செய்திகள் :

டிஆர்டிஓ-இல் ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு அப்ரண்டிஸ் பயிற்சி

post image

மைசூரில் செயல்பட்டு டிஆர்டிஓ-இன் தற்காப்பு உயிரியல் பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனத்தில் 2025-26 ஆம் ஆண்டுக்கான தொழில்பழகுநர் பயிற்சிக்கு டிப்ளமோ மற்றும் ஐடிஐ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். DIBT/HRD/APPR-01/2025-26

பயிற்சியின் பெயர்: Diploma Apprentice

காலியிடங்கள்: 8

1. Mechanical - 4

2. Electrical - 4

தகுதி : Mechanical /Electrical பாடப்பிரிவில் டிப் ளமோ எஞ்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

பயிற்சியின் பெயர்: Trade Apprentice

காலியிடங்கள்: 12

1. Machinist - 5

2. Fitter- 3

3. Electrician - 4

தகுதி: காலியிடங்கள் ஏற்பட்டுள்ள ஏதாவதொரு டிரேடில் ஐடிஐ முடித்து என்சிவிடி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

உதவித்தொகை: பயிற்சியின் போது ஐடிஐ முடித்தவர்களுக்கு மாதம் ரூ.7,000 மற்றும் டிப்ளமோ முடித்தவர்களுக்கு மாதம் ரூ.8,000 வழங்கப்படும்.

மேற்கண்ட அனைத்து பயிற்சிகளுக்கும் 2023-க்கு பிறகு படிப்பை முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: மேற்கண்ட இரண்டு பயிற்சிகளுக்கும் 31.7.2025 தேதியின்படி 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஐடிஐ, டிப்ளமோ படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர். இதற்காக நேர்முகத் தேர்வு நடத்தப்படும். இது பற்றிய விபரங்கள் தகுதியானவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப் படும்.

விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட அப்ரண்டிஸ் பயிற்சியில் சேர டிப்ளமோ முடித்தவர்கள் தங்களுடைய கல்வித்தகுதி பற்றிய விபரங்களை www.nats. education.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளவும். அதேபோல ITI முடித்தவர்கள் www.apprenticeshipindia.org என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளவும். பின்னர் அதே இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அப்ரண்டிஸ் பயிற்சி வழங்கப்படும் நிறுவனங்களின் பட்டியலிலிருந்து DRDO நிறுவனத்தை தேர்வு செய்து, DRDO இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து மின்னஞ்சல் மூலமாக அனுப்பவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 15.8.2025

மேலும் கூடுதல் விபரங்களுக்குஇங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

ரூ.3 லட்சம் சம்பளத்தில் மாலுமிப் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

DEFENCE INSTITUTE OF BIODEFENCE TECHNOLOGIES (DIBT), Mysore invites applications from eligible candidates for Diploma and ITI Apprenticeship Training for the Year 2025-26

ஆரம்ப சுகாதார மையங்களில் பாராமெடிக்கல் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் காலியாகவுள்ள பாராமெடிக்கல் பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி: Staff Nurseகாலியிடங்கள்: 93சம்பளம்: மாதம் ரூ.18,000தகுதி : நர்சிங் பிரிவி... மேலும் பார்க்க

மிஸ்பண்ணிடாதீங்க... எய்ம்ஸ்-இல் 3,500 நர்சிங் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

நாடு முழுவதும் உள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் காலியாக உள்ள 3,500 செவிலியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்த... மேலும் பார்க்க

ரூ.3 லட்சம் சம்பளத்தில் மாலுமிப் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

சென்னையில் உள்ள காமராஜர் துறைமுகத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள மாலுமி பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் வரும் 12 ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்... மேலும் பார்க்க

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் வேலை: காலியிடங்கள்: 105

சேலம் மாவட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும். இது பற்றிய ... மேலும் பார்க்க

பெண்கள் சேவை மையத்தில் சமூகப் பணியாளர், ஐடி உதவியாளர் வேலை!

மத்திய அரசால் முன்மொழியப்பட்ட சிறப்பு திட்டமான சகி(SAKHI) என்ற திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்திலுள்ள ஒருங்கிணைந்த பெண்கள் சேவை மையத்தில் காலியாகவுள்ள கீழ்க்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து... மேலும் பார்க்க

மத்திய அரசுத் துறைகளில் அதிகாரிப் பணி: யுபிஎஸ்சி அறிவிப்பு

மத்திய அரசின் கீழுள்ள பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 230 அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள... மேலும் பார்க்க