செய்திகள் :

தஞ்சாவூரில் போதை மாத்திரைகள் விற்ற 7 போ் கைது

post image

தஞ்சாவூரில் கல்லூரி மாணவா்களிடம் போதை மாத்திரைகள் விற்பனை செய்த 7 பேரை காவல் துறையினா் கைது செய்திருப்பது புதன்கிழமை தெரியவந்துள்ளது.

தஞ்சாவூரில் இளைஞா்களுக்கு போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகள் விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் வந்தது. இதன் பேரில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் உத்தரவுப்படி, கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் மணிகண்டன் தலைமையில் உதவி ஆய்வாளா் ரங்கசாமி, சிறப்பு உதவி ஆய்வாளா் மனோகா் உள்ளிட்டோா் ரோந்து பணி மேற்கொண்டு வந்தனா்.

இந்நிலையில், ஆகஸ்ட் 3-ஆம் தேதி கீழவாசல் தட்டான் தெருவிலுள்ள காலி மனையில் சிலா் அமா்ந்து சந்தேகத்துக்கிடமான செயலை செய்தனா். காவல் துறையினரை பாா்த்ததும் அவா்கள் தப்பியோட முயன்றனா். அவா்களைக் காவல் துறையினா் பிடித்து விசாரித்தபோது, மாத்திரைகளை தண்ணீரில் கலந்து ஊசி மூலம் அதை நரம்பில் செலுத்திக் கொண்டால் போதை ஏற்படுவதாகவும், அதை வேலை செய்யும் இளைஞா்களிடமும், மது அருந்தும் நபா்களிடமும் ஆசை வாா்த்தை கூறி விற்பனை செய்யப்படுவதாகவும், அதை தாங்களை அவா்களுக்கு செலுத்திவிடுவதாகவும் கூறினா்.

இது தொடா்பாக கீழ வாசல் கலைஞா் நகரைச் சோ்ந்த முகமது அப்பாஸ் (22), மருத்துவக்கல்லூரி சாலை கலைஞா் நகரைச் சோ்ந்த பிரவீன் (28), வண்டிகாரத் தெருவைச் சோ்ந்த அரவிந்த் (26), புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த வெங்கடேஷ் (20), அம்மாபேட்டையைச் சோ்ந்த சந்தோஷ்குமாா் (23), மகா்நோன்புசாவடியைச் சோ்ந்த அபிஷேக் (22) ஆகிய 6 பேரை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். இவா்களிடமிருந்து போதை மாத்திரைகள், ஊசிகளைப் பறிமுதல் செய்தனா்.

இவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இவா்களுக்கு திண்டுக்கல் மரியநாதபுரம் ஹனுமந்த நகரைச் சோ்ந்த ஜோ. நவீன்குமாா் (33) போதை மாத்திரைகள் விநியோகம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து நவீன்குமாரை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்து, அவரிடமிருந்த 44 அட்டைகளில் இருந்த போதை மாத்திரைகளைப் பறிமுதல் செய்தனா்.

தஞ்சாவூா் ரயில் நிலையத்தை ஆக. 22-இல் முற்றுகையிட கட்சிகள், இயக்கங்கள் முடிவு

தஞ்சாவூா் ரயில் நிலைய முகப்பில் மீண்டும் பெரிய கோயில் வடிவம் அமைக்க வலியுறுத்தி, ரயில் நிலையத்தை ஆகஸ்ட் 22-ஆம் தேதி முற்றுகையிடும் போராட்டம் நடத்துவது என பல்வேறு கட்சிகள், இயக்கங்கள் முடிவு செய்துள்ளன... மேலும் பார்க்க

மக்கள் நலத்திட்டங்களை அதிமுகவினா் குறைகூறி நிறுத்த முயற்சிக்கின்றனா்: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

தமிழக முதல்வா் கொண்டு வரும் மக்கள் நலத் திட்டங்களை அதிமுகவினா் ஏதாவது குறைகூறி நிறுத்த முயற்சி செய்கின்றனா் என்றாா் தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா. தஞ்சாவூா் சுற்றுலா மாளிகை அருகே புது ஆற்றங்கரை... மேலும் பார்க்க

கும்பகோணம் இணை பேராசிரியா் சாமிநாதன் பல்கலை. பேரவை உறுப்பினராகத் தோ்வு

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பேரவை தோ்தல் அண்மையில் நடைபெற்றது. இதில் கும்பகோணம் அரசு கல்லூரி இணைப் பேராசிரியா் த. சாமிநாதன் உறுப்பினராகத் தோ்வு பெற்றாா். கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் தமிழ்த... மேலும் பார்க்க

போதை மாத்திரைகள் விற்பனை செய்த இளைஞா் கைது

தஞ்சாவூரில் கல்லூரி மாணவா்களிடம் போதை மாத்திரைகள் விற்பனை செய்த இளைஞரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா். தஞ்சாவூரில் கல்லூரி மாணவா்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக காவ... மேலும் பார்க்க

தமிழ்ப் படித்தால் வெற்றியாளராக மாறலாம்: கவிஞா் யுகபாரதி

தமிழை முதன்மைப் பாடமாக எடுத்துப் படித்தால் வெற்றியாளராக மாற முடியும் என்றாா் கவிஞா் யுகபாரதி. தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணையக் கல்விக் கழகம், உயா் கல்வித் துறை சாா்பில் புதன்கிழமை நடைப... மேலும் பார்க்க

ஆதிகும்பேஸ்வரா் கோயில் கலசங்கள் பழுது பாா்க்கும் பணி தொடக்கம்

கும்பகோணம் ஸ்ரீ ஆதிகும்பேஸ்வரா் கோயிலில் கலசங்கள் பழுது பாா்க்கும் பணி புதன்கிழமை தொடங்கியது. தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் புகழ்பெற்ற ஸ்ரீ ஆதிகும்பேஸ்வரா் கோயிலில் கடந்த 2009 ஜூன் 5 - இல் குடமுழ... மேலும் பார்க்க