற இடத்தை சேர்ந்த சந்திரிகா(18) என்ற பெண் ஹரேஷ் செளதரி என்பவருடன் கடந்த சில மாதங்களாக லிவ் இன் முறையில் வாழ்ந்து வந்தார். இருவரும் இதற்காக ஒப்பந்தமும் செய்து கொண்டனர். ஆன... மேலும் பார்க்க

திருப்பூர் SI கொலை: "எங்கே இருக்கிறது சட்ட ஒழுங்கு?" - ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி

திருப்பூர் மாவட்டம் சின்னகனூத்து கிராமத்தில் மடத்துக்குளம் எம்எல்ஏ மகேந்திரனுக்குச் சொந்தமான தோட்டத்தில் வேலை செய்யும் தந்தைக்கும், மகனுக்கும் ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக விசாரிக்கச் சென்ற குடிமங்கலம் கா... மேலும் பார்க்க

Tirupur SSI Murder: `குற்றவாளிகள் செய்த கொடூம்; 6 தனிப்படைகள் தேடுதல்' - சம்பவம் குறித்து ஐஜி

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே உள்ள சிக்கனூத்து கிராமத்தில் மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்குச் சொந்தமான தோட்டம் உள்ளது. இந்தத் தோட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மூர்த்... மேலும் பார்க்க