செய்திகள் :

இன்னும் நிறைய பார்க்கப் போகிறீர்கள்! இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

post image

இந்தியாவுக்கு எதிராக இன்னும் பல நடவடிக்கைகளை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வர்த்தகம் மேற்கொண்டதால், இந்தியாவுக்கு 25 சதவிகிதம் வரி விதித்து டிரம்ப் உத்தரவிட்டார்.

இதனிடையே, ரஷியாவுடன் வர்த்தகத்தை நிறுத்திக் கொள்வதாக இந்தியா அறிவிக்காததால் ஆத்திரமடைந்த டிரம்ப், அமெரிக்காவுக்கு இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு விதிக்கப்படும் வரியை 50 சதவிகிதமாக உயர்த்தி புதன்கிழமை உத்தரவிட்டார்.

டிரம்ப்பின் இந்த அறிவிப்பு நியாமற்ற மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பின்போது, இந்தியாவைப் போன்று பல நாடுகள் ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குகிறார்கள், ஆனால் இந்தியாவை மட்டும் குறிவைப்பது ஏன்? என்று டிரம்ப்பிடம் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த டிரம்ப், “இந்தியாவுக்கு வரி விதிக்கப்பட்டு 8 மணிநேரம் தான் ஆகிறது. என்ன நடக்கப் போகிறது என்பதை பார்ப்போம். இன்னும் பல நடவடிக்கைகளை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள். பல இரண்டாம் நிலைத் தடைகளை பார்க்கப் போகிறீர்கள்.

ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் பெறும் சீனா மீது அமெரிக்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்கக்கூடும்” எனத் தெரிவித்துள்ளார்.

US President Donald Trump on Wednesday warned that you are going to see more actions against India.

இதையும் படிக்க : இந்தியாவுக்கு மேலும் 25%... மொத்தம் 50% வரி: டிரம்ப்

வங்க மொழி சர்ச்சை: நீண்ட பதாகைகளுடன் போராடிய கால்பந்து ரசிகர்கள்!

தில்லி காவல் துறையின் வங்கதேச மொழி சர்ச்சைக்கு ஈஸ்ட் பெங்கால் கால்பந்து ரசிகர்கள் மிகப்பெரிய பதாகைகளை காண்பித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். மத்திய உள்துறை அமைச்சரவையின்கீழ் இயங்கும் தில்ல... மேலும் பார்க்க

வெளியுறவு கொள்கையின் பேரழிவு! கார்கே

இந்தியா மீதான கூடுதல் வரி விதிக்கப்பட்டிருப்பது வெளியுறவு கொள்கையின் பேரழிவு என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெ... மேலும் பார்க்க

திருப்பதி அறக்கட்டளைக்குத் தொழிலதிபர் ரூ.1 கோடி நன்கொடை!

திருமலை திருப்பதியின் எஸ்.வி பிராணதான அறக்கட்டளைக்குத் தொழிலதிபர் ஒருவர் ரூ. 1 கோடி நன்கொடை அளித்துள்ளார். தொழிலதிபரான சிராக் புருஷோத்தம், வருவாய் அமைச்சர் ஏ. சத்ய பிரசாத் உடன் திருமலை திருப்பதி தேவஸ்... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில் சிஆர்பிஎஃப் வீரர்களின் வாகனம் விபத்து! இருவர் பலி!

ஜம்மு - காஷ்மீரில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை (சிஆர்பிஎஃப்) வீரர்கள் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில் இரண்டு வீரர்கள் பலியாகியுள்ளனர்.ஜம்மு - காஷ்மீர், உதம்பூர் மாவட்டத்தின் கட்வாவில் இருந்து பசந்... மேலும் பார்க்க

மாணவர்களுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடிய தில்லி முதல்வர்!

தில்லியைப் பாதுகாப்பதும் அதன் முன்னேற்றத்திற்காக உழைப்பது தனது பொறுப்பு என்று முதல்வர் ரேகா குப்தா வியாழக்கிழமை தெரிவித்தார்.ஜன சேவா மையத்தில் நடந்த ரக்ஷா பந்தன் நிகழ்வில் முதல்வர் கலந்துகொண்டார். அங்... மேலும் பார்க்க

நீதிபதி யஷ்வந்த் வா்மா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!

நீதிபதி யஷ்வந்த் வர்மா தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.தில்லி உயா்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வா்மா பதவி வகித்தபோது, அவரது வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டறி... மேலும் பார்க்க