செய்திகள் :

கவின் கொலை: சிபிசிஐடி காவலுக்கு சுர்ஜித், தந்தை சரவணன் தரப்பு எதிர்ப்பு

post image

சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணன் இரு வரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸாரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு இருவரது சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலியில் ஐடி ஊழியர் கவின் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கே.டி.சி. நகரைச் சேர்ந்த சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணன் இரு வரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸார் தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

கவின் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணன் ஆகிய இருவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஐ.டி. ஊழியரான கவின் செல்வகணேஷ்(27), பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் கடந்த ஜூலை 27ஆம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவரது காதலியின் தம்பி சுர்ஜித் கைது செய்யப்பட்டார். காவல் உதவி ஆய்வாளர்களான அவரது தந்தை சரவணன், தாய் கிருஷ்ணகுமாரி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இதையடுத்து ஜூலை30-இல் கைது செய்யப்பட்ட சரவணனுக்கு ஆக.8 வரையும் சுர்ஜித்துக்கு ஆக.14 வரையும் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகுமாரி ஆக.15-க்குள் சிபிசிஐடி காவல்நிலையத்தில் ஆஜராக வேண்டுமென சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவ்வழக்கில் 8 வாரங்களுக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டதையடுத்து, பாளையங்கோட்டை காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் முருகன் மற்றும் ஒரு காவலரிடம், சிபிசிஐடி போலீஸார் புதன்கிழமை விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், சுர்ஜித், அவரது தந்தை சரவணன் ஆகிய இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிசிஐடி காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜ்குமார் நவ்ரோஜ், காவல் ஆய்வாளர் உலகராணி தரப்பில் திருநெல்வேலி மாவட்ட 2-ஆவது கூடுதல் அமர்வு (வன் கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றம்) நீதிமன்றத்தில் புதன்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இவ்வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்த நிலையில் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க சுர்ஜித் மற்றும் சரவணன் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் வருகின்ற 11ஆம் தேதி வழக்கு விசாரணை ஒத்திவைத்து நீதிபதி ஹேமா உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து சுர்ஜித் மற்றும் எஸ்ஐ சரவணன் ஆகிய இருவரும் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டனர்.

கருணாநிதி நினைவு நாள்: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி!

மறைந்த திமுக தலைவா் கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்று வருகின்றது.முன்னாள் முதல்வா் கருணாநிதியின் ஏழாவது ஆண்டு நினைவு நாள் இன்று கடைப... மேலும் பார்க்க

கலைஞர் ஒளியில் வெற்றிப் பாதையில் நடைபோடுவோம்! முதல்வர் ஸ்டாலின்

கலைஞரின் ஒளியில் ’எல்லார்க்கும் எல்லாம், எதிலும் தமிழ்நாடு முதலிடம்’ எனும் இலக்கை நோக்கி வெற்றிப்பாதையில் நடைபோடுவோம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.திமுகவின் முன்னாள் தலைவரும் தம... மேலும் பார்க்க

4 ஆண்டுகளில் அரசு, தனியாா்கள் மூலம் 6.41 லட்சம் பேருக்கு வேலை -முதல்வா் மு.க.ஸ்டாலின்

நான்காண்டு திமுக ஆட்சியில் அரசு மற்றும் தனியாா்கள் மூலமாக 6.41 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையின... மேலும் பார்க்க

முதல் சுற்று மருத்துவ கலந்தாய்வு: அவகாசம் மீண்டும் நீட்டிப்பு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான முதல் சுற்று மாநிலக் கலந்தாய்வில், கல்லூரிகளைத் தோ்வு செய்வதற்கான அவகாசம் வரும் 12-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நீட... மேலும் பார்க்க

காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் கொலை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

திருப்பூா் மாவட்டத்தில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி, தமிழக பாஜக தலைவா் உள்ளிட்டோா் கண்டனம் தெரிவித்துள்ளாா். எடப்பாடி பழனிசாமி... மேலும் பார்க்க

அஜித் குமாருடன் கைகோக்கும் நரேன் கார்த்திகேயன்!

அஜித்குமார் ரேஸிங்கில் கார் ஓட்டுநராக தமிழகத்தைச் சேர்ந்த நரேன் கார்த்திகேயன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் குமார் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி, கார் ர... மேலும் பார்க்க