செய்திகள் :

Chiranjeevi: "என்னைத் தாக்குபவர்களுக்கு நான் எளிதான இலக்கு, ஆனால்.." - என்ன சொல்கிறார் சிரஞ்சீவி?

post image

'சிரஞ்சீவி அறக்கட்டளை' மூலமாகப் பலருக்கும் பல நலத்திட்ட உதவிகளைத் தொடர்ந்து செய்து வருகிறார் நடிகர் சிரஞ்சீவி.

முக்கியமாக, இரத்த வங்கிகளை நடத்தி, அதன் மூலம் பலருக்கு இரத்த தானம் செய்து வருகிறது 'சிரஞ்சீவி அறக்கட்டளை'.

Chiranjeevi
Chiranjeevi

இன்று ஹைதராபாத்தில் நடைபெற்ற இரத்த தான முகாம் ஒன்றில் டோலிவுட் நடிகர்கள் சிரஞ்சீவி, தேஜ சஜ்ஜா உட்பட சிலர் கலந்துகொண்டனர்.

அங்கு நடிகர் சிரஞ்சீவி, தன்னுடைய இரத்த வங்கி தொடங்கியதற்கான காரணத்தைப் பகிர்ந்திருக்கிறார்.

சிரஞ்சீவி பேசுகையில், "ஒரு பத்திரிகையாளர் இரத்த வங்கிகளின் தேவை குறித்து ஒருமுறை எழுதியிருந்தார்.

அந்தக் கட்டுரையைப் படித்த பிறகுதான் இரத்த வங்கிகளைத் தொடங்க வேண்டும் என முடிவு செய்தேன்.

அந்தக் கட்டுரையை எழுதிய பத்திரிகையாளரை நான் நேரில் சந்தித்ததே இல்லை. ஆனால், எனக்கு இந்த சிந்தனையைக் கொடுத்த அவருக்கு நான் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன்.

என்னைத் தாக்குபவர்களுக்கு நான் எளிதான இலக்கு என்பது எனக்குத் தெரியும்.

Chiranjeevi
Chiranjeevi

சமூக ஊடகங்களில் நான் தாக்கப்படும்போது ஏன் மௌனமாக இருக்கிறேன் என்று பலர் என்னிடம் கேட்டனர்.

நான் செய்த நல்ல செயல்களும், அதனால் எனக்குக் கிடைத்த அன்பும் எனது கேடயங்களாக உள்ளன என்று அவர்களிடம் கூறினேன்.

அவை எனக்காகப் பேசும். ஒருமுறை ஒரு அரசியல் விமர்சனத்தில் என்னை ஒருவர் காப்பாற்றினார்.

பின்னர், என்னுடைய இரத்த வங்கி மூலம் அவருடைய மகள் உயிருடன் இருப்பதாக அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இப்படியான நிகழ்வுகள் எனக்கு வலிமையைக் கொடுத்து, என்னுடைய சேவையில் தொடர்ந்து பயணிக்க வைக்கின்றன," என்று கூறியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

ED: " நான் விளம்பரப்படுத்திய செயலி சட்டப்பூர்வமானது!" - விசாரணைக்குப் பிறகு விஜய் தேவரகொண்டா

ஆன்லைன் சூதாட்ட செயலிகளின் விளம்பரங்களில் நடித்ததாக விஜய் தேவரகொண்டா, ரானா டகுபதி, பிரகாஷ் ராஜ் உட்பட 29 நடிகர்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்திருந்தது. இந்த வழக்கின் விசாரணைக்காக நேரில் ஆஜரா... மேலும் பார்க்க

Kingdom: "முற்றிலும் கற்பனையே" - இலங்கைத் தமிழர்கள் சித்தரிப்பு சர்ச்சை; வருத்தம் தெரிவித்த படக்குழு

'ஜெர்சி' திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் கெளதம் தின்னனுரி இயக்கத்தில் உருவாகி வெளியாகியிருக்கிற தெலுங்குத் திரைப்படம் 'கிங்டம்'.விஜய் தேவரகொண்டா, பாக்யஶ்ரீ போஸ் உட்படப் பலரும் நடித்திருக்க... மேலும் பார்க்க

Shah Rukh Khan: "33 ஆண்டுக்கால பயணத்திற்குப் பிறகுக் கிடைத்த கௌரவம்" - அல்லு அர்ஜுன் வாழ்த்து

71வது தேசிய விருதுகள் நேற்றைய தினம் (ஆகஸ்ட் 1) அறிவிக்கப்பட்டன. தேசிய விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட கலைஞர்கள் பலரும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். சக கலைஞர்கள் அவர்களை வாழ்த்தி வருகின்றன... மேலும் பார்க்க

Kingdom Review: முதல் பாதி 'அதிரிப்போயிந்தி', 2ம் பாதி 'செதறிப்போயிந்தி' - எப்படி இருக்கு கிங்டம்?

1991-ல் போலீஸ் கான்ஸ்டபிளான சூரி (விஜய் தேவரகொண்டா),18 வருடங்களுக்கு முன் காணாமல் போன தன் அண்ணனைத் தேடும் பணியில் இருக்கிறார். அப்போது, அநியாயத்தைக் கண்டால் பொங்கும் குணம் கொண்ட கோபக்கார சூரி, உயர் அத... மேலும் பார்க்க

Kingdom: ``எனக்காக கேரவான் கதவுகள் திறக்கப்பட்டன!'' - வைரலாகும் `கிங்டம்' பட நடிகரின் பேச்சு!

'கிங்டம்' திரைப்படம் இன்று பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. விஜய் தேவரகொண்டா, பாக்யஶ்ரீ போஸ் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஹைதரா... மேலும் பார்க்க

Nagarjuna: "நாகர்ஜூனா, என் கன்னத்தில் 14 முறை அறைந்தார்..!" - நடிகை ஓப்பன் டாக்!

'என் சுவாசக் காற்றே', 'நெஞ்சினிலே' ஆகியத் திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமான நடிகை இஷா கோபிகர் தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் தடம் பதித்தவர். இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில... மேலும் பார்க்க