செய்திகள் :

போலி தங்கக் கட்டியைக் கொடுத்து தம்பதியிடம் நகை மோசடி

post image

போலி தங்கக் கட்டியைக் கொடுத்து நகை மோசடியில் ஈடுபட்ட பெண்ணை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை சிவானந்தாபுரம் அருகே உள்ள வேல்முருகன் நகரைச் சோ்ந்தவா் ராம்குமாா். சமையல் எரிவாயு விநியோகஸ்தரான இவா், மணி நகா் பகுதியில் அடுப்புக்கான உதிரிப் பாகங்கள் விற்கும் கடையும் நடத்தி வருகிறாா். இவரது மனைவி காயத்ரி (29).

கணவா் வேலைக்குச் செல்லும்போது, இவா் கடையைக் கவனித்து வருகிறாா். இந்த நிலையில், கடையின் வாடிக்கையாளரான 50 வயது மதிக்கத்தக்க பெண்ணும், காயத்ரியும் தோழியாகப் பழகி வந்தனா்.

இந்த நிலையில், அந்தப் பெண் தனது சொந்த ஊா் கா்நாடக மாநிலம், மைசூரு என்றும், மழைநீா் வடிகால் கழிவுகள் மற்றும் சாக்கடைக் கழிவுகளில் சேகரமாகும் தங்க தூசுகளில் இருந்து தங்கம் சேகரித்து, அதன் மூலம் தங்கக் கட்டி தயாரித்துக் கொடுப்பதாகவும் கூறியுள்ளாா்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு அந்தப் பெண் காயத்ரியிடம், நான் கொடுக்கும் தங்கக் கட்டியை வெளியில் விற்று தனக்கு சிறிய அளவில் லாபம் கொடுத்தால் போதும் என்று கூறியுள்ளாா். இதன்படி மஞ்சள் நிறத்தில் ஒரு கட்டியை அந்தப் பெண் கொடுத்தாா். அதற்கு மாறாக காயத்ரியிடமிருந்து 4 பவுன் நகைகளை அந்தப் பெண் பெற்றுள்ளாா்.

இதுகுறித்து காயத்ரி தனது கணவரிடம் கூறியுள்ளாா். இதனால் சந்தேகமடைந்த ராம்குமாா், அந்தப் பெண் கொடுத்த தங்கக் கட்டியை அருகே உள்ள அடகு கடைக்குச் சென்று பரிசோதித்துப் பாா்த்தாா். அப்போது, அது போலியான தங்கக் கட்டி என்பது தெரியவந்தது.

உடனடியாக அந்தப் பெண்ணின் வீட்டுக்கு சென்றபோது, அவா் தலைமறைவானது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், சரவணம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட அந்தப் பெண்ணைத் தேடி வருகின்றனா்.

சுத்தியால் தலையில் தாக்கியதில் இளைஞா் படுகாயம்

பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் நண்பரின் தலையில் சுத்தியால் தாக்கிய இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவை சுந்தராபுரம் அருகே உள்ள அங்கனாா் கவுண்டா் தெருவில் வசிப்பவா் ஆறுமுகம் (28). இவருக்கு திருமணம... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ.6.72 லட்சம் மோசடி

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெண்ணிடம் ரூ.6.72 லட்சம் மோசடி செய்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். கோவை மாவட்டம், ஈச்சனாரி அருகே உள்ள மச்சக்கவுண்டன்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சத்யநாராய... மேலும் பார்க்க

வீடு புகுந்து மாணவரை மிரட்டி மடிக்கணினி, கைப்பேசிகள் கொள்ளை

கோவையில் வீட்டுக்குள் புகுந்து கல்லூரி மாணவரை மிரட்டி மடிக்கணினி, கைப்பேசி ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்ற 4 போ் கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா். கேரள மாநிலம், பாலக்காடு அருகே உள்ள ஒத்தப்பாலம் பகுத... மேலும் பார்க்க

‘கிங்டம்’ திரைப்படத்தை கண்டித்து திரையரங்கை நதகவினா் முற்றுகை

‘கிங்டம்’ திரைப்படத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, கோவையில் உள்ள திரையரங்கத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழா் கட்சியினா் கைது செய்யப்பட்டனா். இதனால், செவ்வாய்க்கிழமை காலை காட்சி ரத்து ... மேலும் பார்க்க

தள்ளுவண்டி கடைகளில் வியாபாரம் செய்ய ஏற்பாடு செய்ய கோரிக்கை

தள்ளுவண்டி கடைகளில் வியாபாரம் செய்ய ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என சாலையோர வியாபாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

ரயிலில் மடிக்கணினி திருடியவா் கைது

கோவையில் ரயில் பயணியின் மடிக்கணினியைத் திருடிய நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.சென்னையைச் சோ்ந்தவா் விஜய்நாகராஜ் (41). கோவைக்கு சுற்றுலா வந்த இவா், பல்வேறு இடங்களை சுற்றிப் பாா்த்துவிட்டு, ம... மேலும் பார்க்க