செய்திகள் :

ஆபாச படம்: நடிகை ஸ்வேதா மேனன் மீது வழக்குப் பதிவு!

post image

பணம் சம்பாதிக்கும் நோக்கில் ஆபாச படக் காட்சிகளில் நடித்ததாக எழுந்த புகாரில், பிரபல நடிகை ஸ்வேதா மேனன் மீது எர்ணாகுளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

எர்ணாகுளம் தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மலையாள திரையுலகில் ரதிநிர்வேதம், களிமண், சால்ட் அண்ட் பெப்பர் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் ஸ்வேதா மேனன். தமிழிலும் சில திரைப்படங்களிலும், பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். 2018 ஆம் ஆண்டில், மோகன்லால் தொகுத்து வழங்கிய மலையாள ரியாலிட்டி தொலைக்காட்சி தொடரான பிக் பாஸிலும் பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில், கொச்சியை சேர்ந்த மார்ட்டின் என்ற சமூக ஆர்வலர் ஸ்வேதா மேனனுக்கு எதிராக கொச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் நடிகை ஸ்வேதா மேனன் ரதிநிர்வேதம், பாலேரி மாணிக்கம், களிமண் போன்ற மலையாள திரைப்படங்களிலும், காமசூத்ரா போன்ற ஆணுறை விளம்பரத்திலும் ஆபாசமாக நடித்துள்ளார். பணம் சம்பாதிக்கும் நோக்கில் ஆபாச படக் காட்சிகளில் நடித்துள்ளதை சுட்டிக்காட்டி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இவரது புகார் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து எர்ணாகுளம் தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மனுவை விசாரித்த நீதிமன்றம் நடிகை ஸ்வேதா மேனன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள காவல்துறைக்கு உத்தரவிட்டது.

எர்ணாகுளம் நீதிமன்ற உத்தரவை அடுத்து கொச்சி போலீஸார் நடிகை ஸ்வேதா மேனன் மீது ஆபாசத் தடைச் சட்டம் மற்றும் ஐடி சட்டத்தின் கீழ் இரண்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்திற்கான நிர்வாகக் குழுவிற்கான தேர்தல் தேர்தல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு ஸ்வேதா மேனன் போட்டியிடுகிறார். தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த ஆறு பேர்களில் மூத்த நடிகர் ஜெகதீஷ் உள்பட நான்கு பேர் வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுள்ளனர்.

எனவே, இந்த தேர்தலில் ஸ்வேதா மேன்ன் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து ஸ்வேதா மேனன் இதுவரை எந்தவொரு அறிக்கையும் வெளியிடவில்லை.

நடிகை ரம்யா குறித்த விமா்சனம்: மேலும் ஒருவா் கைது

A case has been registered against model Shweta Menon for allegedly earning money via vulgar or obscene films.

ராஜஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.9 ஆகப் பதிவு

ராஜஸ்தானில் வியாழக்கிழமை காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் உயிர்ச் சேதம் அல்லது சொத்து சேதம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை. ராஜஸ்தானின் பிரதாப்கர் மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 10.7 மணிக்கு ல... மேலும் பார்க்க

யுபிஐ எப்போதும் இலவசமாகவே கிடைக்கும் என நான் கூறவில்லை: சஞ்சய் மல்ஹோத்ரா விளக்கம்

"யுபிஐ எப்போதும் இலவசமாகவே கிடைக்கும் என நான் ஒருபோதும் கூறவில்லை" என இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அளித்திருக்கும் விளக்கம் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி உள்ளது.... மேலும் பார்க்க

சிறப்பு உதவி ஆய்வாளா் வெட்டிக் கொலை: என்கவுன்டரில் மணிகண்டன் பலி

திருப்பூா்: மடத்துக்குளம் அதிமுக சட்டப் பேரவை உறுப்பினா் தோட்டத்தில் பணியாற்றி வந்த தந்தை, மகன்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக விசாரிக்கச் சென்ற காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் வெட்டிக் கொலை செய்யப்ப... மேலும் பார்க்க

'ரெப்போ ரேட்' வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி

மும்பை: வங்கிகளுக்கான குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவித்துள்ளார். 'ரெப்போ ரேட்' எனும் வங்கிகளுக்கான குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற... மேலும் பார்க்க

திருப்பூர் அருகே எஸ்.ஐ. வெட்டிக் கொலை: ரூ.1 கோடி நிதியுதவி

திருப்பூர் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல்(52)குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிதியுதவி அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம் உடு... மேலும் பார்க்க

பேரிடர் அபாயங்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்: சு.வெங்கடேசன் எம்.பி

உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் ஏற்பட்ட பெருமழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அதிர்ச்சியளிக்கிறது எனவும் பேரிடர் அபாயங்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன்... மேலும் பார்க்க