செய்திகள் :

`ஆணவக் கொலைக்கு எதிராக தனிச்சட்டம்..!' - திமுக கூட்டணிக் கட்சிகளை வலியுறுத்தும் நயினார் நாகேந்திரன்

post image

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் சட்டமன்றத் தொகுதியின் பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் மத்திய அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் ஒன்று சேர்க்க வேண்டும். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பணியையும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் செய்ய வேண்டும் எனவும் கூறினார். பின், அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

இக்கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறுகையில், ”கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு தலா 10 லட்ச ரூபாய். திருப்பூரில் போலீஸ் எஸ்.ஐ வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிகழ்வில், அவரது குடும்பத்திற்கு தமிழக அரசு 30 லட்ச ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளது. இது போன்ற சம்பவங்களில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் நிதியுதவி வழங்குகிறாரே தவிர குற்றச் சம்பவங்களை கட்டுப்படுத்தவில்லை என்பது மிகவும் வருத்தமாக உள்ளது. தமிழகத்தில் அதிகரித்து வரும் ஆணவக் கொலைகளை தடுக்க தமிழக அரசு தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும் என நான் தான் முதலில் தெரிவித்தேன். இன்று திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் முதல்வரை சந்தித்து ஆணவ கொலைக்கு எதிராக தனிச்சட்டம் இயற்றி நிறைவேற்றி தரவேண்டும்” என்றார்.

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திமுக ஆட்சிக்கு நூற்றுக்கு 50 மார்க் வழங்கியுள்ளது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தவர், “அவரது கருத்துக்கு மாற்று கருத்து எதுவும் சொல்ல முடியாது. திமுக ஆட்சி மிக மோசமாக படு பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. போதைப் பொருள் கலாச்சாரம், பாலியல் வன்கொடுமைகள் தினசரி நடைபெறுகின்றன. தமிழகத்தில் சில அரசு மருத்துவமனைகளில் நாய் கடிக்கும், பாம்பு கடிக்கும் மருந்துகள் இல்லை என தகவல் வருகின்றன. அதே போல் பல மருத்துவமனைகளில் கட்டிடங்கள் அதிகமாக இருக்கிறது மருத்துவர்கள் இல்லை. இதனை மருத்துவ நல்வாழ்வுத்துறை அமைச்சர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்" என தெரிவித்தார்.

'இந்தியாவை விட, சீனா தான் ரஷ்யாவில் இருந்து அதிகம் இறக்குமதி செய்கிறது; ஆனால்...' - சசி தரூர்

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் 50 சதவிகித வரி குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூரிடம் கேட்கப்பட்டது. இதற்கு அவரது பதில்... "யுரேனியம், பல்லேடியம் போன்ற பல பொருள்களை அமெரிக்கா ரஷ்யாவில் இருந்து இறக்குமத... மேலும் பார்க்க

US Tarrif On India: 'இது ஒரு பிளாக்மெயில்; இதற்கு மோடி...' - ட்ரம்ப் வரி குறித்து ராகுல் காந்தி

ஆகஸ்ட் மாதத்தின் ஆரம்பத்தில் இந்தியா மீது 25 சதவிகித வரியை விதித்தது அமெரிக்கா. இப்போது அந்த 25 சதவிகிதத்தை 50 சதவிகிதமாக உயர்த்தி அறிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். ராகுல் காந்தியின் பதிவு இது ... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: சிந்து நதி டெல்டாவிலிருந்து 12 லட்சம் மக்கள் வெளியேற்றம்; எழுந்த அச்சம்- பின்னணி என்ன?

பாகிஸ்தானின் சிந்து நதி டெல்டா பகுதி, மக்கள் வாழத் தகுதியான இடமா எனக் கேள்வி எழுப்பும் வகையில் மிகப் பெரிய சிக்கலை சந்தித்து வருகிறது. இதில் இந்தியாவின் பங்கும் உள்ளது.பாகிஸ்தானின் தெற்கில் சிந்து நதி... மேலும் பார்க்க

இந்தியா மீதான வரியை 50 சதவிகிதமாக உயர்த்திய ட்ரம்ப்; இந்தியாவின் முதல் ரியாக்‌ஷன் என்ன?

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு ஏற்பட்ட இந்தியா - பாகிஸ்தான் மோதலை வர்த்தகத்தை முன்வைத்து நான்தான் முடிவுக்கு கொண்டு வந்தேன் எனத் தொடர்ச்சியாகக் கூறிவரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கடந்த சில நா... மேலும் பார்க்க

”பாஜக தலைவரான பிறகும் ஜெயலலிதா தொண்டர் மனநிலையில் இருக்கிறார் நயினார் நாகேந்திரன்”-டி.டி.வி.தினகரன்

திருவாரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அ.ம.மு.க செயல்வீரர்கள் கூட்டம் மன்னார்குடியில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக டி.டி.வி.தினகரன்... மேலும் பார்க்க