செய்திகள் :

``மோடி பாபாவிடமிருந்து இதை வாங்கி வரவேண்டும்'' - ஏக்நாத் ஷிண்டே பேரன் வைத்த கோரிக்கை

post image

மகாராஷ்டிராவில் அக்டோபர் அல்லது நவம்பரில் உள்ளாட்சி தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தலில் மும்பை மாநகராட்சியை எப்படியும் பிடித்துவிடவேண்டும் என்பதில் பா.ஜ.க உறுதியாக இருக்கிறது. இதற்காக ஏற்கெனவே தேர்தல் வேலையை பா.ஜ.க தொடங்கி விட்டது.

இத்தேர்தலில் தங்களது சிவசேனா கட்சிக்கு கணிசமான இடங்களை பெற துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அடுத்தடுத்து டெல்லி சென்று பா.ஜ.க தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார். நேற்று மீண்டும் குடும்பத்தோடு டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்து பேசினார். பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தபோது அவருடன் மனைவி மகன், மருமகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆனால் ஏக்நாத் ஷிண்டேயின் 5 வயது பேரன் கலந்து கொள்ளவில்லை. இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஏக்நாத் ஷிண்டே, பேரன் ருத்ரன்ஷ் வீட்டில் விளையாடிக்கொண்டிருப்பதாகவும், வரும்போது போர் விமானங்களையும், பொம்மைகளையும் மோடி பாபாவிடமிருந்து வாங்கி வரவேண்டும் என்று கோரிக்கை வைத்தான் என்றார்.

அதனை கேட்டு பிரதமர் நரேந்திர மோடி சிரித்தார். பின்னர் பேட்டியளித்த ஏக்நாத் ஷிண்டே, எனது பேரனின் கோரிக்கை மிகவும் நல்லது. போர்விமானங்களை எங்களது போராட்டத்திற்கு (மகாராஷ்டிரா அரசியல், உள்ளாட்சி தேர்தல்) பயன்படுத்த முடியும்.

ஆப்ரேஷன் மகாதேவ் வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக பிரதமர் நரேந்திர மோடிக்கு நான் பகவான் சங்கரின் புகைப்படத்தை கொடுத்தேன். துணை ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளருக்கு சிவசேனா நிபந்தனையற்ற ஆதரவு கொடுக்கும். மகாராஷ்டிராவில் நடக்க இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் மகாயுதி கூட்டணி இணைந்து போட்டியிடும்'' என்று தெரிவித்தார்.

ஏக்நாத் ஷிண்டே

முதல்வர் தேவேந்திர பட்னாவிசுடன் கருத்து வேறுபாடு காரணமாகத்தான் அடிக்கடி டெல்லி வருகிறீர்களா என்று கேட்டதற்கு, அதனை மறுத்த ஷிண்டே மகாராஷ்டிரா நலனுக்காக நாங்கள் இணைந்து பணியாற்றுகிறோம் என்று தெரிவித்தார்.

கடந்த ஒரு மாதத்தில் ஏக்நாத் ஷிண்டே மூன்றாவது முறையாக டெல்லிக்கு வந்து பாஜக தலைவர்களை சந்தித்து பேசியுள்ளார்.

முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேயும் டெல்லிக்கு சென்றுள்ளார். அவர் டெல்லியில் நடக்கும் இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார். டெல்லியில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரை சந்தித்து பேசவும் திட்டமிட்டுள்ளார்.

ராமநாதபுரம்: எடப்பாடி பிரசாரத்தில் பிக்பாக்கெட்; கூட்டத்தில் பணத்தை இழந்த அதிமுகவினர் கவலை

ராமநாதபுரம் மாவட்டத்தில் எடப்பாடி பிரசாரம்அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பிரசார பயணம் மேற்கொண்டு வருகிறார்.இரண்டாம் கட்ட சுற... மேலும் பார்க்க

`மழை வெள்ளம் வந்து’ - காணாமல் போன 4,000 டன் நிலக்கரி குறித்து அமைச்சர் சொன்ன பகீர் பதில்

மேகாலயாவில் உள்ள டியன்கன் மற்றும் ராஜாஜு ஆகிய கிராமங்களில் இருந்த நிலக்கரி குடோனில் 4,000 டன் நிலக்கரியை சேமித்து வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலக்கரி சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் இருந்து எடுக்கப்பட்... மேலும் பார்க்க

மராத்தி பேசாதவர்களை அடித்து உதைக்கும் ராஜ் தாக்கரே கட்சி.. நடவடிக்கை எடுக்க அரசு தயங்குவது ஏன்?

மராத்தி பேசாதவர்கள் மீது தாக்குதல்..மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, மகாராஷ்டிராவில் வசிப்பவர்கள் கட்டாயம் மராத்தியில் பேச வேண்டும் என்று கூறி வருகிறார். இதற்காக அவரது கட்சி தொண்டர்கள்... மேலும் பார்க்க

``அதிமுக -பாஜக கூட்டணியில் விஜய், சீமான் இணையலாம்; ஆனால்..'' - பாஜக ராம சீனிவாசன் சொல்வதென்ன?

திண்டுக்கல், நத்தம் சாலையில் உள்ள பாஜக கட்சி அலுவலகத்தில் மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது, "திண்டுக்கல் மாவட்டம் பெருமாள் கோவில்பட்டியில் இரு தரப்பினரிடையே கடந... மேலும் பார்க்க

``திமுக `பாடி போன லாரி, டயர் போன பேருந்து' வண்டி ஓடாது..'' - ராஜேந்திர பாலாஜி விமர்சனம்

ராஜபாளையத்தில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற சுற்று பயணத்தின் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 7 அன்று விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: ``இந்தியை திணித்தால் பள்ளியை இழுத்து மூடுவோம்..'' - ராஜ் தாக்கரே

மகாராஷ்டிராவில் வசிக்கும் வெளிமாநிலத்தவர்கள் கட்டாயம் மராத்தி பேசவேண்டும் என்று மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கூறி வருகிறார். இந்தி பேசுபவர்களை அவரது கட்சியினர் அடித்து உதைத்து வருகி... மேலும் பார்க்க