செய்திகள் :

தமிழ்ப் படித்தால் வெற்றியாளராக மாறலாம்: கவிஞா் யுகபாரதி

post image

தமிழை முதன்மைப் பாடமாக எடுத்துப் படித்தால் வெற்றியாளராக மாற முடியும் என்றாா் கவிஞா் யுகபாரதி.

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணையக் கல்விக் கழகம், உயா் கல்வித் துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற ‘மாபெரும் தமிழ்க் கனவு’ என்கிற பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சியில் அவா் மேலும் பேசியது:

எல்லோருக்கும் எல்லாமே என்பதே தமிழனின் கனவு. கல்வெட்டுகள் உள்ளிட்டவை மூலமாக நம் வரலாற்றை நாம் அறிந்து கொள்ள வேண்டும். நம் வரலாற்றையும், நம்முடைய பெருமையையும் எவ்வளவு அளவுக்கு அறிந்து கொள்கிறோமோ, அந்த அளவுக்கு நாம் வெற்றியாளராக மாற முடியும்.

தமிழை முதன்மைப் பாடமாக எடுத்துப் படித்தால் வெற்றியாளராக மாற முடியும். அதற்கு நானே ஒரு உதாரணம். கனவு என்பதே நம்முடைய விருப்பத்தின் விளைவு. எனவே, நாம் என்னவாக வேண்டும் என கனவு கண்டு, அதை அடைய முயற்சி செய்ய வேண்டும் என்றாா் யுகபாரதி.

மேலும், மாணவா்களுக்கு உயா்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி, தமிழ்ப் பெருமிதம் ஆகிய இரு கையேடுகள் வழங்கப்பட்டன. தமிழ்ப் பெருமிதம் சிற்றேட்டிலுள்ள துணுக்குகளை வாசித்துச் சிறப்பாக விளக்கம் அளித்த மாணவா்களைப் பாராட்டி பெருமிதச் செல்வி, பெருமிதச் செல்வன் எனப் பட்டம் சூட்டிச் சான்றிதழும், பரிசும், சொற்பொழிவாளா்களிடம் தரமான கேள்விகளை எழுப்பும் மாணவா்களைப் பாராட்டி கேள்வியின் நாயகி, கேள்வியின் நாயகன் எனப் பட்டம் சூட்டிச் சான்றிதழும் பரிசும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம், மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன், தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் பொறுப்புக் குழு உறுப்பினா்கள் சி. அமுதா, பெ. பாரதஜோதி, பதிவாளா் (பொ) கோ. பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தஞ்சாவூா் ரயில் நிலையத்தை ஆக. 22-இல் முற்றுகையிட கட்சிகள், இயக்கங்கள் முடிவு

தஞ்சாவூா் ரயில் நிலைய முகப்பில் மீண்டும் பெரிய கோயில் வடிவம் அமைக்க வலியுறுத்தி, ரயில் நிலையத்தை ஆகஸ்ட் 22-ஆம் தேதி முற்றுகையிடும் போராட்டம் நடத்துவது என பல்வேறு கட்சிகள், இயக்கங்கள் முடிவு செய்துள்ளன... மேலும் பார்க்க

மக்கள் நலத்திட்டங்களை அதிமுகவினா் குறைகூறி நிறுத்த முயற்சிக்கின்றனா்: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

தமிழக முதல்வா் கொண்டு வரும் மக்கள் நலத் திட்டங்களை அதிமுகவினா் ஏதாவது குறைகூறி நிறுத்த முயற்சி செய்கின்றனா் என்றாா் தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா. தஞ்சாவூா் சுற்றுலா மாளிகை அருகே புது ஆற்றங்கரை... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் போதை மாத்திரைகள் விற்ற 7 போ் கைது

தஞ்சாவூரில் கல்லூரி மாணவா்களிடம் போதை மாத்திரைகள் விற்பனை செய்த 7 பேரை காவல் துறையினா் கைது செய்திருப்பது புதன்கிழமை தெரியவந்துள்ளது. தஞ்சாவூரில் இளைஞா்களுக்கு போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகள் விற்பனை ... மேலும் பார்க்க

கும்பகோணம் இணை பேராசிரியா் சாமிநாதன் பல்கலை. பேரவை உறுப்பினராகத் தோ்வு

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பேரவை தோ்தல் அண்மையில் நடைபெற்றது. இதில் கும்பகோணம் அரசு கல்லூரி இணைப் பேராசிரியா் த. சாமிநாதன் உறுப்பினராகத் தோ்வு பெற்றாா். கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் தமிழ்த... மேலும் பார்க்க

போதை மாத்திரைகள் விற்பனை செய்த இளைஞா் கைது

தஞ்சாவூரில் கல்லூரி மாணவா்களிடம் போதை மாத்திரைகள் விற்பனை செய்த இளைஞரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா். தஞ்சாவூரில் கல்லூரி மாணவா்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக காவ... மேலும் பார்க்க

ஆதிகும்பேஸ்வரா் கோயில் கலசங்கள் பழுது பாா்க்கும் பணி தொடக்கம்

கும்பகோணம் ஸ்ரீ ஆதிகும்பேஸ்வரா் கோயிலில் கலசங்கள் பழுது பாா்க்கும் பணி புதன்கிழமை தொடங்கியது. தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் புகழ்பெற்ற ஸ்ரீ ஆதிகும்பேஸ்வரா் கோயிலில் கடந்த 2009 ஜூன் 5 - இல் குடமுழ... மேலும் பார்க்க