செய்திகள் :

'தமிழ்நாடே அவர்களுக்கு சொந்தமா... இது அவமானம்' - திமுக மீது வானதி சீனிவாசன் விமர்சனம்

post image

கோவையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில், “இந்தியாவின் முன்னேறிய மாநிலமாக தமிழகத்தை கூறுகிறார்கள். சிவகங்கை மாவட்டம், நாட்டாக்கு என்கிற ஒட்டுமொத்த கிராமத்தையும் இரவோடு இரவாக காலி செய்திருக்கிறார்கள். இது அரசுக்கு அவமானம்.

வானதி சீனிவாசன்

ஒருபக்கம் நகர்மயம், தொழில்மயம் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. அதே மாநிலத்தில் ஒரு குக்கிராமத்தின் நிலை இதுதான். அரசாங்கத்தின் கவனம் கிராமங்களுக்கு செல்லவில்லை என்பதற்கு இந்த சம்பவம் ஓர் உதாரணம்.

முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் எங்கு எல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கு எல்லாம், அப்பா மன்னராகவும், மகன் இளவரசாகவும் பாவனை செய்கிறார்கள். தமிழ்நாடே ஏதோ அவர்களுக்கு தான் சொந்தம் என்கிற கற்பனையில் இருக்கிறார்கள்.

உதயநிதி ஸ்டாலின், மு.க. ஸ்டாலின்

எதற்காக அந்த மக்களை இப்படி கிராமத்தை விட்டே காலி செய்ய சொல்லியிருக்கிறார்கள். அவர்களின் தேவைகள் என்ன என்பதை முதலமைச்சரும், மாவட்ட ஆட்சியரும் கண்டறிந்து உதவி செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டில் ஒருபக்கம் காவலர்கள் மீது தாக்குதல்,  காவல் நிலையத்தில் தற்கொலை சம்பவங்கள் நடைபெறுகின்றன. மறுபக்கம் காவல் நிலைய அதிகாரிகள் மீது திமுகவினர் தாக்குதல் நடத்துகிறார்கள். காவல்துறை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்காததால் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடைபெறுகின்றன.

சட்டம் ஒழுங்கு

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக தற்போது தமிழகம் கட்டுப்பாடற்ற சூழ்நிலையில் சென்றுவிட்டது.” என்றார்.

சென்னை: தொழிலதிபருக்கு ஷாக் கொடுத்த இளம்பெண் - ஆண் நண்பருடன் கைதானவரின் பகீர் பின்னணி!

சென்னை, ஆவடி பகுதியில் வசித்து வருபவர் மணி (47). இவர் கடந்த 27.07.2025-ம் தேதி அவருக்கு தெரிந்த பெண் தோழி தீபிகா என்பவருடன் தேனாம்பேட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலுக்குச் சென்றார். பின்னர் அங்க... மேலும் பார்க்க

யூடியூப் பார்த்து ஸ்கெட்ச்; ஆண் நண்பருடன் சேர்ந்து கணவரைக் கொன்ற மனைவி சிக்கியது எப்படி?

தெலுங்கானா மாநிலம் கரீம்நகரில் ஒருவர் மர்மமான முறையில் கொல்லப்பட்ட விவகாரத்தில், அவரின் மனைவிதான் தனது ஆண் நண்பருடன் சேர்ந்து யூடியூப் வீடியோ பார்த்து திட்டம் போட்டு கொலைசெய்திருக்கிறார் என்பது வெளிச்... மேலும் பார்க்க

கோவை காவல் நிலையத்தில் தற்கொலை செய்தவருக்கு நடந்தது என்ன? - அக்கா கண்ணீர் பேட்டி

கோவை, பேரூர் அருகே உள்ள ராமசெட்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜன். சென்டரிங் வேலை செய்து வந்தார். இவர் நேற்று இரவு பெரியகடை வீதி காவல் நிலையம் சென்றுள்ளார். அங்கு, ‘என்னை வெட்டுவதற்காக 50 பேர் துர... மேலும் பார்க்க

குஜராத்: லிவ் இன் உறவில் வாழ்ந்த இளம்பெண் மர்ம மரணம்: ஆணவக்கொலை செய்து எரித்ததாக 9 பேர் கைது!

குஜராத் மாநிலம், பனஸ்காந்தா என்ற இடத்தை சேர்ந்த சந்திரிகா(18) என்ற பெண் ஹரேஷ் செளதரி என்பவருடன் கடந்த சில மாதங்களாக லிவ் இன் முறையில் வாழ்ந்து வந்தார். இருவரும் இதற்காக ஒப்பந்தமும் செய்து கொண்டனர். ஆன... மேலும் பார்க்க

திருப்பூர் SI கொலை: "எங்கே இருக்கிறது சட்ட ஒழுங்கு?" - ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி

திருப்பூர் மாவட்டம் சின்னகனூத்து கிராமத்தில் மடத்துக்குளம் எம்எல்ஏ மகேந்திரனுக்குச் சொந்தமான தோட்டத்தில் வேலை செய்யும் தந்தைக்கும், மகனுக்கும் ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக விசாரிக்கச் சென்ற குடிமங்கலம் கா... மேலும் பார்க்க

Tirupur SSI Murder: `குற்றவாளிகள் செய்த கொடூம்; 6 தனிப்படைகள் தேடுதல்' - சம்பவம் குறித்து ஐஜி

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே உள்ள சிக்கனூத்து கிராமத்தில் மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்குச் சொந்தமான தோட்டம் உள்ளது. இந்தத் தோட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மூர்த்... மேலும் பார்க்க